Tuesday, February 17, 2026

எனக்கு மட்டும் ஏனோ? by Veena Shankar

 


இன்றைய நகைச்சுவை


எனக்கு மட்டும் ஏனோ?


ஒருநாள் கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். நான் போடும் தேநீரைக் காட்டிலும் நாயரின் கைமணம் அருமை. அப்போது அலைபேசியில் பேசியவாறே வந்த ஒருவர் தனக்கும் ஒரு தேநீர் கொடுக்குமாறு சைகையில் கடைக்காரரை பார்த்து சொல்ல, நம்ம நாயரும் தேநீர் போட தயாரானார். தேநீர் வரும் வரை பேசிக் கொண்டிருந்தவர் பேச்சின் இடையே "அந்த சோத்துல பாரு! என்று சொல்ல, இல்லையே என்று எதிர்முனையில் பேசியவர் சொல்ல, "நல்லா பாரு சோத்துல தான் எழுதியிருப்பேன். நேத்துக் கூட பார்த்தேனே! நான் எழுதி வச்ச நம்பரை" என்று சொல்ல, வழக்கமாக உருவில் சிறிய மூளைக்கு அதிபதியான நான் சோத்துல இவர் எப்படி எழுதுவார்? என்ற மனக்குழப்பத்தில் இருக்க, "இல்லப்பா! இன்னிக்கி என் பேரன் கடைக்கு வரல, அவன் ரப்பர் வச்சும் எதையும் அழிக்கல" என்றார் . 


இப்போது தான் நான் சுதாரித்துக் கொண்டேன். என் செவிகள் இரண்டும் தொலைவில் இருப்பதை உணர்ந்தேன். மொழியின் அறிவு எனக்கு குறைவே. 


அவர் குறிப்பிட்ட "சோத்துல" என்ற சொல் தூய தமிழில், அதாவது "சுவற்றில்" என்று கொள்ள வேண்டும் என்று என் அறிவுக்கு எட்டியது 


ஏன் ? எனக்கு மட்டும் ஏன்? என்று நகைத்தவாறே நகர்ந்தேன் நான்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...