பெண்கள் தின வாழ்த்துக்கள்
அன்பு காட்டும்
பிள்ளைகளுக்கு அன்னையாய்
ஆதரவு கொடுக்கும்
பெற்றோருக்கு மகளாய்
இல்வாழ்க்கையில் பழுதில்லா இயந்திரமாய்
ஈர்க்கப்படும் எதிர்திசை காந்தமாய்
உதவி வேண்டுவோருக்கு கரங்களாய்
ஊன்றி வளரும் விருட்சமாய்
எதிலும் கால் பதிக்கும் உருவாய்
ஏற்றம் கண்டு முன்னேற்றும் சதியாய்
ஐம்புலன்களையும் அடக்கும் மனமாய்
ஒட்டு மொத்த சுடரின் அம்சமாய்
ஓடியே நிற்க மறந்த அலையாய்
எக்காலமும் பொறுமையில் தவழ்ந்து,
தீர்க்க முடிவிற்காக அமர்ந்து,
கால்பதிக்க சுயமாய்
நின்று,
முடிவை தேடி ஓடும்
அனைத்து பெண்களுக்கும்
இந்நாளன்றி எந்நாளும்
பொன்னாளாக அமைய வாழ்த்துக்கள்

No comments:
Post a Comment