வண்ணங்களின் சங்கமம்
எதற்காக இங்கே?
பண்டிகை கொண்டாடவா?
வாசலில் கோலமிடவா?
மனதின் கோலத்தை
வெளிப்படுத்தவா?
அதனதன் சிறப்பை
வெளிக்காட்டவா?
மனிதர்களின் நிறம்
காணவா?
இதில் சமாதானத்தின்
நிறம் மட்டும் அமைதியாய்
உள்ளது
எட்டா உயரத்தில்
- Veena
வண்ணங்களே எண்ணங்களின்
கோர்வை ,
வண்ணத்தை கன்னத்தில் ஓட்டி
விளையாட கெஞ்சும் கூட்டம் ,
சிந்திய வண்ண கலவையில்
மண்ணும் மின்னும் , மகிழ்ச்சியின்
வெளிப்பாடு வண்ணங்கள்!
- Vidhya

No comments:
Post a Comment