Friday, May 24, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


 மீனா இல்லை நாளைய மனிதனா தெரியவில்லை

 Vidhya Nivash: காற்றில் உயிர்நிலைப்போய்!

மண்ணில் உயிர்நிலைப்போய்!

நீரிலும் உயிர்நிலைப்போய்!


கடைசியில் இந்த உயிரை காக்கும் துயிர்நிலையை உடலில் சுமந்து நிலாவில் நடந்தால் என்ன பயன்!

Vidhya Nivash: பூமி காலி

நிலாவிற்கு இல்லை போகும் வழியில் எதாவது கிரகம் போவோம் வாங்க!

Vidhya Nivash: முறுக்கு ,சீடை,புளிச்சோறு போய்!

சப்பாத்தி,ரொட்டி,ஊறுக்காய் போய்!

பர்கர்,சாஸ்,சீவல்கள் போய்!

காற்று,நீர்,மண் மட்டுமே உண்ண கையில் தூக்கி செல்லும் காலமோ!


Akhila: இலவசம் கொடுத்த அவலம்!


நிலத்தடி நீரை ஆனமட்டும் உறிந்து காசாக்கிய ஜந்து இவன் தான் !

பூமிப் பந்து கொடுத்த பரிசு - இந்த அரிய வியாதி… 

பலரின் பழி சுமந்து, இன்று நீரை சுமந்து திரிகிறான்!

அந்தோ பரிதாபம் என எண்ணாதீர்- 

“இந்தா.. இவனைப் பார்! 

இயற்கையை மிதித்தவனுக்கு நேர்ந்த கதி.. “

எனக் காட்டுங்கள் இவனை உலகுக்கு!


Veena Shankar: பிராணத்தை காக்க வேண்டி புறப்பட்டது ஓர் உயிர், தாகம் தீர்க்கும் தண்ணீரோடும் சுவாசத்தை மீட்க பிராண வாயுவோடும்


Kiruthika : எல்லாம் ..

எனக்கு -

வேண்டும் வேண்டும் 

என-

சுரண்ட ...சுரண்ட..

கடைசியில்...

என்னை காக்க 

என்னால் மட்டும் முடியாதே ..!...

என -

தான் அழித்த

இயற்கையிடம் மன்றாடி -

கடைசியில்

செயற்கையிடம் 

கடன் வாங்கி ...

இருப்பு இருக்கும்வரை 

மட்டும் -

இருந்து விட்டு 

போகிறேன் என 

தலை குனியும் ..

அவலம் - தான் 

நாளை ..???!!!..


நினைக்கவே 

பதறுகிறது..!...

நேரும் போது -

எப்படி துடிக்குமோ 

இதயம் ?!...


ஜீரணிக்க -

பழரசம் கூட இல்லை ..

தாம் செய்த 

பாவம் தான் இருக்கும் -

அப்போது !..


அதுவும் 

ஜீரணிக்க இயலாது...

இதயத்திலும் கல்லா..?..

என வியக்குமோ ...

மருத்துவம் ..????!!!..

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...