மேல் நோக்கி வளரும் தளிர்கள்
இலையாய் மாறிய பின்
கீழ் நோக்கி காண்பது எதற்கு?
தன்னை ஆதரித்த பூமிக்கு
நன்றி சொல்லிடவா?
உருமாறிய விதைக்கு
தன் வளர்ச்சியைக் காட்டவா?
வெயிலின் தாக்கத்தை மறுக்கவா?
மழை மேகத்தின் நீர்த்துளியை பூமியில் இறக்கிடவா?
எறும்புகளின் வாழ்வை காத்திடவா?
பசுமையை என்றும் தாங்கிடவா?
முதுமையின் காட்சியை உணர்த்தவா?
பொறுமை காத்து தலைகுனிந்து நிற்கவா?
எதுவும் இலக்கணமே
இயற்கையின் வழியில்
- Veena
எங்க இடம் விளையாட
போகலாமா..வாங்க மண்ணை
பிசைந்து ,பதியம்
போட்டு,தண்ணீர் ஊற்றி
வளர்த்த பிள்ளைகள் இரண்டு
ஒன்று வளரும் மற்றொன்று
சிரிக்கும்.
- Vidhya

No comments:
Post a Comment