பூமியை குடைந்து கிடைத்த இயற்கையின் கொடை நீரும் மரமும்
மரம் செழிக்க நீர் தேவை
நீர் கொடையாய் பெற மரம் தேவை
நிழலுக்கு குடையாய் மரம் தேவை
நீர் எடுக்க குடமும் தேவை
நீரில்லா செடியும்
உணர்வில்லா உயிரும்
விரிசல் இல்லா உறவும்
செதுக்குதல் இல்லா சிலையும்
வலியை தாங்கிடவே
புத்துணர்வுடன் பிறக்கும் மீண்டும்
- Veena
என்னுடைய மடையில் முளைத்த
குடை எனக்கே நீர் வார்க்கிறது!
மீண்டும் ஓர் பசுமைப்புரட்சிக்கு
தயாராகுங்கள்...
இயற்கையின் சுழற்சிக்கு எதிராக
நீரை உறிஞ்சி, மழைநீரை
சொட்டுநீர் பாசமாக மீண்டும்
பூமிக்கு கொடுக்கும் நிலை!
ஒவ்வொரு கையிலும் முளைக்க
காத்திருக்கும் விதைகள்
பூமிக்கும் ஆசாமிக்கும் கிடைத்த
கடவுச்சீட்டு ..
- வித்யா

No comments:
Post a Comment