தலையை மட்டும் அசைத்து பழகவில்லை நாங்கள்
உடலையே அசைக்கிறோம் எங்கள் படைப்பாளியின் கைவண்ணத்தில்
இரவும் பகலும் கொண்ட நாளில் கறுப்பு வெள்ளையாய் உருவாகவில்லை
வண்ண வான வாழ்க்கைக்காக பரிசாகிறோம் உங்களுக்கு மன இருள் விலக்க
தொட்டால் அசைவேன்
அசைந்தால் சாய்வேன்
சாய்ந்தாலும் வீழ மாட்டேன்
என்னில் படைத்தவனின் அறிவும் அறிவியலும்
புகுந்ததால்
வண்ணம் பல தீட்டினாலும் தெரியாத சோகம் என்னுள்ளே இசைக்கிறது
அது என் தவறல்ல
என்னை படைத்த
கலைஞனின் சோக கீதம் அவன் கை வண்ணத்தில்
உயிரற்ற நானும் தலையசைத்தேன்
உடலசைத்தேன்
களிமண்ணும் கதை பேசியது சிறுவ சிறுமியரிடத்து
சமதளத்தில் இருந்தால் சாய்மானம் வேண்டும் உலகில்
சற்றே வித்தியாசப்பட்டவர்கள் நாங்கள்
இணை பிரியா தம்பதிகள் நாங்கள் படைத்தவன் மற்றும் கொண்டவணின் கரத்தினிலே

No comments:
Post a Comment