கரும்பலகையில் வரைந்த கண்ணீரை
துடைக்க துடிக்கும் மனம்
நிஜத்திலும் அவ்வழியே
துயர் துடைக்க விழிகளின் போராட்டம்
ஒன்று துடிக்க
ஒன்று துடைக்க
தாயின் விழிகளிருந்து கண்ணீர் பெருக
நான் செய்த தவறு தான் என்ன?
தன் தவறையும் சேர்த்தே அழிக்க நினைக்கும் சிறுவன்
கண்ணீரின் காரணத்தை அறிய நினைக்கும் ஒருவனை விட
சிந்தும் கண்ணீரை துடைப்பவன் சிறந்த மனிதன்
- Veena
சித்திரத்தில் கூட கண்ணீர் சிந்த
தேவையில்லை!
சரித்திரத்தை மாற்றி
போடுவோம் அம்மா!
கண்ணீர் கசிய காரணம் நூறு
அதை துடைக்க ஒரு துணை
அதுவும் பிஞ்சு விரல்கள்
பட்டவுடனே தேகமே பஞ்சு போல்
லேசானது,இதைவிட வேறென்ன
வேண்டும்!
- வித்யா

No comments:
Post a Comment