இன்றைய நகைச்சுவை
கல்யாண வீட்டுக்காரர் ஒருவர், இரு நாட்கள் கழித்து தன் நண்பரிடம் அலைபேசியில், தன் வீட்டு திருமணத்தைப் பற்றி விசாரித்தார்.
"சார் ! நம்ம வீட்டு கல்யாணம் எப்படி இருந்தது?"
"அதற்கென்ன! மிகவும் சிறப்பாக நடந்தது. சாப்பாடும் அருமை!"
என பதிலளித்தார் நண்பர் .
" ஓ! ரொம்ப நன்றி. உங்க மனைவி என்ன சொன்னார்?" என்று மீண்டும் அவர் விசாரிக்க,
" அவளும் கல்யாணம் சிறப்பு என்று சொன்னாள். அதுவுமில்லாமல் கடந்த ஒரு வாரமாக சென்ற விசேஷங்களில் கிடைத்த தேங்காய்களுள் உங்கள் தேங்காய் தான் பெரியதாக இருந்ததாகவும் சொன்னாள்"
என்று சொல்ல, விசாரித்தவர் பல்லை இளித்து அலைபேசியை வேகமாக துண்டித்தார்.

No comments:
Post a Comment