மனம் புண்பட்ட நேரத்தில் கூட
அதை இதமாக்க
பதப்பட்ட இலைகளால்
தயாரிக்கப்பட்ட தேநீர்
மெல்ல இறங்கும்
தொண்டையின் வழியே
புது உற்சாகம் பிறக்க
அவாவினால் பிறந்த தேநீரின் ஆவி
என் ஆவி குளிர வைத்து
அவாவினை நிறைவேற்றியது
ஆசையின் விளைவு
" சரி! இந்த பேச்சை இத்தோடு விடு" என்று சொல்லி விருட்டென்று எழுந்து அறைக்குள் போனான் விமல். " இப்ப என்ன சொல்லிட்டேன்? எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. என் வேலையும் கெடுது. கொஞ்சம் நான் கேரியர்ல மேலே வந்துக்கிறேனே? உங்களால எல்லாம் சிறப்பா செய்ய முடியும். ஆனால் நீங்க செய்யறது இல்லை நான் கொஞ்சம் ஸ்லோ தான். " என்று சத்தமாய் கத்தினாள் சுஜாதா.
"நீ என்ன கத்தினாலும் சரி, நீ பண்ணினது தப்புதான். என்ன கேட்டுட்டேன் பெரிசா?" என்று பதிலுக்கு உள்ளிருந்தபடியே தான் தப்பு செய்ததாக எண்ணி தன் அம்மாவை மனதால் கடிந்து கொண்டான்.
பொண்ணு பார்க்க வரும்போதே இந்த கண்டிசன் போட்டு சரின்னு சொன்னா மட்டுமே கல்யாணம் பண்ணிக்குவேன் என்று சொல்லி இருந்தான் விமல்.
"அதெல்லாம் போக போக சரியாயிடும் ன்னு என்கிட்ட சமாதானம் சொன்னாங்க அம்மா. அதுவுமில்லாம அவ சின்ன பொண்ணுதானே, உன் ஆசையை தள்ளி வைத்து அவ ஆசைப்படி கொஞ்ச நாள் பொறுத்துக்கோ என்று தன் வருங்கால மருமகளுக்கு வக்காலத்து வாங்கினாள்" என்று மறுபடியும் விமல் சுஜாதா மேல் எகிற,
" எனக்கு தெரியும் . இந்த ஆம்பளைங்களால ஆசையை அடக்கவே முடியாது" என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்கு போனாள். ஏதேதோ உருட்டும் சத்தம் கேட்டது.
"இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!" என்றபடி இரு கோப்பையில் தேநீரை கொண்டு வந்து விமல் பக்கம் வைத்தாள் சுஜாதா. "இதை நான் கேட்கும் போதே செய்திருக்க வேண்டியது தானே?" என்றபடி இரு கப்பில் எதில் அதிகம் தேநீர் இருக்கிறது என்று ஆராய்ந்து அதை எடுத்தான் தேநீர் பிரியரான விமல்.
- Veena
உனக்கும் எனக்கும் மட்டுமே உரையாடல்,
அது ஒரு தவம்
தடங்கல் கூடாது
மௌன மொழி வழி
விழிகள் மூடி
உன்னை பருக
கிடைக்கும் புத்துணர்ச்சி
- Vidhya

No comments:
Post a Comment