கையளவு எட்டியது காணாது
ஏணியின் துணையோடு
பணம் கொண்டு மனம்
நிரப்பும் மனிதனின்
ஆசைக்கு
தான் அளவேது
மரத்தில் இப்படி பணம்
பூக்கும் என்றால்
அதுவும் மதிப்பிழந்து போகும்
நம்மூர் வேப்பிலை போலே
மனதின் ஆசை விருட்சம் போலே
அதிலும் ஆவல் விருட்சம் பணமாய் மாற
பிடித்ததை அடைய பிடிமானம் அவசியம்
பிடிமானம் தளராமல்
பிடிப்பவன் பிடிக்க, பிடிக்கும்
பொருளும் பொறுப்புள்ளதாய் இருக்க வேண்டும்
தன்னை பற்றுபவனை ஏமாற்றாமல்
வேர்வை துளிகள் சிதற பற்றும்
யாவும் வெற்றியே!
இலக்கு அடைந்த பின்னும்
எதிர்கால தேவைக்கு
பற்றியதை விலக்காமல் இருப்பதும் சிறப்பே!
- Veena
பணம் காய்க்கும் மரமோ
இது ஏன் ஏணியில் ஏறுபவருக்கு
மட்டுமே கிட்டுமா..
மரத்தின் அடியில் நின்று
வேண்டுவோருக்கு
இயற்கையாக கிட்டாதோ..
பணம் என்ற மூன்று எழுத்து
இந்த உலகை ஆள, எந்த
கவலையும் இல்லாமல் அந்த
மரத்திற்கு தண்ணீர் ஊற்றி
பராமரிக்க ,அதன் பலனை
அடைபவர் யாரோ...
மரத்தை யாரும் திருட முடியாத
மாதிரி கயிறுகட்டி
காவல்காப்பது யாரோ!
- வித்யா

No comments:
Post a Comment