இரு வீட்டாரின் சம்மதம் இங்கே
இரு மனங்களின் சங்கமம் அறியாமல்
முகூர்த்த புடவையும் வேட்டியும் சொல்கிறது இணைவோம் என்று
நடுவில் மங்கலத் தாலியோடு
கட்டும் மணமகனுக்கு உண்டு சுதந்திரம் கட்டிய பிறகும்
அதில் பெண்ணுக்கு மட்டுமே அங்கீகாரம் மாங்கல்யம் என்ற பெயரில்
சுதந்திரம் சூறையாடப்பட்டு அவள் விடுதலைக்காக ஏங்கும் தினங்களும் உண்டே!
பூவும் பொட்டும் பெண்ணின்
அடையாளமாவதும்
ஆணுக்கு ஏதும் மாறுதல் இல்லை இங்கே
மணமேடை மாறுதலாய் அமைவதும் உண்டு
சில இடத்தில் கட்டாயம்
சில இடத்தில் நிதர்சனம்
சில இடத்தில் மறுப்பு
மணநாளின் இறுதி வரை கைமாறுவான் வெள்ளையப்பன் மணவீட்டாரிடையே
இரு மனங்கள் இணைய ஆடம்பரம்
தேவையில்லை அன்பு மட்டுமே
நிலைக்கும் என்றும் தாம்பத்தியம் என்ற பெயரில்
முதல் நாளிலேயே ஆரம்பம் ஆணின் ஸ்பரிசம்
மெல்ல மெல்ல ஆதிக்கம் கொள்ளும் சொல்லிலும் செயலிலும்
வருடல்கள் கூட வேண்டும் எல்லையும் மீறாமல்
உடலின் விருப்பம் அங்கே தீண்டலில் முடியுமோ?
இல்லை
ஒருவரை ஒருவர் மனதால் தீண்டினால் மட்டுமே சாத்தியம்
புற அழகு காட்டும் பொறாமை கொள்ள
அக அழகு மட்டுமே உரைக்கும் பொறுமையுடன் வாழ்வை கடக்க
சந்ததி உருவாக ஆதிக்கம் கூட போதும்
சாந்தம் உருவாக மனதில் உறுதி வேண்டும்

No comments:
Post a Comment