ஏழையின் உணவு இன்று அங்கீகாரம் பெற்றது உணவுக்கூடத்தில்
ஆரோக்கியம் என்ற பெயரில் பணக்காரர் வீட்டிலும்
உன் நிலை ஏற்றம் பெற்றதால் ஏழை மாணவனும் வயிறார மகிழ்ச்சியில் உண்டான் பணக்காரர் வீட்டு உணவு தனக்கு
கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் கொள்ளாமல்
உணவே?
ஆக்கமும் நீயே!
நாவின் ஆவலால் உனை உண்ணும் போது அழிவும் நீயே
மானிட உடலுக்கு
நிறத்தில் இல்லை நாம் கொள்ளும் உணவு
தேவையான அளவு
நித்திரை கொள்ள செய்தால் போதுமடி
உணவும் மருந்தே!
அதை சரி விகிதத்தில் உண்ணும் போது
மண் என்றும் மனிதனை கைவிடாது
அது உழவானாலும்
அவன் குடிக்கும் கூழானாலும்

No comments:
Post a Comment