புத்தர் மரத்தின் இலையில் சுவாசமா இல்லை மரத்துக் கிளையில் தொங்குகிறாரா
ஓர் மரத்தில் ஓர் கிளையில்
ஓர் இலையில் ஓர் காம்பில் மலரும்
ஓர் பூவாய்
அதில் வரும் ஓர் காயாய்
அதுவே பின் ஓர் கனியாய் உருமாருவது போலே
ஓர் தாயின் ஓர் கருவறையில்
ஓர் கருவில் ஓர் உயிராய் ஜனித்து
வளரும்
ஓர் சிசுவாய்
ஓர் நாளில் பிறந்து
இப்புவியில் ஓர் மனிதனாய் வளர்ந்து
ஓர் துணையை கொண்டு
மாறுவதில் தான்
எத்தனை இன்னல்கள்
வேண்டுவதே ஓர் வரமே! அந்த
ஓர் உயிரும் மெய்யிலிருந்து
இனிதாய் வெளியேறும் வரை
பல இன்னல்களும் ஓர் சுகமே!
- Veena
தவத்தின் வலிமை பெரிசா?
மரத்தின் வலிமை பெரிசா?
இரண்டுக்கும் ஒற்றுமை
பொறுமை!
மண்ணில் வேரூன்றி,
மனதில் வேரூன்றி..
சுற்றியுள்ள சூழ்நிலையை
அடக்கி,
சுற்றியுள்ள சூழ்நிலைக்கேற்ப...
பஞ்சபூதத்தின் ஆட்சி,
ஐம்புலன்களின் வேட்கை..
- Vidhya

No comments:
Post a Comment