அன்பின் வழியில்
எதுவும் இன்பமே!
அறிந்தவர் நோக்கத்தில்
எதுவும் இயல்பே!
மனதால் கொண்ட சிநேகம்
காலத்தால் பேசப்படும்
அறிவு பேசப்படா நேரத்தில்
அன்பின் மொழி மட்டுமே
இயம்பும் வார்த்தை நீங்கலாக
யாருக்கு யார் சொல்வது நன்றி?
ஒருவேளை உணவு கொடுத்ததற்கு
ஞமிலி
குழந்தைக்கு சொல்லும் நன்றியா?
தன் தனிமை போக்கியவனுக்கு
குழந்தை
சொல்லும் நன்றியா?
இல்லை கூட்டு சேர்ந்து
அடுத்தவரை கவிழ்த்த நினைக்கும் சங்கதியா?
இருக்காது
இருவர் மனதிலும்
வஞ்சம் இல்லை
வயதின் கண்
நட்பு ஒன்றே பிரதானம் என்றும்
இவர்கள் மனதிற்குள்
- Veena
God bless you!
நல்ல ஓடியாடி விளையாடு என்னை
விட்டுவிடு நிறைய வேலையிருக்கு
முதல்ல அந்த ரீல்ஸ்
முடிக்கணும் இல்லே ஜீலி
திட்டுவா!
இவங்க கூட சேர்ந்து வாக்கிங் கூட
போக முடியல ஒண்ணு மழை,
ஆன்லைன் கிளாஸ் வேற,
வளர்ந்துவிடாதே வீட்டு
செல்லப்பிள்ளையா இருந்து விடு
இல்ல ,புலம்பியபடி கடவுளை
கூப்பிட வேண்டும்,அவரும் பிஸி
எத்தனைய தீர்ப்பாரு!
இன்றைய முக்கிய செய்திகள்
என்று 24/7 😇 கடைசில என்னையும்
அவங்க மாதிரி ஆக்கிட்டாங்க 🙄
- Vidhya

No comments:
Post a Comment