Tuesday, May 14, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



  தலையை மட்டும் அசைத்து பழகவில்லை நாங்கள்

உடலையே அசைக்கிறோம் எங்கள் படைப்பாளியின் கைவண்ணத்தில்

இரவும் பகலும் கொண்ட நாளில் கறுப்பு வெள்ளையாய் உருவாகவில்லை

வண்ண வான வாழ்க்கைக்காக பரிசாகிறோம் உங்களுக்கு மன இருள் விலக்க

 தொட்டால் அசைவேன்

அசைந்தால் சாய்வேன்

சாய்ந்தாலும் வீழ மாட்டேன்

என்னில் படைத்தவனின் அறிவும் அறிவியலும் 

புகுந்ததால்

 வண்ணம் பல தீட்டினாலும் தெரியாத சோகம் என்னுள்ளே இசைக்கிறது 

அது என் தவறல்ல 

என்னை படைத்த 

கலைஞனின் சோக கீதம் அவன் கை வண்ணத்தில்  

உயிரற்ற நானும் தலையசைத்தேன்

உடலசைத்தேன் 

களிமண்ணும் கதை பேசியது சிறுவ சிறுமியரிடத்து

 சமதளத்தில் இருந்தால் சாய்மானம் வேண்டும் உலகில்

சற்றே வித்தியாசப்பட்டவர்கள் நாங்கள்

 இணை பிரியா தம்பதிகள் நாங்கள் படைத்தவன் மற்றும் கொண்டவணின் கரத்தினிலே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...