Tuesday, April 29, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


மௌனம் ஏனோ?

தனிமை வாட்டியதாலா?

கலக்கம் ஏனோ?

எதுவும் கை நழுவி போவதாலா?

சுணக்கம் ஏனோ?

மனதில் சுகவீனம் என்பதாலா?

பலவீனம் ஏனோ?

தோள் கொடுக்க யாருமில்லாததாலா?

இருளும் ஏனோ?

மனம் மங்கியதாலா?

தவிப்பும் ஏனோ?

பாதை உணராததாலா? 

திகைப்பும் ஏனோ?

திறமை மடிந்ததாலா?

எதுவும் கேள்வியே இங்கே

அன்றி விடை தேடி

அலையும் மனிதருக்கு

முற்றுப்புள்ளி என்பதில்லை இங்கே

- Veena 

உன் ஒளியில் என் நிழலை விழுங்கினாய்..

சுட்டெரிக்கும் உன் ஒளியில் சங்கமமாக கொஞ்சம் இடம் கொடு தஞ்சமடைய தவிக்கும் காதலன்..

வா உனக்கான பாதையை வஞ்சமில்லாமல் விட்டு, உன் வருகைக்கு காத்திருக்கும் அன்பாளன்..

- Vidhya 

Monday, April 28, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஏந்தும் கரங்களில் 

நிறையா நீரும்

நம்மை ஏங்க வைத்து எதிர்ப்பார்க்க வைப்பான்


அண்டம் சூழ அவன் இருந்தாலும் தன் தேவை நோக்கவே

ஆவலாய் இருப்பான்


கரையும் யாவையையும் கரைப்பான்

நம்மில் மட்டுமே கரை சேர மறுப்பான் 


அவன் திறவுகோலும் நம்மிடமே !


முகில் உதிர்க்கும் யாவையும் அணைத்து ஓரிடம் சேர்த்தால் முழுமை கொள்ள கூடுமே!


நிலைகள் பல கொண்டாலும் அவன் பயன் என்றும் சங்கமமே!


வயிற்றுக்கு சோறும் தாகத்திற்கு நீரும்

தேடுவது நம் உடலே!


நீந்துபவனை அடக்கி ஆளும் மனம் நம்மிடம் 

இல்லையென்றால்

அவனும் நம் வசமே!


என்றும் அவன் வாழ்வதும் வீழ்வதும் நம்மிடமே!


அதற்கு தேவை நம்மிடம் சிக்கனமே!

-Veena 

ஒவ்வொரு துளியிலும் ஒளிந்திருக்கும் உலகு கண்ணாடி போல் மிளிருது..

 துளி துளியாய் பெருகும் நீரில் உருவெடுக்கும் புது உலகு..

சிறு துளி, புது மழை ,புது எண்ணம் ,சிறு சேமிப்பு ,புது வழி, புதியதோர் உலகு ஒவ்வொரு கையிலும் தவிழ காத்திருக்கு..

 கோடைக்கு ஏத்த குளுகுளு பந்து எடுக்க எடுக்க குளிர்ச்சி,மகிழ்ச்சி.

- வித்யா

Sunday, April 27, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 வாழ்வில் எண்கள் 


வாழ்வை இயல் எண்களாய் தொடங்கி


காதலில் பிரிக்க முடியாத பகா எண்களாய் விளங்கி


அங்கே எதிர்நோக்கும் இன்னல்களை பகு எண்களாய் பிரித்து


நம் வாழ்வின் இறுதியில் முழு எண்களாய் மாறி பெருமை கொள்வோம்

 வாழ்க்கை பயணிக்க தேடும் செல்வம் 

பயணம் முடிந்த பின்னும் தேவைப்படும்

பலவித சடங்கிற்காக

அதைக் காண உயிர்

இல்லையென்றாலும்

ஆன்மா தேடுவதாய் சொல்லும் 

பல உயிருள்ள ஆன்மாக்கள்

 வாழ்க்கை சக்கரம் ஓட 

காலில் சக்கரம் கொள்ள வேண்டும்

கை நிறைய பணம் சேர்க்க

கரங்கள் நிறைய துணி வேண்டும்

என்றே நினைப்பார் 

தையல்காரார்

 வாழ்வின் துணையும்

வாழ்க்கை துணையும்

அமைவது சிறப்பே

வாழ்க்கை சக்கரம்

இனிதாய் சுழல

 நாள்தோறும் சுறுசுறுப்பான இளைஞன் 


ஆடைகளை தைக்கும் கலைஞன் 


புதிதாய் உருவாக்குவதில் கவிஞன்


தவறுகளை திருத்தி அமைக்கும் அறிஞன் 


இயந்திரத்தையும் கையாளத் தெரிந்த பொறிஞன்


தன் வலையில் பிறரை சிக்க வைப்பதில் வலைஞன்

- Veena 

மெல்ல மிதிக்க ஓடும் சக்கரம்

 வாழ்க்கையும் சேர்ந்து நகருதே

 இருவரின் கூட்டு முயற்சியில்

 வறுமையை மிதிக்க,

 வெறுமையை வெல்ல,

 சிக்கனமும், கடின உழைப்பும்

 தந்த பரிசு சுவரில் தொங்கும்

 புகைப்படம் சொன்னாலும் சாகும்

 வரை நில்லாமல் ஓடும் கூட்டணி, 

இது யாரும் தடுக்க முடியாத 

இனிமை, வாழ்க்கை ரகசியம்!

உழைப்பு!

- வித்யா

Thursday, April 24, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



புத்தர் மரத்தின் இலையில் சுவாசமா இல்லை மரத்துக் கிளையில் தொங்குகிறாரா


 ஓர் மரத்தில் ஓர் கிளையில்

ஓர் இலையில் ஓர் காம்பில் மலரும்

ஓர் பூவாய்

அதில் வரும் ஓர் காயாய்

அதுவே பின் ஓர் கனியாய் உருமாருவது போலே

ஓர் தாயின் ஓர் கருவறையில் 

ஓர் கருவில் ஓர் உயிராய் ஜனித்து 

வளரும்

ஓர் சிசுவாய் 

ஓர் நாளில் பிறந்து

இப்புவியில் ஓர் மனிதனாய் வளர்ந்து

ஓர் துணையை கொண்டு

 மாறுவதில் தான்

எத்தனை இன்னல்கள்

வேண்டுவதே ஓர் வரமே! அந்த 

ஓர் உயிரும் மெய்யிலிருந்து 

இனிதாய் வெளியேறும் வரை

பல இன்னல்களும் ஓர் சுகமே!

- Veena 

தவத்தின் வலிமை பெரிசா?

மரத்தின் வலிமை பெரிசா?

இரண்டுக்கும் ஒற்றுமை

 பொறுமை!

மண்ணில் வேரூன்றி,

மனதில் வேரூன்றி..

சுற்றியுள்ள சூழ்நிலையை

 அடக்கி, 

சுற்றியுள்ள சூழ்நிலைக்கேற்ப...

பஞ்சபூதத்தின் ஆட்சி,

ஐம்புலன்களின் வேட்கை..

- Vidhya 


Wednesday, April 23, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 நாட்களும் திரும்புமா?


தாயின் கருவறையில் உள்ள போதே

கேட்ட தாயின் மொழி

உலகத்தின் மண்ணை தொடும் போது கேட்ட அழுகை

மகிழ்ச்சியில் உறவினர்களின் ஆரவாரம்

பிறந்ததும் சிறப்பாய் துயில தொட்டில் 

மழலையில் அனுபவித்த தாயின் மடி 

மணமுடித்த பின் அனைத்துக் கொள்ள துணையின் மார்பு

ஏதும் சொர்க்கமே அவ்வவ் பருவத்தில்

தாண்டி வந்ததை

மீண்டும் எதிர்ப்பார்த்து காக்கவும் இயலுமோ?


 தூளியில் துயில் கொள்ளும் அமைதியாய்

துள்ளி எழுந்த பின்

தூலியும் துயிலும் துறக்குமே!

- Veena 

பிஞ்சு விரல்கள் பஞ்சு போன்ற

 மென்மை,குழந்தையின்

 துயிலும், அமைதி வழிந்தோடும்

 வீடும்,மறுப்பக்கம் அன்னையின்

 போர்க்களம் இரண்டு கைகளில்

 பத்து வேலை செய்யும் நேரம்..

தாயின் கதகதப்பை தரும்

 தொட்டில் ,பல நேரம்

 உல்லாசமாக உறங்க,சில நேரம்

 துள்ளி விளையாட அவளின்

 வாசனை வீசும் வாசம்!

- வித்யா

Tuesday, April 22, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

  


ஊர்தியின் மேல் ஊர்தி 

யாரும் எப்போதும் உதவி செய்வர் 

அடுத்தவர் நிலை இழக்கும் போது


 எளியவர் வலியவர் எவரும் இல்லை

ஓவியனின் எண்ணத்தில்

அவன் தூரிகையே வலியது என்பதால்


 தாங்கும் பொருள் எது என்பது ஒரு பொருட்டல்ல

தாங்கும் சக்தியும் மனதுமே பெரியது


 வஞ்சம் இல்லா நெஞ்சம் 

தஞ்சம் கொள்ள அன்பு மனம் போதும்

அஞ்சுதல் இல்லை ஆங்கே

கெஞ்சுதல் விரும்பா இடத்தில்

- Veena 

குரங்கில் கண்டேன் 

கங்காருவில் கண்டேன்

மனிதனிலும் கண்டேன்,

வியந்தேன்!

அவை நடைபழகும் வரை மட்டுமே

 சுமக்கும்,ஆனால் பிள்ளைகளின்

கனவை சுமக்கும் மனிதன்,சாகும்

 வரை இறக்கி வைக்க

 மறப்பதில்லை!

ஆனால் அவர்கள்

 சுமைதாங்கியை மறந்து

 விடுகின்றனர்!

- Vidhya 

Monday, April 21, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பாதை இரண்டானது

இதயம் இரண்டு பட்டதாலே

மன விரசல் பல ஆகும் முன்னே

அடைப்பதும் எளிதே

சமாதானம் எனும் மருந்தாலே

மருந்தும் கசக்கும் சில நேரமுமே

எதுவும் குணமாகும் அதனாலே

வழிகள் பல உண்டு வலி தோன்ற

அதை ஆற்றும் வழிகளிலும் பல உண்டே 

மருந்தும் காயத்தின் தன்மை பொறுத்தே

பிணக்கு கொண்ட மனமும் மணக்கும்

அன்பு எனும் அறிவாலே

நன்மை தீமை பிறர் தர வாரா 

கையடக்க இதயம் பேணுவதும் சிறப்பே


 இணை கோடுகள் அல்ல வாழ்க்கை 

நம்மை நம்முள் இணைத்துக் கொண்டு வாழ்வதே


 பாதைகள் இரண்டாக பிரிந்தாலும் 

பயணத்தின் இடையில் முள் வரின்

கை கோர்த்து இணைவதே வசந்தம்

எவன் சுமக்கிறானோ அவனே முன்னோக்கி செல்வான் உடலால்


 கணவன் அவன் ஒருவனின் கனவின் உச்சகட்டம் இதுவே

வீடு, மனைவி, மக்கள்


தேடிய செல்வங்கள் கிடைப்பதைக் காட்டிலும் அதை தாங்குவதிலும் காப்பதிலுமே அழற்சி மற்றும் மகிழ்ச்சி

- Veena 

இரண்டு முட்களும் தனியாக

 சுற்றினாலும்,இரண்டின்

 பாதையும் மற்றொன்றை

 சார்ந்ததே,ஒன்று நின்றால் அது

 மற்றொன்றையும்  பாதிக்கும்

அதை சார்ந்த அனைத்தையும்

 துண்டிக்கும்,இரண்டும் சேர்ந்தே

 இருக்க வேண்டிய

அவசியமில்லை,தேவையான 

நேரத்தில் அவை இணையும்,

 அதற்காக ஒரு மணி நேரம்

 காத்திருக்கு,காத்திருப்பு

 பிரிவின் வலியை

உணர்த்தும்,அது மீண்டும் சேரும்

 அர்த்தம் இருந்தால்...

- வித்யா


Friday, April 18, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 நீதியும் தளர்ந்தது பொருள் உள்ளோரிடம்


 நீதி தேவதையிடம் வரும் வழக்குகள் யாவும்

அவளை மாற்றிவிட்டன அவளையும் விலைக்கு வாங்கி விட்டனர்


 நிரபராதி ஒருவன் வாழ்வில் ஏமாற்றம்

நீதி கண் விழிக்க வேண்டிய நேரத்தில்

நீதி தேவதை கண் விழித்தாள் 

பார்வை மாறியது

நீதி மறைந்தது


 வழக்காட யாருமில்லாததாலும் 

கையில் பணமில்லாததாலும் 

நிரபராதி அவனே குற்றவாளியானான்


 யாருக்கும் இல்லா பொறுப்பு இங்கே

உண்மையை உணர்ந்து சொல்ல

நீதி தேவதையின்

சொல்லும் தேவை தான் இங்கே

கறுப்பு புள்ளிகளின் முகம் காட்ட 

ஓர் விழி திறந்தாலும் 

பாரபட்சம் காட்டும் மனமும்

விதியின் வழியில் நீதியும் பூக்குமே

- Veena 

நீதி தேவதைக்கே சவாலா!

எவ்வளவு நேரம் கண்ணைக் கட்டி

 இருப்பது.

- Vidhya 


Tuesday, April 15, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஒற்றைக்கால் நடனம் இங்கே துணையோடு

கலையும் களைந்த பின்

சாதாரணமானவர்களே இவர்கள்

மனதார பாராட்டும் நெஞ்சம் கூட

கரம் சுருக்கி கொடுக்கும் தட்சணை 

இவர்கள் வாழ்விற்கு ஓர் துளியே

அரிதாரம் போட கூட

இது காணாத போது

வயிற்றுக்கு இங்கே கிட்டுமோ?

வாழ்ந்த கலைகள் பல மங்கி இங்கே

அவர் தம் வாழ்வை

மங்க வைத்தன

கிடைக்கும் சிறு பொருளையும் ஈட்டவே இங்கே

தெருவோர வித்தை


வித்தை தெரிந்து பயன் என்ன?

அரசியலில் வித்தை செய்யும் மனிதர்களிடத்தே 

இதுவும் சொல்லுமோ?

மனிதனை மதிக்க தெரிந்தால் மட்டுமே

வாழும் கலையும் மனிதமும்

- Veena 

பொம்மைகள் ஒவ்வொரு கலாச்சாரத்தின் வெளிப்பாடு அது வீட்டை அலங்கரிக்க மட்டுமல்ல வளர்ந்து வரும் அடுத்த தலைமுறைக்கு பண்பாட்டை மௌனமாக வெளிப்படுத்த..

சிலையாக நின்றாலும்,அதன் ஆட்டம் நிற்பதில்லை,அவை சொல்லும் கதைகளும் நிற்பதில்லை,காலம்காலமாக தொடரும் அரங்கேற்றம்...

- Vidhya 

Monday, April 14, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



வளர்ந்து தழைத்த மரத்தின் கீழே

தழைக்க காத்திருக்கும் குமரி

வரும் காதல் கொள்ளும் நெஞ்சுக்காக


மலர் வனத்தில் மலர

காத்திருக்கும் மலரும்

காதலனின் வருகைக்கா?

வெண்ணிலவும் வெட்கி மரங்களுக்கிடையே மறைய

மலரை ஆட்கொள்ள மன்மதன் வருவானா?

புன்னகைக்கும் மலர்களின் மேல் அமர்ந்த வண்டும் பறக்க ஆயத்தமாயின

மாயவன் மறவன் அவன் பதிவிற்காக

பகலென்றால் நிழல் தரும் மரங்களும் 

இரவில் காதலர்களை மறைக்க காத்து இருந்தன

வெண்மதி சற்றே இடம் பெயர 

வளர்மதியைக் காண

இளம்பரிதி 

உள்ளக் களிப்போடு வர

தன் மதி மயங்கினாலும்

செல்லமாய் சிணுங்கி 

அவனை விழிகளால் தன் வயப்படுத்த 

காதலர்களின் உள்ளத் தீண்டலும் 

மெய் தீண்டாலும் 

சுகமாய் 

அரங்கேற வேண்டி 

தன்னை அசைத்து கொடுத்து

இசை பாடின தாவரக் கூட்டங்கள்


 விழிகள் மூட மறந்தன

நிலவு தேய மறுத்தது

பூக்கள் உறங்க காத்தன

மரங்கள் இசைக்க தூண்டின

காற்று மெல்ல வீச தேகம் சிலிர்த்தது 

பூக்கள் சிரிக்க மனம் குளிர்ந்தது

நிலவு வெளிச்சம் தாகம் கூட்டியது

விழிகள் மெல்ல அயர 

உன் பார்வை ஒன்றே போதுமே 

இவையெல்லாம் மறுபடியும் நிலை மாற

- Veena 

நந்தவனமே அழகு, அதில் பூக்கும் ஒவ்வொரு மலரும் வெட்கும் அழகில் நங்கை !

வெண்ணிலவிற்கு கண் கூசும் அழகில், அவள் முகம் சிவக்க என்ன மாயம் செய்தான் அவள் காதலன்!

தாய்,தந்தை ஊட்டிய பால் சோற்றை தவிர ,அவன் காதல் தந்த  அழகில் மேலும் மிளிரிய முகம்!

நிலவொளின் அழகில் கொட்டிக்கிடக்கும் மலர்கள் பாட,வண்டுகள் வந்து ரீங்காரமிட, காற்றில் அசையும் ஒவ்வொரு இலையும் மேளம் கொட்ட,அவள் மாலை பொழுதில் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கிக் கொண்டிருந்தாள்!

Vidhya 

Sunday, April 13, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


குறைகள் உண்டு என்னிடம்

என்றும் நிறை காணும் பொறுப்பு உன்னிடம்

அழகு இல்லை என்னிடம்

இருந்தாலும் வேண்டும் ரசிக்கும் திறமை உன்னிடம்

பகுத்தறிவு சொற்பமே என்னிடம்

பட்டை தீட்டி சிறப்பாக்கும் செயல் உன்னிடம்

பாராட்ட ஏதும் இல்லை என்னிடம் 

கவிதை பாட வார்த்தைகள் பல உன்னிடம்

முடிவு தெரியா கேள்விகள் என்னிடம்

எப்போதும் விடை காணும் கூர்மை உன்னிடம்

தவிப்பிற்கு காரணம் என்னிடம்

தடையை விரட்டும் குணம் உன்னிடம்

குற்றங்கள் என்றும் என்னிடம்

அதை சமப்படுத்தும் சரித்திரம் உன்னிடம்

என்னிடம் நீ கொண்ட அறிவால் 

எதிர்ப்பார்ப்பு என்பதே இல்லை உன்னிடம்

- Veena 

ஒரு கேள்வி எழுப்ப பல கேள்விகள் உன்னை ஈட்டிப் போல் குத்தும்..

கேட்கும் முன் பல முறை யோசி!

யோசிக்காமல் பேசினால் உன்னை யோசிக்க விடாமல் பதில் கேட்டு பொம்மையாக வேடிக்கை காட்டும் உலகம்!

கடமையை கண்ணியமாக செய்கிறேன், பெரிய குறை ஒன்றும் இல்லை,நிறைவாக வாழ்கிறேன் என்று இருந்துவிடு.தப்பி தவறிக்கூட பிறரின் அக்கறையில் கேள்வி கேள்,ஒரு வார்த்தை கேள்,உன்னுடைய நிலையே தடுமாறும்!உன் விரலே உன்னை நோக்கி திரும்பும்!

கேள்வி கேட்கும் இடம் பிறரை சிந்திக்க வைக்கும் ஆனால் அதற்கு உன்னை முதலில் தயாராக்கிக்கொள்..இல்லையேல் ஊமையாக்கப்படுவாய்!

மௌனமாய்,செய்வதில் நிறைவுடன்,எந்த நிலைக்கும் உன்னை பக்குவப்படுத்தும் பலரின் கேள்விகள்!

பிறரை காயப்படுத்தாத கேள்விகள் உன்னையும் திரும்பி தாக்காது..

- Vidhya 


Saturday, April 12, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பிடித்ததை அடைய பிடிமானம் அவசியம்

பிடிமானம் தளராமல்

பிடிப்பவன் பிடிக்க, பிடிக்கும்

பொருளும் பொறுப்புள்ளதாய் இருக்க வேண்டும்

தன்னை பற்றுபவனை ஏமாற்றாமல்


 வேர்வை துளிகள் சிதற பற்றும் 

யாவும் வெற்றியே!

இலக்கு அடைந்த பின்னும்

எதிர்கால தேவைக்கு

பற்றியதை விலக்காமல் இருப்பதும் சிறப்பே!

- Veena 

இரும்பும் இருதூளாகும் பிடிக்கும்

 பிடியில் ..

இரும்புக்கரம் ,இரும்பு சங்கிலி

எதன் பலம் எதன் பிடியில்

வல்லவனா பலசாலியா

இரும்பை கரும்பு போல் பிழிய 

எது வென்றது!

- Vidhya 


Thursday, April 10, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 கையளவு எட்டியது காணாது

ஏணியின் துணையோடு

பணம் கொண்டு மனம்

நிரப்பும் மனிதனின்

ஆசைக்கு 

தான் அளவேது


 மரத்தில் இப்படி பணம்

பூக்கும் என்றால்

அதுவும் மதிப்பிழந்து போகும்

நம்மூர் வேப்பிலை போலே

 மனதின் ஆசை விருட்சம் போலே

அதிலும் ஆவல் விருட்சம் பணமாய் மாற

 பிடித்ததை அடைய பிடிமானம் அவசியம்

பிடிமானம் தளராமல்

பிடிப்பவன் பிடிக்க, பிடிக்கும்

பொருளும் பொறுப்புள்ளதாய் இருக்க வேண்டும்

தன்னை பற்றுபவனை ஏமாற்றாமல்

 வேர்வை துளிகள் சிதற பற்றும் 

யாவும் வெற்றியே!

இலக்கு அடைந்த பின்னும்

எதிர்கால தேவைக்கு

பற்றியதை விலக்காமல் இருப்பதும் சிறப்பே!

- Veena 

பணம் காய்க்கும் மரமோ 

இது ஏன் ஏணியில் ஏறுபவருக்கு

 மட்டுமே கிட்டுமா..

மரத்தின் அடியில் நின்று

 வேண்டுவோருக்கு

 இயற்கையாக கிட்டாதோ..

பணம் என்ற மூன்று எழுத்து

 இந்த உலகை ஆள, எந்த

 கவலையும் இல்லாமல் அந்த

 மரத்திற்கு தண்ணீர் ஊற்றி

 பராமரிக்க ,அதன் பலனை

 அடைபவர் யாரோ...

மரத்தை யாரும் திருட முடியாத

 மாதிரி கயிறுகட்டி

 காவல்காப்பது  யாரோ!

- வித்யா



Wednesday, April 9, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 




எரித்து எரிந்து தான் கரியானாலும்

அதையே விரும்பும் தலைவன்

குடும்ப சூழலினால்


 தீக்குச்சியின் வேதியல் மாற்றத்தினால்

உண்டாகும் நெருப்பும்

மனிதன் வாழ்வியலில்

எதிர் நோக்கும் துன்பமும் ஒன்றோ

இரண்டையும் அணைக்க வழி

தெரிந்தும் தெரியாமலும்


எரியும் நெருப்பு கூட 

நீரினால் அணையும் 

ஆனால் எரிந்து கொண்டிருக்கும் மனதிற்கு

நீர் கூட அந்நியமே!


 அடுத்தவருக்கு தியாகம் செய்து 

சோர்ந்து போவான்

இருந்தாலும் பொறுமை கொள்வதால் அவன் 

தியாகமும் தொடர்கிறது அற்பமாய்

- Veena Shankar 

தீயாக எரியும் பலரின் கனவில் பிறரின் வாழ்க்கை வெளிச்சம் அடைகிறது..

தீக்குச்சி சிறியதே ஆனால் அதன் உதவியால் கிடைத்த பிரகாசம் பெரிசே!

தீக்குச்சி போல் மெல்லிய மனிதரால் ஏற்றப்பட்ட கல்வி என்னும் தீபம் எங்கும் பரவி வானை அலங்கரித்து, பூமியில் படர்ந்து பல ஆலமரமாக வேரூன்றி பல்லுயரிருக்கு விருந்தாக,குடையாக,விரிந்து கொண்டே போகிறதே!

சிலரின் தியாகம் பலரின் சாதனைக்கு படிக்கட்டுகள், ஏறிய ஒவ்வொருவரும் ஏணியாக பின்னால் வருபவருக்கு பாதையிட மறக்க வேண்டாம்.

- Vidhya 




Tuesday, April 8, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஒரு பகுதி சிதைந்த நிலையில்

மறு பகுதியில் வளர்ச்சி

வாழ்வும் சொல்கிறது

இன்பம் துன்பம் இரண்டும் உண்டு என்று

சிறு விரிசல் உள்ள போதே

உடைந்த பகுதியை சரி செய்ய வேண்டும் 

இதுவும் வாழ்க்கை முறை தானே


பெண் மனதை தகர்த்தவர் 

அவள் முகத்தையும் சிதைக்கிறார் 

அவள் வளர்ச்சி கண்டு

பொறாமை எண்ணம் கொண்டு


தான் சிதைந்து ஓர் உயிர் வளர

காரணமாயிருப்பவள் 

ஓர் பெண் 

அவளே தாய்

அவளே காக்கும் தெய்வம்


 தினம் பூக்கும் மலரே பெண்

ஒவ்வொரு நாளும் சிறப்பாய் 

புன்னகை பூப்பதால்


பத்து மாதங்கள் வயிற்றில் 

தாங்கும் போது மட்டும்

இவளுக்கு பாரமில்லை

தூங்கும் போது கனவில் கூட

சிந்தனை வயிற்றில் வளரும் சிசுவின்

சுகப்பிரசவத்தை எண்ணி

- Veena Shankar 

தலையே வெடிக்கும் நிலையிலும் மௌனம் காப்பது ஏன்? இதுவும் கடந்து போகும் என்றோ!

செழித்து வளர்ந்த மரம் வேரூன்றி நிலத்தை பராமரிக்க மறந்தது ஏனோ?

எந்த கலவரத்திலும் அவளின் தவம் கலையாத அற்புத முகத்தை வடித்த சிற்பி யாரோ! போரில் பிறந்தவரோ?

இமைகள் கூட உதிரா இவள் சிலையா இல்லை உயிருள்ள மலரா?

- Vidhya 



Monday, April 7, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பூமியை குடைந்து கிடைத்த இயற்கையின் கொடை நீரும் மரமும்


 மரம் செழிக்க நீர் தேவை

நீர் கொடையாய் பெற மரம் தேவை

நிழலுக்கு குடையாய் மரம் தேவை

நீர் எடுக்க குடமும் தேவை


 நீரில்லா செடியும்

உணர்வில்லா உயிரும்

விரிசல் இல்லா உறவும்

செதுக்குதல் இல்லா சிலையும்

வலியை தாங்கிடவே 

புத்துணர்வுடன் பிறக்கும் மீண்டும்

- Veena 

என்னுடைய மடையில் முளைத்த

 குடை எனக்கே நீர் வார்க்கிறது!

மீண்டும் ஓர் பசுமைப்புரட்சிக்கு

தயாராகுங்கள்...

இயற்கையின் சுழற்சிக்கு எதிராக

 நீரை உறிஞ்சி, மழைநீரை

 சொட்டுநீர் பாசமாக மீண்டும்

 பூமிக்கு கொடுக்கும் நிலை!

ஒவ்வொரு கையிலும் முளைக்க

 காத்திருக்கும் விதைகள்

 பூமிக்கும் ஆசாமிக்கும் கிடைத்த

 கடவுச்சீட்டு ..

- வித்யா


 

Sunday, April 6, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 பிரிவு என்பது இடைக்காலமே

எதிர்காலத்தில் இது

தொடராமல் இருக்க

நிகழ்காலத்தில் எடுக்கும் முடிவு

சிறப்பாய் அமைய வேண்டும் 

இறந்தகாலத்தின் கசப்பான நினைவுகளை

மறந்து விட வேண்டும்


 நிம்மதி என்பது பிரிவில் பிறப்பதல்ல 

அவரவர் மனதால் வருவது

எதிர்ப்பார்ப்பை சுருக்கினால் 

எதிர்காலம் என்றும் சிறப்பே

- Veena 

துருவங்கள் மாறலாம்

இடைவெளியும் நீளலாம் 

எதிரெதிர் துருவத்திற்கே ஈர்ப்பு

 அதிகம்..எதிலும் சிறு

 இடைவெளி தேவை

 இல்லையேல் அது

 அலுத்துவிடும்.

பிரிவு அவசியம்,அது தேவையை

 உணர,உணர்த்த!

எதிர்ப்பார்ப்பு விலகாமல்

 புரிதலை புரிய வைக்க முடியாது! 

அன்பு இருக்கும் இடத்தில்

பொய் கோபம் நிலைக்காது..

பொய்யாக  இரு மெய் சேர

 முடியுமா?

அதுவும் நிலைக்காது...

- Vidhya 


Saturday, April 5, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

  


மின்னுவதெல்லாம் பொன்னானால் மண்ணின் குணம்

காண இயலா

பிம்பம் கூட எதிரியானால் வெற்றியின் தடம் காண இயலா


 இது மாயக் கண்ணாடி அல்ல

நிஜத்தின் எழிலை பயத்தின் பிம்பமாய் காட்ட

இது நிஜமும் இல்லை

வெவ்வேறு பரிணாமம் கொள்ள

இது நிழலும் இல்லை

தன் வண்ணம் இழக்க 

இது மாற்றம் 

அதுவும் எவ்வுயிருக்கும் தேவையே

- Veena 

நிஜத்தை மறைக்கும் எந்த

 நிழலும் வேண்டாம்..

பிம்பத்தை காட்டும் கண்ணாடியும்

 விலை போனது ஏன்?

தன் பிம்பம் கண்டு

அதிர்ச்சியடைந்த

 பூனைக்குட்டி? நான் வெறும் குட்டி

 என்னை சிங்கம் என்ற பாரத்தை

 சுமக்க வைப்பது நியாயமா! 

-வித்யா

Wednesday, April 2, 2025

படமும் கருத்தும் by Winmeengal

 


Vidhya Nivash:

 அவளே அவளுக்கு பூட்டிக்கொண்ட விலங்கு ஒன்று அதை அவளை தவிர வேறு யாரும் தகர்க்க முடியாது..


மற்றொன்று யார் தகர்க்க நினைத்தாலும் அவளை தவிர வேறுயாரும் நெருங்க முடியாது!


Akhila :

பரதம்: 

அழகை, கலையை - வீட்டுக்குள் பூட்டி வைத்த தந்திரம் !

சலங்கையே விலங்காக;

அறிவை, சீந்தனையை - நட்டுவாங்கத்தில் கட்டி வைத்து;

அவளை மேடைப் பார்வையில் சத்தத்துடன் வைத்து ரசித்த அவலம்- 

அக்காலப் பெண்களுக்கு!! 


மெட்டி:

பெண்களுக்கென கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று-

சலங்கைபின் தங்கை;

என்றும் விலங்கு- சத்தமின்றி!!

 Veena Shankar: 

கலையின் வெளிப்பாட்டிற்காக ஒன்று அழகாய்

களையிழந்த வண்ணத்தில் மற்றொன்று அழுக்காய்

இரண்டும் பூட்டப்பட்டவையே

ஒன்று பிறரால்

மற்றொன்று தனக்காக

பூட்டிகொள்வதில் ஆனந்தம் உண்டு 

என்றால் அது சிறப்பே

பிறரின் தேவைக்கு நாம் நம்மை நாமே

விலங்கிட்டு கொள்வதன் காரணமென்ன?

விலங்கும் விலங்கினால் என்றால் அங்கே

நமக்கு விளங்க வைக்க

விளக்கம் தேவையில்லை

அழகான எதன் பின்னும்

ஆபத்து உண்டு

கலைக்காக பிறந்தது

கவலையாய் மாறாமல் இருப்பது

சிறப்பே!

பிறர் ஆளுமைக்காக

பூட்டப்படும் விலங்கும்

தேயும் பூட்டப்பட்டவனின் தொடர் முயற்சியால்  

இருளில் அடைப்பட்ட எதற்குள்ளும் ஓர் வெளிச்சம் பிறக்கும்

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


தூற்றுவது அவனின் குணம்

மறப்பது என் குணம்

குறைப்பது அவன் குணம்

நகர்ந்து செல்வது என் குணம்

 நடை , உடை, பாவனை மாற்றி இந்நாகரிகத்திற்கு மாறி 

நன்றி மறந்த மனிதனை

கடிந்து கொண்ட உறவினர் கூட்டம் போலே

- வீணா

நீ உன் வேலையை பார் நான் என்

 வழியில் போகிறேன் எவ்வளவு

 குரைத்தும் பலன் இல்லை ..


சில நேரம் நெருங்கியவர் கூட

 அந்நியமாக தெரிவது ஏன்?

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...