பிரிவு என்பது இடைக்காலமே
எதிர்காலத்தில் இது
தொடராமல் இருக்க
நிகழ்காலத்தில் எடுக்கும் முடிவு
சிறப்பாய் அமைய வேண்டும்
இறந்தகாலத்தின் கசப்பான நினைவுகளை
மறந்து விட வேண்டும்
நிம்மதி என்பது பிரிவில் பிறப்பதல்ல
அவரவர் மனதால் வருவது
எதிர்ப்பார்ப்பை சுருக்கினால்
எதிர்காலம் என்றும் சிறப்பே
- Veena
துருவங்கள் மாறலாம்
இடைவெளியும் நீளலாம்
எதிரெதிர் துருவத்திற்கே ஈர்ப்பு
அதிகம்..எதிலும் சிறு
இடைவெளி தேவை
இல்லையேல் அது
அலுத்துவிடும்.
பிரிவு அவசியம்,அது தேவையை
உணர,உணர்த்த!
எதிர்ப்பார்ப்பு விலகாமல்
புரிதலை புரிய வைக்க முடியாது!
அன்பு இருக்கும் இடத்தில்
பொய் கோபம் நிலைக்காது..
பொய்யாக இரு மெய் சேர
முடியுமா?
அதுவும் நிலைக்காது...
- Vidhya

No comments:
Post a Comment