என்றும் பசுமை மாறாமல்
இருந்திடவும் முடியாது எவராலும்
பசுமைக்கு மறுபக்கம் என்பதும் உண்டு
வீழ்ந்து சருகாகும் இலை போலே
வீழ்ந்த இலைகள் சருகானாலும்
மீண்டும் மரத்தில்
துளிர்க்கும் இலைகள் பசுமையே
துவண்ட மனதில் உதிக்கும்
புது ஞானம் போலே
- வீணா
ஒரு மரம் ஒன்றரை கோடி பசுமை
பச்சை நிற போர்வையில்
முளைத்த பச்சை மரகதம் மஞ்சள்
வெயிலில் ஜோலிக்க ,கண்மூடி
திறக்க முடியாத குளிர்ச்சி..
உள்ளங்கையில் நரம்புகள் போல
கைக்கோர்த்த கிளைகள்
பச்சைநிற பஞ்சுமிட்டாய் போல்
செழித்த இலைகள்..
நிழலைக் கூட தரவிரும்பாத
நிஜம்!
- வித்யா

No comments:
Post a Comment