கவிதைகளா! கேள்விகனைகளா!
மாடுமேய்தல் கல்வி
மாடுமேய்தல் தவம்
மாடுமேய்தல் ஞானம்
- வைரமுத்து
அழகான ஆழமான கருத்துக்களின் குவியல்,கவிதையாக....
வைரமுத்து அவர்களின் புத்தக்கத்தை படித்ததின் தாக்கம் எதோ எழுத சொன்னது...
"இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல" எந்த பூக்கள் தான் விற்பனைக்கு செல்ல ஆசைப்படும்...
முதலீட்டாளனின் கைகளில் அவற்றின் வாழ்வும் சாவும்..
அடிமனதில் மடிந்து கிடக்கும் நெருப்பை கிளறும் மண்வெட்டியாக அவன் வார்த்தைகள் படையெடுக்க..
அவளுடைய மௌனத்திற்கு அவனுடைய கோபம் இரையாகிக் கொண்டிருந்தது...
சவப்பெட்டிக்கு ஏன் ஜன்னல் இல்லை!
புதைத்த உடலை அரிக்கும் மண்ணும்,புழுவும் கவனத்தில் கொள்ளுங்க !
அதன் அடங்கா ஆசை உங்களை அரிக்க போகுது!
இமை மூடிய விழிகள் திறக்க எங்கும் மழை சாரல் விழ நடுசாமத்தில் கனவல்ல நிஜம் ஜன்னலில் வழிவந்த அழையா விருந்தாளி..
பசியின் மயக்கத்தில் அடுக்களையில் அன்னை தந்த விருந்து சுண்ட வைத்தது ஆனாலும் அமிர்தம்..
யாரது கதவை திறங்க நான் லட்சுமி வந்திருக்கேன் .தேவைக்கு வராத நீ! இப்போது உன் வருகை தேவையற்றது.
செல் உனக்காக காத்திருப்பவர் இடம்..
மழைக்கு ஒதுங்கிய ஆடும் பாடியது அவன் இசை மழையில் நனைந்து..

No comments:
Post a Comment