Friday, May 17, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


காலையில் இணைந்த பூக்கள் இங்கே


மாலையில் மலரும் மலர்களோடு பூங்கா இந்த இணையை வரவேற்க


பல நினைவுகளின் பகிர்வுகளோடு இனிய இரவும் பிறக்க


பால் நிலவு வெளிச்சத்தில் சோறு உண்டு மகிழ்ந்த நாட்கள்

 கடந்து போய்  

வாலிபமும் கை கோர்த்து செல்லும் நாட்களும் வந்ததோ?


நிலவு வெளிச்சமும் அந்நியப்பட்டு விட்டால் 

களையப்படுவதும் யாது?


அச்சமா?

நாணமா?


இரு மனங்கள் மகிழ்ந்து பேசிய பின் உடலும் உள்ளமும் இணைய மறுக்குமா அங்கே?


இருண்ட இடத்தில் நிலவொளி போலே உணர்ந்தனர் மணமான காதலர் இவர்கள்


வாழ்வில் எல்லா கேள்விகளுக்கும் விடை காண முடியாது


சில புதிரானது

சில புனிதமானது

சில உணர்ப்பூர்வமானது

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...