Tuesday, April 8, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஒரு பகுதி சிதைந்த நிலையில்

மறு பகுதியில் வளர்ச்சி

வாழ்வும் சொல்கிறது

இன்பம் துன்பம் இரண்டும் உண்டு என்று

சிறு விரிசல் உள்ள போதே

உடைந்த பகுதியை சரி செய்ய வேண்டும் 

இதுவும் வாழ்க்கை முறை தானே


பெண் மனதை தகர்த்தவர் 

அவள் முகத்தையும் சிதைக்கிறார் 

அவள் வளர்ச்சி கண்டு

பொறாமை எண்ணம் கொண்டு


தான் சிதைந்து ஓர் உயிர் வளர

காரணமாயிருப்பவள் 

ஓர் பெண் 

அவளே தாய்

அவளே காக்கும் தெய்வம்


 தினம் பூக்கும் மலரே பெண்

ஒவ்வொரு நாளும் சிறப்பாய் 

புன்னகை பூப்பதால்


பத்து மாதங்கள் வயிற்றில் 

தாங்கும் போது மட்டும்

இவளுக்கு பாரமில்லை

தூங்கும் போது கனவில் கூட

சிந்தனை வயிற்றில் வளரும் சிசுவின்

சுகப்பிரசவத்தை எண்ணி

- Veena Shankar 

தலையே வெடிக்கும் நிலையிலும் மௌனம் காப்பது ஏன்? இதுவும் கடந்து போகும் என்றோ!

செழித்து வளர்ந்த மரம் வேரூன்றி நிலத்தை பராமரிக்க மறந்தது ஏனோ?

எந்த கலவரத்திலும் அவளின் தவம் கலையாத அற்புத முகத்தை வடித்த சிற்பி யாரோ! போரில் பிறந்தவரோ?

இமைகள் கூட உதிரா இவள் சிலையா இல்லை உயிருள்ள மலரா?

- Vidhya 



No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...