அழகாய் சிரிப்பது நிலவு மட்டுமல்ல அதில் காணும் யதார்த்த வடிவங்கள் தாம்
இன்றைய சிந்தனை
1) விதை பெரியதானாலும் சிறியதானாலும் அதில் பிறக்கும் தாவரம் தரும் பலன் என்றுமே தனித்துவமானது
2) மனைவியின் இழப்பால் கணவனுக்கு கிடைப்பது வெற்றிடம் கணவனின் இழப்பால் மனைவி தேடுவது புகழிடம்
3) சுவர் : மனிதனின் தனிமைக்காக உருவாக்கப்பட்டது தான் சுவர்
4) விடை தேடி அலையும் கேள்விகளுக்கு காரணம் ஒன்று இருக்கும் அவரவர் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியாது என்பது இல்லை வாழ்வில், தெரியாது என்ற வார்த்தையை பிரயோகிக்காத வரை
5) உயர்வாக நீங்கள் இருப்பதை விட அடுத்தவருக்கு உதாரணமாக இருந்து காட்டுங்கள். அடுத்தவர் வாழ்வு சிறக்கட்டும்
6) பிறருக்காக என்று செய்யும் செயலில் நாம் நம்மை தொலைக்கிறோம் என்பதே உண்மை
7) உண்மையின் தத்துவத்தை சொல்ல பாடங்கள் கற்க வேண்டியதில்லை. சிறந்த கருத்தும் மொழியறிவும் போதும்
8) அழுத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயானா லும் அதற்கு முதல் பசியையும் கற்றுக்கொடுக்க வேண்டும் வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்திக்கவும் சமாளிக்கவும்
9) துன்பத்தை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள். அதை நினைத்து வருத்தபட்டாலும் அந்த துன்பம் உங்களை விட்டு விலகவும் காலம் எடுத்து கொள்ளும்
10) நியாயத்திற்காக வாதாட வேண்டும். அந்த வாதமும் நியாயமாக இருக்க வேண்டும்
11) மெய்யே மெய் இல்லை என்றான பின் மெய்யை மெய் கொண்டு போற்றுவதும் வேண்டுமோ?
12) கண்ணாடியும் அதில் தெரியும் பிம்பம் போன்றது நம் உணர்வும் முகமும். உணர்வு எப்படியோ அதையே பிரதிபலிக்கும் நம் முகம்.
13) பிறர் பார்வைக்கு எப்போதும் நாம் தவறாக தெரிந்தால், தவறு நம் மீது தான். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நாம் தவறாக தெரிந்தால் அவர்கள் பார்வையில் தான் தவறு.
14) அழகு : ரசனையும் ரசிப்பும் கொண்ட இடம்
15) இறந்த காலத்தில் நடந்தவையை நிகழ்காலத்தில் கடப்பதற்குள் எத்தனை வருத்தங்கள், வலிகள்? மறதி ஒன்றே வழி, எதிர்காலத்தை கடக்க.
16) இல்லம் , உறவுகளின் பிணைப்பு உணர்வுகளின் பிரதிபலிப்பு.
17) சங்கிலி போன்றது உறவு. உராய்வு கொள்ள கொள்ள தேயும் சங்கிலியும் உறவும்.
18) நீரில் மிதப்பது துளசியே என்றாலும், ஒருநாளுக்கு மேல் அது தண்ணீரில் இருந்தால் , துளசி அழுகி அந்த நீரின் சுவை மாறிவிடும். அது போலத்தான் உறவுகளும்
19) கிடைக்குமா என்ற ஏக்கத்தில் சிலர் கிடைத்தது நிலைக்குமா என்ற நிலையில் பலர்
20) நல்லவனாக இருக்கும் போது பெயரை உச்சரிக்க தவறும் மனித மனம், கெட்டவனாக மாறும் போது மட்டும் வாயை பூட்ட மறுப்பதேன்
21) வெற்றியும் தோல்வியும் சமமே. தோல்வி வாழ்வின் சுடரை ஏற்ற, வெற்றி வாழ்வின் சுடரை மெருகேற்ற
22) உழைப்பிற்கான வேர்வைதுளி அவரவருக்கு தரும் மகிழ்ச்சியான மழைத்துளி
23) பிறருக்கான அழுகையும் வலியும் அவர்கள் உணராத போது அவை என்றும் வீண்.
24) கடந்து விட்ட வாழ்வில் கரைந்து போன நிஜங்கள் என்றும் நினைவுகளே
25) காகிதங்கள் பெட்டகமாகவும் போது அதன் எழுத்துக்கள் பொக்கிஷங்களாகும் பின்னாளில்
26) நம் வலிகளுக்கு மருந்தாகும் அடுத்தவர் வலியை உணர்கையிலே
27) கண் கொண்டு பார்க்கும் காட்சி யாவும் அழகே! அதன் உண்மை மறந்தால் வாழ்வில் பின்னோட்டம்
28) திருப்தி அடையாத வாழ்வு மேன்மை அடைவதில்லை
29) பொறுத்து போகிறவர்களுக்கு சுமை அதிகம். பிறரை காயபடுத்துவோருக்கு மறதி அதிகம்
30) சுகவீனமான போது பக்கம் இருக்கும் ஒளடதம், சுகமான பின் எட்டி வைக்கப்படும்.
31) குளத்தில் எறிவது ஓர் கல்லேயானாலும் அதனின்று காணும் அதிர்வலைகளே கல் எறிந்தவர் கொள்ளும் வெற்றி
32) காலம் பின்னோக்கி சென்றால் நினைவுகளின் நிகழ்வுகள் இருக்கும். ஆனால் அதை உணர முடியுமே தவிர அனுபவிக்க முடியாது.
33) தேவையில்லாத இடத்தில் காய்ந்த சருகாய் இருப்பதை விட தேவையுள்ள இடத்தில் உரமாய் இருப்பது நலம்.
34) ஒன்றை இழந்த பின் அதனால் விளையும் நன்மையை கொடுத்தவரால் சுவீகரிக்க முடியாது
35) கண்ணீர், பெண்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல ; ஆண்களுக்கு விதிவிலக்குமல்ல
36) ஒருவன் அடுத்த மனிதனுக்கு பயப்படாவிட்டாலும் தன் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும்
37) இருட்டில் சில மணித்துளிகள் இருந்தால் அதிலும் ஒரு வித வெளிச்சத்தை உணர முடியும். அதுபோல் தான் வாழ்க்கையும்
38) கிடைக்குமா என்ற ஏக்கத்தில் சிலர் கிடைத்தது நிலைக்குமா என்ற நிலையில் பலர்
39) எதுவும் சிறப்பே, பிறரை பார்த்து புன்முறுவல் பூப்பதும் பிறரை சிரிக்க வைத்து பார்ப்பதும்
40) கலைஞன் என்பவன் ஒவ்வொரு நாளும் புது மாணவனே! தான் வடிக்கும் கலையில்
41) ஒருவன் அடுத்த மனிதனுக்கு பயப்படாவிட்டாலும் தன் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும்
42) படித்த நல்லவை யாவும் நம் வழக்கமானால் வடுக்கள் இல்லை
43) உதிர்ந்த , காய்ந்த பூக்கள் கூட மெத்தையாகும் முள் படுக்கையை விட
44) நினைவுகள் அலாதியானது அதை நினைக்கும் தருணம் அமைதியானது
45) அம்மாவின் புடவை திரைச்சீலையானது என் வீட்டு வாசலில் அவளும் சிலையானால் என் மன கோட்டையில்
46) எந்த ஒரு நிகழ்வின் பயணமும் தொடரும் என்பதை அறியாத ஓர் புள்ளியே ஆரம்பம்

No comments:
Post a Comment