Wednesday, February 4, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


தெருவோர வித்தை போல்

ஆடியது நெஞ்சங்கள்

காதலால்

வித்தை முடிந்து கீழிறங்கிய பின்னே

காசு கேட்கும்

வித்தை போல்

காதலும் கேட்டது

விலைமாதுவின் வாழ்விற்காக

விலை கொடுத்தவனின் உணர்ச்சிக்காக


ஆனந்தம் எங்கே?

ஊசலாடும் கயிற்றிலா?

கழுத்தில் ஏறிய கயிற்றினாலா?

எங்கும் கரங்கள்

மட்டும் விரிக்க

அடைபடுவதும் எதுவோ?

வாழ்வும் வழியும் ஒன்றானால்

அன்பும் அரவணைப்பும்

ஒன்றாகும்

எதுவும் கடமை

இங்கே

வயிற்று பசியாற்ற 

ஒன்று

உடல் பசியாற்ற மற்றொன்று

இரண்டிலும் 

அடைபட்டு நின்றது

இளகிய மணமுடைய 

பெண்ணினமே!

- Veena 

ஒரு சாண் வயிற்றுக்கு காட்டிய

 வித்தை,ஆட்டம் முடிந்ததும்

 கலைந்த கூட்டம் ,தினம் தினம்

 படும் வேதனை,என்று கழியுமோ

 இந்த கோலம் ,உடலிலும்,

மனதிலும் வலுவுள்ள

 வரை,நம்மோடு முடியட்டும் இந்த

 ஆட்டம்,யாருக்கும் வேண்டாம் இந்த

 நிலை!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...