ஒரு பகுதி சிதைந்த நிலையில்
மறு பகுதியில் வளர்ச்சி
வாழ்வும் சொல்கிறது
இன்பம் துன்பம் இரண்டும் உண்டு என்று
சிறு விரிசல் உள்ள போதே
உடைந்த பகுதியை சரி செய்ய வேண்டும்
இதுவும் வாழ்க்கை முறை தானே
பெண் மனதை தகர்த்தவர்
அவள் முகத்தையும் சிதைக்கிறார்
அவள் வளர்ச்சி கண்டு
பொறாமை எண்ணம் கொண்டு
தான் சிதைந்து ஓர் உயிர் வளர
காரணமாயிருப்பவள்
ஓர் பெண்
அவளே தாய்
அவளே காக்கும் தெய்வம்
தினம் பூக்கும் மலரே பெண்
ஒவ்வொரு நாளும் சிறப்பாய்
புன்னகை பூப்பதால்
பத்து மாதங்கள் வயிற்றில்
தாங்கும் போது மட்டும்
இவளுக்கு பாரமில்லை
தூங்கும் போது கனவில் கூட
சிந்தனை வயிற்றில் வளரும் சிசுவின்
சுகப்பிரசவத்தை எண்ணி
- Veena Shankar
தலையே வெடிக்கும் நிலையிலும் மௌனம் காப்பது ஏன்? இதுவும் கடந்து போகும் என்றோ!
செழித்து வளர்ந்த மரம் வேரூன்றி நிலத்தை பராமரிக்க மறந்தது ஏனோ?
எந்த கலவரத்திலும் அவளின் தவம் கலையாத அற்புத முகத்தை வடித்த சிற்பி யாரோ! போரில் பிறந்தவரோ?
இமைகள் கூட உதிரா இவள் சிலையா இல்லை உயிருள்ள மலரா?
- Vidhya

No comments:
Post a Comment