Tuesday, May 21, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


பொத்தி பொத்தி வளர்க்கிறோம் 

அடைக்காப்பதில்லை ஆனால் சரியான 

 அடைக்கலமும் கொடுப்பதில்லை!

கரு கணித்த நேரத்திலிருந்து பிறக்கும்

 வரை இருந்த பொறுமை வளர்ந்த பின்

 எங்கே போனது!

மனிதனை தவிர எந்த ஜீவராசியும் அதன்

 குழந்தைகளை  வளர்ப்பதில்லை !

 கெடுப்பதில்லை, பிறந்த மறுகணமே

 சுதந்திரமாக,தன்னிச்சையாக

 வளர,போராட ஆரம்பிக்க !

ஏன் இவர்கள் மட்டும் இப்படி!

ஒன்று அதிகபடியான அக்கறை 

இல்லையேல்

 நடுரோட்டில் ...

இணைந்த கைகள் இணைந்தே

 இருக்க நாங்களும் ஓர் காரணம்!

அதை ஏன் மறந்து எங்களையும்

 மறுக்கிறீர்கள்!


1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...