மீனா இல்லை நாளைய மனிதனா தெரியவில்லை
Vidhya Nivash: காற்றில் உயிர்நிலைப்போய்!
மண்ணில் உயிர்நிலைப்போய்!
நீரிலும் உயிர்நிலைப்போய்!
கடைசியில் இந்த உயிரை காக்கும் துயிர்நிலையை உடலில் சுமந்து நிலாவில் நடந்தால் என்ன பயன்!
Vidhya Nivash: பூமி காலி
நிலாவிற்கு இல்லை போகும் வழியில் எதாவது கிரகம் போவோம் வாங்க!
Vidhya Nivash: முறுக்கு ,சீடை,புளிச்சோறு போய்!
சப்பாத்தி,ரொட்டி,ஊறுக்காய் போய்!
பர்கர்,சாஸ்,சீவல்கள் போய்!
காற்று,நீர்,மண் மட்டுமே உண்ண கையில் தூக்கி செல்லும் காலமோ!
Akhila: இலவசம் கொடுத்த அவலம்!
நிலத்தடி நீரை ஆனமட்டும் உறிந்து காசாக்கிய ஜந்து இவன் தான் !
பூமிப் பந்து கொடுத்த பரிசு - இந்த அரிய வியாதி…
பலரின் பழி சுமந்து, இன்று நீரை சுமந்து திரிகிறான்!
அந்தோ பரிதாபம் என எண்ணாதீர்-
“இந்தா.. இவனைப் பார்!
இயற்கையை மிதித்தவனுக்கு நேர்ந்த கதி.. “
எனக் காட்டுங்கள் இவனை உலகுக்கு!
Veena Shankar: பிராணத்தை காக்க வேண்டி புறப்பட்டது ஓர் உயிர், தாகம் தீர்க்கும் தண்ணீரோடும் சுவாசத்தை மீட்க பிராண வாயுவோடும்
Kiruthika : எல்லாம் ..
எனக்கு -
வேண்டும் வேண்டும்
என-
சுரண்ட ...சுரண்ட..
கடைசியில்...
என்னை காக்க
என்னால் மட்டும் முடியாதே ..!...
என -
தான் அழித்த
இயற்கையிடம் மன்றாடி -
கடைசியில்
செயற்கையிடம்
கடன் வாங்கி ...
இருப்பு இருக்கும்வரை
மட்டும் -
இருந்து விட்டு
போகிறேன் என
தலை குனியும் ..
அவலம் - தான்
நாளை ..???!!!..
நினைக்கவே
பதறுகிறது..!...
நேரும் போது -
எப்படி துடிக்குமோ
இதயம் ?!...
ஜீரணிக்க -
பழரசம் கூட இல்லை ..
தாம் செய்த
பாவம் தான் இருக்கும் -
அப்போது !..
அதுவும்
ஜீரணிக்க இயலாது...
இதயத்திலும் கல்லா..?..
என வியக்குமோ ...
மருத்துவம் ..????!!!..

No comments:
Post a Comment