மின்னுவதெல்லாம் பொன்னானால் மண்ணின் குணம்
காண இயலா
பிம்பம் கூட எதிரியானால் வெற்றியின் தடம் காண இயலா
இது மாயக் கண்ணாடி அல்ல
நிஜத்தின் எழிலை பயத்தின் பிம்பமாய் காட்ட
இது நிஜமும் இல்லை
வெவ்வேறு பரிணாமம் கொள்ள
இது நிழலும் இல்லை
தன் வண்ணம் இழக்க
இது மாற்றம்
அதுவும் எவ்வுயிருக்கும் தேவையே
- Veena
நிஜத்தை மறைக்கும் எந்த
நிழலும் வேண்டாம்..
பிம்பத்தை காட்டும் கண்ணாடியும்
விலை போனது ஏன்?
தன் பிம்பம் கண்டு
அதிர்ச்சியடைந்த
பூனைக்குட்டி? நான் வெறும் குட்டி
என்னை சிங்கம் என்ற பாரத்தை
சுமக்க வைப்பது நியாயமா!
-வித்யா

No comments:
Post a Comment