நெஞ்சில் கை வைத்து என் மனதை தொட்ட இனியவளிடம்
நானும் சொன்னேன் என்
முதல் காதலி நீயென்று
அழகாய் முறைத்தவளிடம்
நான் சொன்னேன்
இல்லை நீ மூன்றாம்
காதலி என்று
ஆமோத்திதவள் தன் முகபாவனை காட்டி
யார் என்று கேட்டது
எனக்கு புரிந்தது
சொன்னேன் நானும்
முதல் காதலி
என் தாயென்றும்
இரண்டாம் காதலி
அலைபேசி என்றும்
எனில் எனக்கும் நீ
மூன்றாம் காதலன்
என அவள் சொல்ல
யாரென்று தெரிந்து கொள்ள நான் எத்தனிக்க
அது என் பெற்றோர்,
நான் தாயை தந்தையாகவும்
தந்தையை தாயாகவும் பார்த்ததால் நீ
மூன்றமாவன் என்றாள்
இச்சிந்தனை என்னுள் வாராதது ஏனோ?
பெண் எப்போதும் சிந்தனையில் வலுத்தவளோ?
அனைவரையும் கவர்பவளோ?
சிந்திக்க வைத்த அவள்
என்றும் என் தாயினிடத்தில்
என்றும் முதல் காதலியாய் பூப்பாள்.

No comments:
Post a Comment