Monday, May 13, 2024

தனித்துவமான படைப்பு by Vidhya Nivash

 


தேர்வின் முடிவில் நேற்றைய தினம் பலரின் உழைப்பு,கனவுக்கு விடைக்கிடைத்த நாள்,பல பிள்ளைகளும் பெற்றோரும் இவ்வளவு தான் என உறங்கிய நாள்.

மதிப்பெண் வெறும் எண்.இதை பலரும் உணர்ந்தும், ஆனாலும் பலரின் எண்ண தாக்கம் நம்மையும் அசைக்க தான் செய்கிறது.

நேற்று கேட்டதில் சிந்திக்க தூண்டியது.பல பெற்றோரும் பதற்றத்துடன்,கண்டிப்புடன் இப்படி தான் இருக்க வேண்டும்.இதில் எது சரி! தவறு! என்ற குழப்பத்துடன் செய்வது அறியாமல் பேசியதை கேட்கும் போது,ஒன்றே ஒன்று தான் இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகள் தெளிவாக தான் உள்ளனர்.அவர்களுக்கு நன்கு தெரியும் எதை எப்படி கேட்க, செய்ய வேண்டும் என்று.நாம் செய்ய வேண்டியது அவர்களுக்கு செவி மடித்து,தேவைப்படும் நேரத்தில் தோளைத்தட்டி, தோழமையுடன் கண்டித்து வழிகாட்டினால் போதும்.

அதை விட்டு நாமும் மனநிம்மதியை தொலைத்து, ஒப்பிட்டு பார்த்து ,அனுதினமும் கத்துவதில் நம் ஆரோக்கியமும், நமக்கும் குழந்தைகளுக்கும் உள்ள இடைவெளியும் குறைகிறது.

இன்று கேட்டது நாற்பது வயதிற்கும் குறைவாக பலரும் பலவிதமான பக்கவாதத்தில் இறப்பது,இது போன்ற மனஅழுத்தாலோ, யாரும் எதையும் மாற்றமுடியாது.ஓடி ஓடி கடைசியில் எதை பிடித்தோம். 

சமூக ஊகடத்தின் தாக்கம் பலரையும் ஆட்டி படைக்கும் சூழ்நிலையில்,இன்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கொண்டு வந்த சட்டம் வரவேற்க தக்கது.சமூக ஊகடத்தை பதினான்கு வயதிற்கு கீழ் உள்ளவர் பயன்படுத்த கூடாது என.  

ஒவ்வொரு பிள்ளைகளும்,பிறப்பும் தனித்துவமானது தானே!

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...