ஊர்தியின் மேல் ஊர்தி
யாரும் எப்போதும் உதவி செய்வர்
அடுத்தவர் நிலை இழக்கும் போது
எளியவர் வலியவர் எவரும் இல்லை
ஓவியனின் எண்ணத்தில்
அவன் தூரிகையே வலியது என்பதால்
தாங்கும் பொருள் எது என்பது ஒரு பொருட்டல்ல
தாங்கும் சக்தியும் மனதுமே பெரியது
வஞ்சம் இல்லா நெஞ்சம்
தஞ்சம் கொள்ள அன்பு மனம் போதும்
அஞ்சுதல் இல்லை ஆங்கே
கெஞ்சுதல் விரும்பா இடத்தில்
- Veena
குரங்கில் கண்டேன்
கங்காருவில் கண்டேன்
மனிதனிலும் கண்டேன்,
வியந்தேன்!
அவை நடைபழகும் வரை மட்டுமே
சுமக்கும்,ஆனால் பிள்ளைகளின்
கனவை சுமக்கும் மனிதன்,சாகும்
வரை இறக்கி வைக்க
மறப்பதில்லை!
ஆனால் அவர்கள்
சுமைதாங்கியை மறந்து
விடுகின்றனர்!
- Vidhya

No comments:
Post a Comment