கைகள் இணைந்த பின்
முகங்கள் பதிந்த பின்
முத்தங்கள் பரிமாறிய பின்
வார்த்தையும் கொள்ளுமோ?
உடல்களும் அன்னியப்பட்டு விடுமோ?
உயிரும் விலகுமோ?
யாருக்கான உலகம் இது
நமக்கானது தான் என்று சொல்ல
துடிக்குது இதயங்கள்
தேவைக்கு என்றும் விடையாவது வார்த்தைகள் மட்டுமல்ல,
உடலும் தான்
தேவையில்லா வார்த்தைகளை புறந்தள்ளிய இரு முகங்கள்
இல்லை இல்லை
இரு மனங்களும்
கொள்ளை போனது
ஸ்பரிசம் என்ற உணர்வுக்கு
முகம் புதைக்க இடம் தேடிய மனங்கள்
பரிமாறிக் கொண்டது தம்முள்
இதமாய் , பதமாய்
கோர்வையானது கரங்கள் மட்டுமே
மனமும் இடம் மாறிய பின் தொடர்வது
வார்த்தைகள் அல்ல
ஒளிரும் சுடரும் கவ்வியது இருளை
மெய் தீண்டும் முன்
பிறப்பதும் அமைதியே !

No comments:
Post a Comment