Friday, February 27, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 பட்டுப் புடவைகளும் 

தங்க நகைகளும்

சீர் வரிசைகளும்

கொடுத்து அனுப்பும்

இடத்தில் 

கண்ணீர் அடைக்கலம் விழியோரம்

பாசம் மட்டும் மனதோரம்  

புதிய இடத்தில்

புதிய ஸ்பரிசத்தில்

புதிய காதலில் 

எல்லாம் மாறும்

பெண்ணின் உள்ளத்தில்

அவள் பிறந்த இடத்தை

நினைப்பதும் மறப்பதும்

கைபிடித்தவன் கரங்களிலே


 பொருள் கொடுத்து

குணம் தேட

வியாபாரம் அல்ல 

இது விவாகம் 

இன்னாருக்கு இன்னாரே 

என்ற சடங்கில்

கொண்ட நம்பிக்கை

 யாவும் புதிதில் 

விரசம் அறியா

மனங்கள் பந்தாட 

பழக பழக

குணங்கள் வெளிப்பட 

அவரவர் தவறுகள் அறியப்படுவதும் 

திருத்தப்படாமல் போவதும்

தானோ வாழ்க்கை?

அல்ல ! அல்ல!

பாந்தமாய் சாந்தமாய்

காதலாய் பாசமாய்

எதுவும் ஒன்றையொன்று

பிணைந்து காட்டுவதே 

திருமண பந்தம்

யார் ஏற்றி விட

யார் வீழ

என்று நினைக்க

போட்டிக்களம் அல்ல

பொதிந்த அன்பில்

பிரிவு கொள்ளா

நிலையில் அனுசரணையால் 

இருவரும் அரவணைக்க

அதில் பெறும் மகிழ்ச்சி

கோடி கோடி

இதை அறியாதவர்

வாழ்வும் தெருக்கோடியிலே

- Veena 

இது சந்தையும் அல்ல,

விலைபோக பொருளும் அல்ல..

ஒத்தை வார்த்தை வரக்கூடாது,

பட்டுப்போனால் தன் காலில் நிற்க 

தந்தவை ...

 இருந்தாலும் அவரின்

 ருசிக்கு எப்படி மாற ...பலவருடம்

 வளர்த்து சட்டென அறுக்க

 நினைத்தால் ,என்ன கொடுமை!

 உணர்ச்சியின் பிடி விலக சாயம்

 போகும்,எதை கொடுத்தும்

 எவரையும் நிரப்ப முடியா...

அன்பை ,பண்பை,உறவை,

பழக்கத்தை சரிபாதி பரிமாற்ற

 நிலைக்கும் பந்தம்,முதலில்

 கர்வத்தை விட எல்லாம்

 சமம்,கல்வியை விட சிறந்தது

 இல்லை சீராக கொடுக்க!

-Vidhya

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...