இணை சேரா இரும்பு கம்பிகளுக்குள்
இணையவும் கற்றதோ இம்மலர்
ஆழ்மனதில் காதல் கொண்டதால்
ஓர் துளி விஷம் போதும்
உயிரை மாய்க்க
ஓர் துளி நீர் போதும்
செடி துளிர்க்க
ஓர் துளி ஈரம் போதும்
புத்துணர்வு கொடுக்க
காற்று போதும் ஓர்
மலர் மணக்க
ஓர் பார்வை போதும்
காதலில் மயங்க
ஓர் கருணை உள்ளம் போதும்
எதையும் அரவணைக்க
பூக்கும் பூக்கள் எல்லாம் மணப்பதில்லை
மனது இருக்கும் யாவையிலும்
உணர்ச்சி என்பதும்
இருப்பதில்லை
- வீணா
தண்டவாளத்தில் முளைத்த
காதல் ரோஜாவோ இல்லை
பிம்பமா ..
காலமெல்லாம் பிரியாமல் உடன்
இருப்பாய் என சொன்னாயே
இன்று என் கண்ணீரில் வேகும்
தண்டவாளம்..
இதே இடத்தில் மலர்ந்த நம்
காதல் இன்று நெடுந்தூரம்
சென்றதென்ன..
சொல்லாமல் சென்றாய்
கண்டிப்பாக என்றாவது மீண்டும்
இந்த தண்டவாளத்துல காதல்
ரோஜா பூக்கும் என்ற இடத்தில்
கண்ணீர் பூத்தென்ன ..
நல்ல சேதி கொண்டு வருவாய் என
காத்திருக்க ..ஏன் இந்த பேரிடி?
உயிரோடு சென்ற நீ இன்று என் உயிரை
இங்கே ஊசலாடா செய்வதேன்..
பாலமாக இருக்க வேண்டிய இடம்
இன்று பாரமாக கனக்குதே!
- வித்யா

No comments:
Post a Comment