Ramalakshmi: நான் போகிறேன் மேலே மேலே
பூலோகம் என் வாலின் கீழே
Akhila: சிறுவன் செய்த குட்டி வானவில்
துறுதுறுவெனப் பறக்குது வானில்!
Akhila: ஆயிரங்கள் செலவு செய்து,
விமானத்தில் ஏறி வானில் பறக்கலாம்!
கட்டணம் மட்டுமே நம் உபயம்
கட்டுப்பாடு நம்மிடம் இல்லை!
ஆயினும், உயர உயரப் பறந்தாலும்,
சொற்பக் காசில் செய்த பலவண்ண
பட்டத்தில் - மறுமுனை நம் கையில்!
Jaya : வானெங்கும் பல வண்ண (வர்ண) மகுடமாய்
காற்றில் சிறகடித்து மேலும் கீழுயும் அசைந்தாடி
ப(பா)டமாய்
சந்திர மண்டல வாசலை தொட்டு புதுப்பித்து
உயரத்தில் பறப்பது போல்
நானும் பட்டமாக மாறிட
கொள்ளை ஆசை... அவா!!!!
உயர பறக்கட்டும் நம் நல்ல எண்ணங்களும்
மனிதநேயமும்!!!!
கற்றுக்கொடுக்கும் ஆசனாய் நீ
கற்பிக்கும் மாணவனாய் நான்.............
Veena Shankar: எதையும் எட்டி பிடிக்கும் பருவத்தில்
வாட்டி வதைக்கும் சூரியன் மறையும் முன்னே
காகிதத்தில் ஒட்டி உருவம் கொடுத்து
அழகு தீட்டிய தாரகையாய் மாற்றி
நூலில் கட்டி விட்ட பட்டத்தை
காற்றிற்கேற்ப ஆட்டி இயக்கும் போது
சுட்டி விரல்கள் அனைத்தும் அணைக்குமே!
வெட்டி கிழித்து விட பலர் நினைத்தாலும்
அதுவும் உருட்டி காட்டி மேலெழும்ப
கரங்கள் தட்டியே வானை பிளக்குமே!
ஊட்டி விட்ட தாயும் ஜோடி சேர
வானில் ஈட்டியாய் வரும் நண்பனின் பட்டமும்
போட்டி இல்லா வெற்றியும் கை கொடுக்குமா?
அதற்கு வட்டியும் முதலுமாய் கிடைக்கும் மகிழ்ச்சியையும்
பூட்டி வைக்க முடியுமா?
இதன் பால் கொள்ளும் குட்டி கதைகளும்
கெட்டியாய் நினைவில் பதித்து
நம்மிடம் கூட்டி வந்து சேர்க்குமே !
ரசித்து கேட்ட வெற்றிப் பாடல்களும் இசைக்குமே!
வெற்றி கொள்ளும் நேரத்தில் திட்டிய மனமும் வலிக்குமே!
கொட்டி கொடுத்தாலும் கிடைக்காது இந்த தருணமே!
வாழ்வில் படிக்கட்டும் பட்டமும் ஒன்றே
இரண்டும் மேலே மேலே சென்று
எல்லையை ஒட்டி அமைத்து
வெற்றியும் நிலைநாட்ட காத்திருப்பதால்
Jaya : வான்வெளியில் சீறி பாயும் பறக்கும்
காகித ஏவுகனை...
Veena Shankar: ஆளில்லா காகித விமானம்
பட்டம் விடும் ஆளின் கையிலே இவன் பயணம்
காற்றோடு இவனுக்கு துணையாவது ஆகாயம்
கிழியாமல் கிடைத்தால் விடுத்தவனுக்கு வெகுமானம்
Veena Shankar: மீன் போலே துள்ளி குதிப்பான் நீரில்லாமல் ஆகாய காற்றின் துணையோடு
Veena Shankar: இதுவும் செயற்கைக் கோள் தானா?
கயிற்றை மெல்ல விடுக்க பறக்கும் பட்டம்
நொடிகள் கீழிறங்க மேலே செல்லும் எரிவாயுவை உமிழும் கோள்
விடுப்பவனின் ஆதிக்கம் இரண்டிலும்
ஒன்று காற்றில் ஆட
மற்றொன்று வானியலை படிக்க
எல்லை எட்டும் வரை பதற்றம் பின் மகிழ்ச்சி
உயர பறந்தாலும் ஸ்திரமாய் நிற்பது அவை மட்டுமல்ல
செலுத்தியவனின் அனுபவமும் தான்
வானை தொடும் ஏணியோ? இல்லை வானில் அதிசயத்தை கூட்டும் முயற்சியா?
இரண்டும் இயங்கும் அவன் கட்டுப்பாட்டில்
Vidhya Nivash: பட்டம் போல் தெரியவில்லையே!
யார் மௌனத்தையோ கலைக்க போகும் காதல் அம்பு போல் தெரிகிறதே!
Vidhya Nivash: டேய் எங்கடா இருக்க மாஞ்சா போட எல்லாம் ரெடி..
தொட்டால் கையை கிழிக்கும் மாஞ்சா ரெடி..
இந்த வாட்டி அந்த புது மொட்டை மாடிகாரனோட பட்டத்தை ஒரு கை பார்த்துருவோம்!
எடு நம் சுறா குட்டிய சீறி பாய உடுவோம்!
Vidhya Nivash: மாஞ்சா போட்ட சட்டி காயுது இங்கே!
சிறுக சிறுக சேர்த்த சில்லரை சிதற ஓடி போய் வாங்கிய பாய்கடை பட்டம் ஒருபக்கம் ஏங்க!
பள்ளியிலிருந்து வந்து தூக்கி போட்ட புத்தக மூட்டை ஒருபக்கம் சரிந்து வாயைப்பிளக்க!
காசுயில்லடா பட்டம் வாங்க? பரவில்லடா! விளக்கமாத்து குச்சியும்,பழைய காகிதமும் சேர்ந்து செய்த பட்டம் கிடக்க ஒருபக்கம்!
டேய் அந்த ஓட்டு மேல ஏறதடா என அம்மா குரல் ஓங்க!
படிக்கட்டும் இல்லை!
ஏணியும் இல்லை!
தாவி தாவி ஏறி ,ஓட்டில் விட்ட பட்டம்!
இடையில் பட்டம் பிடிக்க ஓடி உடைந்த ஓடு!
பல முறை யார் வந்து கேட்டாலும் மீண்டும் சொன்ன கதை கேட்டு புதிதாக ஒவ்வொரு முறை உடையும் ஓடு!
நூலை கையில் பிடித்தா நானே ராஜா மந்திரி என வானில் ஆடிய ஆட்டம் எங்கே!
எளிதாக ஏற படிக்கட்டு இருக்கு!
பரந்து விரிந்த மொட்டை மாடி இருக்கு!
வண்ண வண்ண புதுமையான பட்டம் இருக்கு!
ஆனால் என்னை ஏன் இந்த ஆணியில் அடித்து அலங்கார பொருள் ஆக்கினீர்!
என்னை விடுவித்து வானில் பறக்க விடுங்க!
உங்களை இந்த அறையில் சிறைபிடித்த மாதிரி!
ஏன் எனக்கும் இந்த தண்டனை என கேட்கும் பட்டம்!
Vidhya Nivash: அந்த வண்ண நினைவுகள்,வானத்தை அலங்கரித்த பட்டக்கூட்டங்கள் ,பறவைக்கு போட்டியாக பறந்த பட்ட சீசன் எங்கே போனது!
யாராவது சொல்லுங்க!