Thursday, March 27, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 மீட்டும் விரல்கள்

 மட்டுமே அறியும்

சுவரத்தின் லயத்தை 

மனதின் பிரதிபலிப்பாய்


மீட்டும் விரல்களில் மிரட்டும் சுவரங்கள் 

அழகே!

மீளும் அமைதி அழகே!

மீறும் மனமும் அழகே!


 கம்பிகளின் அமைப்பில் தந்திரமா?

கைவிரல்களில் படைக்கும் மந்திரமா?

யாரையும் அணைக்கும் சுதந்திரமா?

மீட்டும் பாவையும் இயந்திரமா?

மெய் மறக்க கண்களும் அயர்ந்திடுமா ?

கேட்ட பின் ஆசையும் உயர்ந்திடுமா?

கம்பிகள் பற்றிய விரல்களை

 மென்மையாய் பற்ற விரைந்திடுமா?

- Veena 

விரல் நரம்பை மீட்ட காத்திருக்கும்

 வீணாபதி..

விரலுக்கு  வலிக்காமல்

 நரம்புக்கும் வலிக்காமல்

 உருவான பிள்ளை எல்லோர்

 காதுகளிலும் ஊடுருவ

 பிறக்கும் இசையாக.. 

மிகுந்த வலியோடு வெடிக்கும்

 முத்தாக மனதில் ..

- Vidhya 

Wednesday, March 26, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 எறும்பின் பயணத்திற்கு

 ஓடமானது இலை

மரம் வளர்ந்த பின்

ஓடமாவது அல்ல

இலையும் ஓடமே 

பொருளின் 

பாரத்தை பொறுத்து


 எறும்பிற்கு ஏற்ற ஓடமே 

ஓடமும் எறும்பின் பயணத்திற்கே

பயணமும் உணவு தேடியே

தேடுதல் வயிற்று பசிக்கே

பசியும் உயிர் வாழவே

வாழ்வும் சிறப்பாய் அனுபவிக்கவே

அனுபவமும் எதற்கும் பாடமே

பாடமும் கற்பது கையாளவே

கையளவு அறிவும் போதுமே

போதும் என்பதும் நிறைவே

நிறைவும் ஏற்பது நிஜமே

நிஜமும் ஓர் நிகழ்வே

நிகழ்வது யாவும் அவன் முடிவே

முடிவு எதற்கும் இல்லையே

இல்லை என்றும் தோல்வி நம் முயற்சிக்கு

இந்த எறும்பின் நீர்ப் பயணம் போலே

எறும்பின் அறிவும்

இலையின் பரிவும்

நீரின் வேகமும்

காற்றின் அமைதியும்

முன்னவரின் எளிய நிலையும்

பின்னவரின் வலிய நினைப்பும் 

ஒருமித்து இருக்கும் போது

பயணம் யாவும் அழகே!

- வீணா

போகும் பாதை தெரியாது!

அடுத்த நொடி என்ன நடக்கும்

 தெரியாது!

ஒவ்வொரு அடியும் சவாலே

கண்டிப்பாக இதுவும் கடந்து

 போகும்!

ஒற்றை படகில் உல்லாச பயணம்

காற்றின் கையில் இருவரும்

பறப்போமே தவிர

மூழ்கமாட்டோம்!

- வித்யா

Tuesday, March 25, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 கரும்பலகையில் வரைந்த கண்ணீரை

 துடைக்க துடிக்கும் மனம்

நிஜத்திலும் அவ்வழியே


துயர் துடைக்க விழிகளின் போராட்டம்

ஒன்று துடிக்க

ஒன்று துடைக்க


 தாயின் விழிகளிருந்து கண்ணீர் பெருக

நான் செய்த தவறு தான் என்ன?

தன் தவறையும் சேர்த்தே அழிக்க நினைக்கும் சிறுவன்


 கண்ணீரின் காரணத்தை அறிய நினைக்கும் ஒருவனை விட

சிந்தும் கண்ணீரை துடைப்பவன் சிறந்த மனிதன்

- Veena 

சித்திரத்தில் கூட கண்ணீர் சிந்த

 தேவையில்லை!

சரித்திரத்தை மாற்றி

 போடுவோம் அம்மா!

கண்ணீர் கசிய காரணம் நூறு

அதை துடைக்க ஒரு துணை

அதுவும் பிஞ்சு விரல்கள்

 பட்டவுடனே தேகமே பஞ்சு போல்

லேசானது,இதைவிட  வேறென்ன

 வேண்டும்!

- வித்யா



Monday, March 24, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 பொன் விளையும் பூமியே இது

பாலையிலும் நீர் சுரந்து 

செடி வளர்ந்து

பூ பூக்கும்


 தேர்வு முடிவிற்கு காத்திருக்கும் மாணவன் போல

பாலையில் பூக்க 

காத்திருக்கும் செடி 

அது பூத்ததும் வியாபாரத்திற்காக பறிக்க காத்திருக்கும் மனிதனின் காலடி


 வாழ்வை கடக்க பல பாதைகள் இருந்தாலும்

முதலில் பதிக்கும் காலடியே சரித்திரமாகும்

- Veena 

நல்ல வழிகாட்டியின்

பாதச்சுவடில் முளைத்த, அவர்

 தூவிச்சென்ற விதைகளை நீர்

 ஊற்றி பராமரிக்க

 தேவையில்லை அதுவே

 நம்பிக்கை என்ற வேரை ஊன்றி

 முயற்சி என்ற கிளைகளை

 கொண்டு பல வெற்றி கனிகளை

 கொடுக்கும்!

- Vidhya 


Friday, March 21, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஆதங்கப்படுத்தும் பாரம் அல்ல இது

அன்புக்காக ஏங்கும் பாரங்கள்

சுமப்பவன் ஒருவனே அறிவான்

இந்த தந்திரத்தை

வென்றவன் அதிர்ஷ்டசாலி


 எப்பாரத்தை இறக்கி வைக்க?

அன்போடு வளர்த்த

பெற்றவர்களையா?

அன்பால் என்னை மாற்றிய துணைவியையா?

அன்பின் அடையாளமாய் பிறந்த செல்வங்களையா?

தாங்கி பிடிக்க பாரியாள் 

உண்டென்றாலும் 

அவளிடம் பாரத்தை பகிரவும் முடியாதே

என் பின் தொடரும் செல்வங்களை நானே

சுமக்க நினைக்க

மனக்கசப்பும் வருகிறதே உறவிற்குள்

நான் மட்டுமே அவர்களுக்கு

பிடிமானம் என்பதால்

கட்டுண்டு கிடக்கும் என்

கரங்களை திறக்க வழி தெரியாமலும்

அவ்வப்போது சாவியை 

தொலைத்தும் விடுகிறேனே 

திறக்கவும் முடியாமல்

இறக்கி வைக்கவும் முடியாமல்

விலகி நிற்கவும் தெரியாமல்

துறக்கவும் மனம் இல்லாமல்

நான் தாங்கும் பார மும் 

இன்பமே!

என்னை மீட்க எண்ணி

அவர்களை தொலைப்பதும் நியாயமோ?

காற்று சுவாசிக்க மட்டும் அல்லவே!

வேள்வியை வளர்க்கவும் செய்யுதே!

அங்ஙனமே வாழ்வு யாரும் தொடர

- Veena 

குடும்ப வாழ்வில் தராசு போல

 சரிசமமாக நடந்தால்

 தொல்லையில்லை !

அடுத்தத்தலைமுறைகளுக்கு

 வழிகாட்ட நியாயமான,

நடுத்தரமான ,உண்மையான

 அனுபவமே தேவை!



Tuesday, March 18, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 இணை சேரா இரும்பு கம்பிகளுக்குள் 

இணையவும் கற்றதோ இம்மலர்

ஆழ்மனதில் காதல் கொண்டதால்


 ஓர் துளி விஷம் போதும்

உயிரை மாய்க்க 

ஓர் துளி நீர் போதும்

செடி துளிர்க்க 

ஓர் துளி ஈரம் போதும்

புத்துணர்வு கொடுக்க

காற்று போதும் ஓர்

மலர் மணக்க

ஓர் பார்வை போதும்

காதலில் மயங்க

ஓர் கருணை உள்ளம் போதும்

எதையும் அரவணைக்க

பூக்கும் பூக்கள் எல்லாம் மணப்பதில்லை

மனது இருக்கும் யாவையிலும்

 உணர்ச்சி என்பதும்

 இருப்பதில்லை

- வீணா


தண்டவாளத்தில் முளைத்த

 காதல் ரோஜாவோ இல்லை

 பிம்பமா ..

காலமெல்லாம் பிரியாமல் உடன்

 இருப்பாய் என சொன்னாயே

இன்று என் கண்ணீரில் வேகும்

 தண்டவாளம்..

இதே இடத்தில் மலர்ந்த நம்

 காதல் இன்று நெடுந்தூரம்

 சென்றதென்ன..

சொல்லாமல் சென்றாய்

 கண்டிப்பாக என்றாவது மீண்டும்

 இந்த தண்டவாளத்துல காதல்

ரோஜா பூக்கும் என்ற இடத்தில்

 கண்ணீர் பூத்தென்ன ..

நல்ல சேதி கொண்டு வருவாய் என

 காத்திருக்க ..ஏன் இந்த பேரிடி?

உயிரோடு சென்ற நீ இன்று என் உயிரை

 இங்கே ஊசலாடா செய்வதேன்..

பாலமாக இருக்க வேண்டிய இடம்

 இன்று பாரமாக கனக்குதே!

- வித்யா




Monday, March 17, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


காக்கி உடையில் வந்து

சிவப்பு திருடனை கைது செய்து 

மக்கள் கூடத்தை கைப்பற்றிய இவர் தன்

விலாசம் தொலைத்தார்


கதைகள் பல பேசின இங்கே

அது தன் முகவரியை இன்று தொலைத்து


தெரு முனையில் காட்சி தந்து

ஊரை விட்டு ஓடிப் போன

சிவப்பு மிராசுதார்


ஆட்சி மாறினாலும் இடம் மாறாத 

பெட்டியை ஒட்டு மொத்தமாக 

ஒழித்துவிட்டனர் ஆட்சியாளர்கள்


 கனவுகள் பல சுமந்து

சென்ற காகிதம்

ஓர் பெட்டியில் அடக்கம்

வகையாய் பிரித்த பின்

பிரிந்தன உறவுகள் அங்கே

இடத்தின் பெயரால் சேர்ந்தன 

என்றாலும் 

கொடுப்பவர் அவர் வருகை 

எதிர்ப்பார்த்து காலையும் மாலையும்

நின்றன மக்கள்

தங்கள் உறவுகளின் செய்தியறிய

 ஒருவர் இட்ட இடத்திலிருந்து

மற்றவர் இடத்திற்கு

தானே பயணிக்க 

படித்து அறிந்ததை விட

படிக்காமல் அவர் சொல்லி 

அறிந்த மக்கள் கூட்டம்

இழந்தது உணர்ச்சி 

 புது வரவால் 

அது சோகமென்றாலும்

சுகமமென்றாலும்

-வீணா

பல கனவுகளை ,அன்பை,

ஏக்கத்தை,காதலை,துக்கத்தை

 பரிமாறிய ,தூக்கி சென்றவன்

 சத்தமில்லாமல் சமதியானன்

மீண்டும் வருவானா எழுத்துக்கள்

 எழுத மறக்கும் முன்! 

- வித்யா

Saturday, March 15, 2025

படமும் கருத்துமு by Veena and Vidhya

 




மேல் நோக்கி வளரும் தளிர்கள்

இலையாய் மாறிய பின்

கீழ் நோக்கி காண்பது எதற்கு?

தன்னை ஆதரித்த பூமிக்கு 

நன்றி சொல்லிடவா?

உருமாறிய விதைக்கு 

தன் வளர்ச்சியைக் காட்டவா?

வெயிலின் தாக்கத்தை மறுக்கவா?

மழை மேகத்தின் நீர்த்துளியை பூமியில் இறக்கிடவா?

எறும்புகளின் வாழ்வை காத்திடவா?

பசுமையை என்றும் தாங்கிடவா? 

முதுமையின் காட்சியை உணர்த்தவா?

பொறுமை காத்து தலைகுனிந்து நிற்கவா?

எதுவும் இலக்கணமே

இயற்கையின் வழியில்

- Veena 

எங்க இடம் விளையாட

 போகலாமா..வாங்க மண்ணை 

 பிசைந்து ,பதியம்

 போட்டு,தண்ணீர் ஊற்றி

 வளர்த்த பிள்ளைகள் இரண்டு

 ஒன்று வளரும் மற்றொன்று

 சிரிக்கும்.

 - Vidhya 


Thursday, March 13, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


கரங்கள் இணைவது எதற்கு? 

கேளிக்கைகளுக்கு மட்டுமல்ல


ஆதரவாய் பற்றவும் 

அனுசரணையாய் மாறவும் 

பகையை மறக்கவும்

நட்பை தொடரவும்

தெரிந்ததை தெரிவிக்கவும்

தெரியாததை விளங்கிக் கொள்ளவும் 

இருப்பதை பகிரவும் 

இல்லாததை கொடுக்கவும்

அன்பை பதிக்கவும் 


கரங்கள் அமைதி கொண்டால்

நம்பிக்கை இழக்கும் 

எந்த ஒரு உறவும்

- வீணா

தொடுதல் நம்பிக்கை,அன்பு,

உறவிற்கு பாலம் ...

ஒரு சின்ன உணர்ச்சி தூண்டல்

 மூலம் பாறையும் கரையும்

 பனியாக,அவர் அன்பிற்கு நாம்

 அடிமை!

அதனாலோ என்னவோ பலரும்

 நானே ராஜா என்ற

போக்கில் தொடவிட மாட்டாங்க

 என்னென்றால் தொட்டால்

 நொறுங்கி விடுவோம் என்று

 தெரிந்தே!

- வித்யா


Wednesday, March 12, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


என்றும் பசுமை மாறாமல் 

இருந்திடவும் முடியாது எவராலும்

பசுமைக்கு மறுபக்கம் என்பதும் உண்டு

வீழ்ந்து சருகாகும் இலை போலே

வீழ்ந்த இலைகள் சருகானாலும்

மீண்டும் மரத்தில் 

துளிர்க்கும் இலைகள் பசுமையே 

துவண்ட மனதில் உதிக்கும் 

புது ஞானம் போலே

- வீணா

ஒரு மரம் ஒ‌ன்றரை கோடி பசுமை

பச்சை நிற போர்வையில்

 முளைத்த பச்சை மரகதம் மஞ்சள்

 வெயிலில் ஜோலிக்க ,கண்மூடி

 திறக்க முடியாத குளிர்ச்சி..

உள்ளங்கையில் நரம்புகள் போல

கைக்கோர்த்த கிளைகள்

 பச்சைநிற பஞ்சுமிட்டாய் போல்

 செழித்த இலைகள்..

நிழலைக் கூட தரவிரும்பாத

 நிஜம்!

- வித்யா 



Tuesday, March 11, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

  


Veena Shankar:

 துள்ளி திரியும் வயதில்

காவல் காக்கிறாள் இவள்

இதுவே அவள் அரண்மனை என்பதால்

 Veena Shankar:

 ஓலைக் குடிசையில் தான்

எத்தனை வசதி?

குளிர்சாதனப்பெட்டி இல்லாமல் 

அருந்தும் பானை தண்ணீர்

அன்றன்றே சமைக்கும் சத்தான உணவு

கால் கடுக்க நின்று

சமையல் செய்யாது

அமர்ந்து சமைக்கும் வசதி

குளிரூட்டி இல்லாத

கூரையின் இடையில் 

தங்கும் காற்று

வசதிக்காக அன்றி 

தேவைக்கு மட்டுமே

 மிளிரும் விளக்குகள்

ஆடம்பர நாற்காலி அல்லாது

மணல் மேவிய திண்ணை

முற்றத்தில் அமர்ந்து கொண்டால்

கைபேசி கூட தேவையில்லை

அளவான வசதி

நிறைவான வாழ்வு

சண்டை சச்சரவோடு 

சமைத்ததை அன்பாய்

பரிமாறும் தலைவி

தலைவியின் காதலில்

திளைக்கும் கணவன்

ஊடலிலும் கூடலிலும் 

கிடைத்த பொக்கிஷங்கள்

அறையை ஒதுக்கி முற்றத்தில் கட்டில்

போட்டு நிலவினை

ரசிக்கும் பெருசுகள்

அடுத்தவர் வீட்டு பிரச்சனை

நமக்கும் உண்டு என்ற மனோபாவம்

இத்தனையும் விடுத்து

நான் செல்லவும் வேண்டுமோ

பட்டணத்திற்கு

படிக்கவும் வேலைக்கும்?

என்ற சிந்தனையில்

குழப்பத்தில் சிறுமி

இவள் மட்டுமல்ல

எல்லோர் வீட்டு நிலையும் இதுவே!

Vidhya:

தன் மாளிகையில் மலரும்

 புன்னகை, எத்தனை

 கொடுத்தாலும் கிடைக்கா

 வெகுளிச் சிரிப்பு,அசட்டு வடியும்

 முகத்தில் ஒளிரும் மாளிகை

 இவள் இல்லையேல்

 புன்னகைப்பூத்த மாளிகை

 இருளை,தனிமையை பூக்கும்..

பின்னாளில் வீட்டுக்கே

 மகாராணியாக பெயருக்கு

 இருந்தாலும் தாய்வீட்டில்

 இளவரசியாக இருந்ததே உசுரு!


Monday, March 10, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 Veena Shankar: 

ஓர் வேரில் 

ஓர் கிளையில்

இரு வேறு பரிணாமங்கள்

காண்பதும் அரிதே

ஓர் தாயின் 

ஓர் வயிற்றில்

இரு குணங்கள் கொண்ட 

பிள்ளைகள் போல்

 Veena Shankar: 

காயும் கனியும் போலவே வாழ்க்கை

சில நேரம் மாங்காய்

 போல புளிக்கவும் செய்யும்

சில நேரம் மாம்பழம் போல இனிக்கவும் செய்யும்

பேச்சில் கனி போலும்

 பேசினாலும் காய் போல புளிக்காமலும்

பேசுவது சிறப்பு

 Veena Shankar:

 நிறம் மாறும் நிஜங்கள்

உண்டு இங்கே

நம் விழி நம்மை ஏமாற்றி

அதன் மேல் பற்றுற 

சொல்கிறதே 

சொல்வது சிறப்பு

செய்வது அமைப்பு

காயும் கனியும்

ஏற்புடையதே

நம் மனதிலும்

Vidhya 

காயா பழமா

பல நேரத்தில் சிலருக்கு காயும்

பலருக்கு பழமும் பிடிக்கும்

ஒரே கிளையில் ஒன்று சீக்கிரம்

 பக்குவம் அடைந்து முதிர்க்கிறது

மற்றொன்று நேரம் எடுத்தாலும்

முழுவதுமாக வளர்ச்சி அடைந்து

 முதிர்வதால் பலன் அதிகம்..

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த

 இரு வேறு குணம் பார்பவருக்கு

 மட்டும் அது வேறுபடும்,

படைத்தருக்கு இரண்டும் ஒன்று 

தான்!

காயோ பழமோ சரியான

 நேரத்தில் சந்தைக்கு, வெளியே

 வரவில்லை என்றால் வீணே!




Sunday, March 9, 2025

பெண்கள் தின வாழ்த்துக்கள் by Veena Shankar

 


பெண்கள் தின வாழ்த்துக்கள்


அன்பு காட்டும்

பிள்ளைகளுக்கு அன்னையாய்


ஆதரவு கொடுக்கும்

பெற்றோருக்கு மகளாய்


இல்வாழ்க்கையில் பழுதில்லா இயந்திரமாய்


ஈர்க்கப்படும் எதிர்திசை காந்தமாய்


உதவி வேண்டுவோருக்கு கரங்களாய் 


ஊன்றி வளரும் விருட்சமாய் 


எதிலும் கால் பதிக்கும் உருவாய்


ஏற்றம் கண்டு முன்னேற்றும் சதியாய் 


ஐம்புலன்களையும் அடக்கும் மனமாய்


ஒட்டு மொத்த சுடரின் அம்சமாய்


ஓடியே நிற்க மறந்த அலையாய்


எக்காலமும் பொறுமையில் தவழ்ந்து, 


தீர்க்க முடிவிற்காக அமர்ந்து,


கால்பதிக்க சுயமாய்

நின்று, 


முடிவை தேடி ஓடும் 


அனைத்து பெண்களுக்கும்


இந்நாளன்றி எந்நாளும் 

பொன்னாளாக அமைய வாழ்த்துக்கள்

Friday, March 7, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya




வானத்தின் கண்ணீர்

பூமியின் தாகத்தை

தீர்க்க மழையாய்

மனிதனின் கண்ணீர்

மனதின் நிலையை

சொல்லாமல் அறிய

விலங்குகளின் கண்ணீர்

உண்மையான போராட்டத்தின் 

விளைவாய் பூத்ததோ?



தாய்மை என்றும் சிறப்பே

அடுத்தவர் விழியின் கண்ணீர் கூட

நனைக்கும் தாயின் விழியில்

பிரிவு என்னும் சொல் கூட 

நனைக்கும் தாயின் விழியை

- வீணா


கண்கள் பேசுதே ..

இவர்கள் கண்ணீர் துடைக்க 

வானமும் பூமியும் எடுத்த முடிவில்

மழை பேசுதே..

ஒவ்வொரு உயிருக்கும் 

உணரச்சிகள் உண்டு என்று

இந்த புகைப்படம் பேசுதே..

எதை சொல்லியும் புரியாத,ஈடாக

 தர முடியாத ஒன்றை,வலியை

 வெடிக்கும் கண்ணீர்

 பேசுது..நாளை என்று

 ஒன்று உண்டேனில் இன்றே

 அழுது தீர்த்துவிடு , மீண்டும்

  புதிதாக பிறப்பாய் நாளை!

- வித்யா



Thursday, March 6, 2025

படமும் கருத்தும் by Veena,Priya and Vidhya

 


மண்ணில் துளிர்க்கும் செடி போலவே

மனிதனின் ஆசை

மனதில் நாளுக்குள் நாள் வளர

அந்த 

வளர்ச்சியும் ஓர் நாள்

வளர்ந்த மரம் போலே தானாய் நின்று விடும்

சுகம் தந்த யாவும்

அகம் சுருக்கும்

உடலின் முதிர்வால்

வாழ்ந்து விடு உனக்கான வாழ்வை இக்கணம்

செவி சாய்க்க முடியாது

ஆவி பிரிந்த பின்

காற்றின் அதி வேகத்தில்

மரம் வீழ்வது போலே

- வீணா


துளிர் விடும் அழகோ அழகு

நீ மெல்ல மெல்ல விரிகிறாய்

நான் மெல்ல மெல்ல

 உதிர்கிறேன் அன்பே!

காற்றை அடக்கி,இருளை குடித்து

 உன்னை மேலே தள்ளி நான் கீழே

 போகிறேன்!

நன்றாக வேரூன்றி தழைத்து பல

 நூறு என்னை மீண்டும்

 மண்ணில் உதிர்..

இப்படிக்கு விதை!

- வித்யா


ஐந்தறிவு ஜீவியின் மூக்கணாங்கயிறை கழற்றி 

ஓரறிவு கிளையில் சுருக்கி 

ஆறறிவு ஜீவி யோசித்துக் கொண்டிருந்தது 

சட்டென்று கீழே பார்த்தவுடன் 

இந்த சிறு விதைக்குள் ஒரு விருச்சகம் 

வைத்திருக்கும் இறையருள் 

நம்முள் எவ்வளவு அதிசயங்களை 

வைத்திருக்கும் என்று எண்ணியவாறு 

சுருக்கை கழற்றி 

ஐந்தறிவு ஜீவியின் மூக்கினில் 

கயிற்றைக் கட்டி

ஆறறிவு ஜீவி நடை போட்டது


-- பிரியா

  

Tuesday, March 4, 2025

அம்மாவின் நினைப்பு by Veena Shankar

 


அம்மாவின் நினைப்பு


ரவிக்கும் ரூபாவிற்கும் கல்யாணமாகி ஒரு மாதம் ஆயிற்று. புதுமண தம்பதிகள் மறு வீடு அழைப்பு, தேன் நிலவு, விருந்து என்று நாட்களை ஓட்டி விட்டனர். ரவி மட்டும் இடையிடையே ஆபிசுக்கு போக, ரூபா மட்டும் ஒரு மாதம் விடுப்பு எடுத்திருந்தாள். இன்னும் இரு தினங்கள் மீதியிருந்த நிலையில் வீட்டு வேலைகளை மாமியாரோடு பகிர நினைத்தாள். காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து சாமிக்கு விளக்கேற்றி பேப்பர் பார்த்தவாறே காபி குடித்து முடித்தாள் ரூபா. அடுத்த வேலையாக வீட்டை பெருக்கி துடைத்து, அடுப்படியில் இருந்த தன் மாமியாரிடம் தான் பெருக்கி துடைத்து விட்டதாக சொல்ல, "சரிம்மா! நானும் பெருக்கிட்டு வரேன்" என்று சொல்லி வீட்டை பெருக்க தொடங்கினாள் மாமியார் அன்னம். அவள் செயல் கண்டு ரூபா விழித்தாலும் அப்போது ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை. சிறிய நேரம் கழித்து தான் பாத்திரம் கழுவி வைத்து விட்டதாக அன்னத்திடம் சொல்ல, மீண்டும் பாத்திரத்தை தான் கழுவி வைத்து விட்டு வருவதாக சொல்லி அடுப்படிக்கு சென்றாள் அன்னம். '''இது என்ன ரொம்ப புதுசா இருக்கே" என்று நினைத்து மௌனம் சாதித்தாள் ரூபா. துணியை மிஷினில் போட்டு காய வைத்து விட்டதாக ரூபா மறுபடியும் அன்னத்திடம் சொல்லி அவள் நடவடிக்கையை கண்காணித்தாள் ரூபா. ரூபா காய போட்ட துணியை அன்னம் மீண்டும் இடம் மாற்றி போட்டதை பார்த்தாள் . ஆனால் மாமியாரிடம் இது பற்றி ஏதும் கேட்காத நிலையில் ஒரு வாரம் இப்படியே கழிந்தது. தான் வேலைக்கு போகும் போது முக்கால்வாசி வேலையை முடித்து விட்டே செல்வாள் ரூபா. ஆனால் இவள் செய்த வேலைகளை அவள் மாமியார் மறுபடியும் செய்வதை தன் கணவனிடம் மெல்ல சொன்னாள். மறுநாள் காலை தான் தன் அம்மாவிடம் விசாரிப்பதாக சொன்னான் ரவி.

மறுநாளும் ரூபா செய்த வேலையை அன்னம் மீண்டும் செய்வதை பார்த்த ரவி, தன் அம்மாவிடம் இதை பற்றி கேட்க, ரூபா தான் கேட்க சொல்லியிருக்காள் என்று நினைத்து அவளை பார்த்தே " ரூபா! இதை நீ நேரடியாய் என்கிட்ட கேட்டிருக்கலாம்? உனக்கும் எனக்கும் நடுவுல என் பையன் கூட வரக் கூடாது. எனக்கு ரவி ஒரே பையன். பொண்ணு கிடையாது. உன்னை நான் மகளாக தான் பார்ப்பேன். ஆனால் நீ என்னை அம்மாவா ஏத்துக்கணும் ன்னு சொல்லி கட்டயாப்படுத்த மாட்டேன். யாருக்கும் அம்மாவை மீறின பந்தம் கிடையாது. சரி, பரவாயில்லை ரவி கேட்டதற்கு பதில் சொல்றேன். வேலைக்கு போகறதுக்கு முன்னாடி உன்னால் முடிந்த வேலையை நீ செய்கிறாய். நீ போனப் பிறகு வேலையில்லாததால் அப்படியே உட்கார்ந்து நான் டிவி பார்க்க பழகிட்டா அப்புறம் முழு சோம்பேறியாக மாறி விடுவேன். இத்தனை நாள் நான் செய்த இந்த வேலைகள் என்னை சுறுசுறுப்பாக வைத்திருந்தது. அதுவும் நீ உன் அம்மா வீட்டிற்கு போகும் போது மொத்த வேலையை நான் செய்ய கஷ்டமாக இருக்கும். நானே எல்லா வேலைகளையும் செய்கிறேன் என்று நான் சொன்னாலும் நான் இல்லாதப்போ உனக்கும் வீட்டு வேலை மொத்தமாக செய்ய கஷ்டமாகி விடும். அதனால் தான் நீ செய்யும் வேலையை மறுபடியும் செய்கிறேன்" என்று சொல்லி முடித்தாள் ரவியின் அம்மா அன்னம். "அச்சோ! உங்களைப் போய் தப்பா நினைச்சிட்டேன். சாரி அத்தை என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் ரூபா. என்னங்க! இன்னிக்கி என் மனக்குழப்பம் தீர்ந்தது. நான் நிம்மதியா ஆபீஸ் ல வேலை பார்ப்பேன். வாங்க நேரமாச்சு, போவோம் என்று ரவியை விரட்டினாள் ரூபா. 


ஒருவரின் பார்வை மற்றவரிடத்து மாறுபடலாம். அதை தெளிந்து உணர்ந்து கொள்வது சிறப்பு தான் என்றென்றும்

Monday, March 3, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena:

காதல்

வெயிலில் கருகிவிடுமா?

மழையில் நினைந்திடுமா?

குடையில் ஒளிந்திடுமா?

சிறையில் அடைந்திடுமா?

வளியில் கலந்திடுமா?

வழியில் மாறிடுமா?

எதிர்ப்பில் சிக்கிவிடுமா?

எவர் சிந்திக்க எங்கு 

மலர்கிறது காதல்?

எவர் மயங்க எங்கு 

அடைகிறது காதல்?

சில நேரம் தருவாய்

சில நேரம் எருவாய் 

சில நேரம் உவமையாய் 

சில நேரம் உருவகமாய்

சில நேரம். மறைமுகமாய்

சில நேரம் துணிவாய்

ஏதும் திரை போட்டு

துளிர்ப்பதல்ல காதல்

கண்ணும் கண்ணும்

மனதும் மனதும் 

ஒன்றுவதே காதல் 

மெல்லிய இதழ் விரிக்கும் 

பூ போலே

பூப்பதோ மட்டுமல்ல காதல் அன்றி 

வாழ்நாள் முழுவதும்

தொடர்ந்து வருவதே காதல்

Vidhya :

கோடையின் வெப்பம் தணிக்க

குளுகுளு மொழுமொழு

பூசணிக்கொண்டு குடைப்பிடிக்க 

ஐஸ்ஸாக உருகிய காதல்

 கடற்கரையில் நீராவியாக

 போனது!

மீண்டும் மழையாக வந்து

 உறைந்து போன இதயங்கள்

 நினைவுச்சின்னமாக மெரினா

 கடற்கரையில் குடைப்பிடித்து 

 காட்சி தந்தன!

 



Saturday, March 1, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar:

 எவன் சொல்லி எவன் இயங்க?

காயம் கொண்டால் யார் உறங்குவர் முதலில்?

எவன் சிறுமை கொண்டான் வலிமையில்? 

ஒருவர் உடல் விட்டு நீங்க

இன்னொருவனும் அவன் வழியே

வலி தெரிந்து ஒருவன் வழி மாறுவான்

வலி அறியாமல் வளியில் மிதப்பான் இன்னொருவன்

இவர்களை இழக்க வசதி பொருட்டல்ல

இழந்த பின் மீட்க நினைக்கும் உலகம்

 Veena Shankar: 

குருதி நம்முள் ஓடினால் மட்டுமே 

நம் இயக்கம்

இதை அறிந்த மானுடமும் 

ஒருவரை ஒருவர் 

எதிர்த்துக் கொண்டு,

வெட்டிக் கொண்டு

கொண்ட ஆனந்தத்தில் 

வெற்றி நமதே

என்று பறை சாற்றிக் கொண்டு

இறுதியில் அடைவது தான் யாது?

என் துணையின்றி நீயும்

வாழ்வதில்லை 

உன் துணையின்றி நானும்

வாழ்வது சாபமோ?

நானும் நீயும் சேர்ந்து பயணிப்போம்

உயிர்களின் காலம் உள்ள வரை

நம்முள் ஓடும் குருதியையும் காத்துக் கொண்டு

Vidhya:

தூங்காத மணிகள் இரண்டு

தூங்கினாலும் இயங்கும் கடமை!

நீ பாதி நான் பாதி என்று

 இருந்தும் இரண்டும் சரிவர

 கலந்துக் கொள்ளாததால் வந்த

 கலக்கம்..

நான் நிலை தடுமாறும் போது நீ

 வேகமாக துடிக்க , நீ துடிப்பை

 நிறுத்தும் போது நான் முழிக்க,

இவை இரண்டும் சரிவர

 பழுதுபார்க்க வேண்டும்,

ஒன்று துடிப்பின் மூலம்

 இருப்பதை உணர்த்தினாலும் மற்

றொன்று விளங்காத புதிர் ,அதை

 கவனிக்காத போது சகலமும்

 நின்று போகும்!

புறத்தில் இருப்பது

நொந்தால் அகத்தில் இருப்பது

 பல மடங்கு நோகும்,

மறைந்திருந்து நம்மை

 இயக்கும் இந்த காதலை,அன்பை

 அவ்வப்போது சார்ஜ்

 செய்துக்கொள்ளுங்க

 இல்லையேல்,ரீசார்ஜ் இல்லை

 ஒரேயடியாக காலாவதியாகும்,

செயற்கையாக பரிமாற்றம்

 செய்தாலும் உத்தரவாதம்

 இல்லை!



படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar:

 யார் மடியில் உறங்கி

யார் மடியில் இளைப்பாறி

யார் பிடியை உணர்ந்து

யார் உறங்க இந்த இருப்பிடம்

சாதனைகள் கொள்ளாமல் போனாலும்

வேதனைகள் ஒருமித்து ஆட்கொண்டாலும்

எவரும் விரும்பார்

தன் உடல் மண்ணில்

உறங்க

குழியில் புதையும் முன் 

ஓர் புதிய சரித்திரம்

படைக்க வேண்டும்

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே

சிறப்பும் வேண்டும்

ஆறடி தேடும் ஆறறிவு

புதைந்தால் வரலாறு

உரைக்கும் 

நம்முள் புதையுண்ட

எண்ணற்ற கதைகளை

எதுவும் நாம் கொண்டு செல்வதில்லை

மரணத்தின் விளிம்பில் 

எதையும் விடுப்பதும் இல்லை

மெத்தை படுக்கையும்

மரணப் படுக்கையாய்

மாறும் வரை

கண்டது காலம்

கொண்டது கோலம்

யார் உறங்க யார் தோண்ட?

யார் இளைப்பாற யார் 

கண்ணீர் உதிர்க்க?

யார் பிறக்க யார் உணர? 

யார் துணையோடு யார் பயணிக்க?

வாழ்வில் 

மனதும் துறந்த பின் உயிர் துறப்பதும் 

மரணப் படுக்கையில் வீழ்வதும்

மரணக் குழியில் துயில்வதும் ஒன்றே!

 Veena Shankar:

 தோண்ட தோண்ட கிடைப்பது பொக்கிஷமே!

ஆனால் வார்த்தைகள் மீறி தோண்ட கிடைப்பது

 பகைமையே!

Vidhya:

தோண்ட தோண்ட கிடைத்தது

 பாட்டன் பூட்டன் எலும்பு அல்ல

 ஒரு சமூகத்தின் அடையாளம்

நாகரீகத்தின் வெளிப்பாடு..

இத்தனை அடி தோண்டி

 புதையுண்ட மண்ணை

 கிளறி,வெளிகொண்ட தூசு

 சொல்லும் அவர்களின் கதை..

வளமைக்கொண்ட உடல்

 இரும்பாக, வலுவிழந்த மண்

தூணாக,வைரம் போன்ற மனம்

 எங்கே உறங்குதோ!

இங்கே கிடைத்ததை கூறு போட

பறக்கும் பருந்து கூட்டம்..

அப்பாட என்று உறங்க போன

 பின்னும் தோண்டி

 வேவு பார்ப்பது  ஏனோ! 

பல அடி தோண்டி உயிரற்றதை

 தேடும் இடத்தில் மடியும் உயிரை

 கொஞ்சம் கவனியுங்க, மேலே

 போக வழிவிடுங்க ,நீங்களே

 இறங்கும் நாள் வரும் வரை

 அடுத்தவரையும் தூக்கிவிட்டு

 போங்க!

 

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...