தெருவோர வித்தை போல்
ஆடியது நெஞ்சங்கள்
காதலால்
வித்தை முடிந்து கீழிறங்கிய பின்னே
காசு கேட்கும்
வித்தை போல்
காதலும் கேட்டது
விலைமாதுவின் வாழ்விற்காக
விலை கொடுத்தவனின் உணர்ச்சிக்காக
ஆனந்தம் எங்கே?
ஊசலாடும் கயிற்றிலா?
கழுத்தில் ஏறிய கயிற்றினாலா?
எங்கும் கரங்கள்
மட்டும் விரிக்க
அடைபடுவதும் எதுவோ?
வாழ்வும் வழியும் ஒன்றானால்
அன்பும் அரவணைப்பும்
ஒன்றாகும்
எதுவும் கடமை
இங்கே
வயிற்று பசியாற்ற
ஒன்று
உடல் பசியாற்ற மற்றொன்று
இரண்டிலும்
அடைபட்டு நின்றது
இளகிய மணமுடைய
பெண்ணினமே!
- Veena
ஒரு சாண் வயிற்றுக்கு காட்டிய
வித்தை,ஆட்டம் முடிந்ததும்
கலைந்த கூட்டம் ,தினம் தினம்
படும் வேதனை,என்று கழியுமோ
இந்த கோலம் ,உடலிலும்,
மனதிலும் வலுவுள்ள
வரை,நம்மோடு முடியட்டும் இந்த
ஆட்டம்,யாருக்கும் வேண்டாம் இந்த
நிலை!
- Vidhya

No comments:
Post a Comment