Monday, April 21, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பாதை இரண்டானது

இதயம் இரண்டு பட்டதாலே

மன விரசல் பல ஆகும் முன்னே

அடைப்பதும் எளிதே

சமாதானம் எனும் மருந்தாலே

மருந்தும் கசக்கும் சில நேரமுமே

எதுவும் குணமாகும் அதனாலே

வழிகள் பல உண்டு வலி தோன்ற

அதை ஆற்றும் வழிகளிலும் பல உண்டே 

மருந்தும் காயத்தின் தன்மை பொறுத்தே

பிணக்கு கொண்ட மனமும் மணக்கும்

அன்பு எனும் அறிவாலே

நன்மை தீமை பிறர் தர வாரா 

கையடக்க இதயம் பேணுவதும் சிறப்பே


 இணை கோடுகள் அல்ல வாழ்க்கை 

நம்மை நம்முள் இணைத்துக் கொண்டு வாழ்வதே


 பாதைகள் இரண்டாக பிரிந்தாலும் 

பயணத்தின் இடையில் முள் வரின்

கை கோர்த்து இணைவதே வசந்தம்

எவன் சுமக்கிறானோ அவனே முன்னோக்கி செல்வான் உடலால்


 கணவன் அவன் ஒருவனின் கனவின் உச்சகட்டம் இதுவே

வீடு, மனைவி, மக்கள்


தேடிய செல்வங்கள் கிடைப்பதைக் காட்டிலும் அதை தாங்குவதிலும் காப்பதிலுமே அழற்சி மற்றும் மகிழ்ச்சி

- Veena 

இரண்டு முட்களும் தனியாக

 சுற்றினாலும்,இரண்டின்

 பாதையும் மற்றொன்றை

 சார்ந்ததே,ஒன்று நின்றால் அது

 மற்றொன்றையும்  பாதிக்கும்

அதை சார்ந்த அனைத்தையும்

 துண்டிக்கும்,இரண்டும் சேர்ந்தே

 இருக்க வேண்டிய

அவசியமில்லை,தேவையான 

நேரத்தில் அவை இணையும்,

 அதற்காக ஒரு மணி நேரம்

 காத்திருக்கு,காத்திருப்பு

 பிரிவின் வலியை

உணர்த்தும்,அது மீண்டும் சேரும்

 அர்த்தம் இருந்தால்...

- வித்யா


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...