பொன் விளையும் பூமியே இது
பாலையிலும் நீர் சுரந்து
செடி வளர்ந்து
பூ பூக்கும்
தேர்வு முடிவிற்கு காத்திருக்கும் மாணவன் போல
பாலையில் பூக்க
காத்திருக்கும் செடி
அது பூத்ததும் வியாபாரத்திற்காக பறிக்க காத்திருக்கும் மனிதனின் காலடி
வாழ்வை கடக்க பல பாதைகள் இருந்தாலும்
முதலில் பதிக்கும் காலடியே சரித்திரமாகும்
- Veena
நல்ல வழிகாட்டியின்
பாதச்சுவடில் முளைத்த, அவர்
தூவிச்சென்ற விதைகளை நீர்
ஊற்றி பராமரிக்க
தேவையில்லை அதுவே
நம்பிக்கை என்ற வேரை ஊன்றி
முயற்சி என்ற கிளைகளை
கொண்டு பல வெற்றி கனிகளை
கொடுக்கும்!
- Vidhya

No comments:
Post a Comment