Friday, March 27, 2026

படமும் கருத்தும் by winmeengal

 


Veena Shankar: 

உன் வாழ்வும் மரணமும் 

என் கையில்

நிலத்தில் வந்த 

உன் உயிர் மீண்டும்

 நீரை அடையும் வரை


 வகை வகையாய் நீர்நிலைகளில்

வளர்கிறாய்

அலங்காரமாய் தொட்டியில் நீந்துகிறாய்

 இறந்தும் கண் விழிக்கிறாய்

பசி ஆற்றுகிறாய்

மனிதனுக்கு மருந்தாகிறாய்

அழகாய் இருக்கும்

உன்னை ஆவலாய் உண்ண நினைக்கிறேன்

நான் காகை கூட்டமல்ல 

ஒன்றிணைந்து தின்ன

என் தேவை போய்

எவரும் ருசிக்கலாம்

உன்னை யாரும்

ருசிக்கும் வேளையில்

உன் பெரிய இனமும்

கடலில் மனிதனை

பதம் பார்க்கிறது

உன்னை உண்டு 

நான் சிறக்க

மனிதனை உண்டு

நீயும் பசியாருகிறாய்


 Akhila : 

*பூனையின் mind voice🤔*


இது....

நிஜ மீனா? AI மீனா??🤔


கண் முன்னே...

என் முன்னே...

கைக்கெட்டும் தூரத்தில்!

ஆயினும், நான் தொட மாட்டேன்‍‍ - நீ 

என் இரை அல்ல; ‍ 

நான் உன்னை வேட்டையாடவில்லை

யாரும் சாட்சி இல்லை தான்‍ - ஆயினும்

என் மனசாட்சிக்குத் தெரியும்!

Vidhya:

உனக்கும் பசி எனக்கும்

கண்கள் நோக்க

மனிதாபிமானமா, சுயநலமா

எது வெல்லும்?

இரண்டில் ஒன்று  விட்டுக்கொடுக்க

ஒன்று வெல்லும் 

 இல்லையேல் இரண்டும்

 மடியும்!


 



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...