எரித்து எரிந்து தான் கரியானாலும்
அதையே விரும்பும் தலைவன்
குடும்ப சூழலினால்
தீக்குச்சியின் வேதியல் மாற்றத்தினால்
உண்டாகும் நெருப்பும்
மனிதன் வாழ்வியலில்
எதிர் நோக்கும் துன்பமும் ஒன்றோ
இரண்டையும் அணைக்க வழி
தெரிந்தும் தெரியாமலும்
எரியும் நெருப்பு கூட
நீரினால் அணையும்
ஆனால் எரிந்து கொண்டிருக்கும் மனதிற்கு
நீர் கூட அந்நியமே!
அடுத்தவருக்கு தியாகம் செய்து
சோர்ந்து போவான்
இருந்தாலும் பொறுமை கொள்வதால் அவன்
தியாகமும் தொடர்கிறது அற்பமாய்
- Veena Shankar
தீயாக எரியும் பலரின் கனவில் பிறரின் வாழ்க்கை வெளிச்சம் அடைகிறது..
தீக்குச்சி சிறியதே ஆனால் அதன் உதவியால் கிடைத்த பிரகாசம் பெரிசே!
தீக்குச்சி போல் மெல்லிய மனிதரால் ஏற்றப்பட்ட கல்வி என்னும் தீபம் எங்கும் பரவி வானை அலங்கரித்து, பூமியில் படர்ந்து பல ஆலமரமாக வேரூன்றி பல்லுயரிருக்கு விருந்தாக,குடையாக,விரிந்து கொண்டே போகிறதே!
சிலரின் தியாகம் பலரின் சாதனைக்கு படிக்கட்டுகள், ஏறிய ஒவ்வொருவரும் ஏணியாக பின்னால் வருபவருக்கு பாதையிட மறக்க வேண்டாம்.
- Vidhya

No comments:
Post a Comment