Monday, August 31, 2020

கணினியும் கல்லூரியும் by Vidhya Nivash

                    கணினியும் கல்லூரியும்

அனைவருக்கும் வணக்கம்,

கமலியின் எழுத்து எனக்கு கல்லூரியை மீண்டும் ஞாபகப் படுத்தியது. என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு கட் ஆப் மார்க் குறைந்ததால் என்னால் மருத்துவராகவும் ,பொறியாளராகவும் ஆக முடியவில்லை .அம்மா பணம் கொடுத்து சேர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.


பயோ கெமிஸ்ட்ரி வந்த புதிது , நுண்ணுயிரியல் சென்று சேர்ந்தேன். நான் பள்ளி படித்தது தமிழ் வழிகல்விமுறையில் இப்பொழுது அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தது .பாக்டீரியா ஸ்பெல்லிங் கூட தெரியாது பக்கத்தில் இருந்த என் தோழியை பார்த்து விரைவில் கற்றுக் கொண்டேன் அனைத்தையும், ஒரு மாதத்திற்குப் பின் தானாக வந்துவிட்டது ஆங்கிலம் .

எங்களுக்கு ஒரு பேப்பர் இருந்தது அப்பிளைட் கம்ப்யூட்டர் சயின்ஸ் அதை ஒரு கணித ஆசிரியர் எடுத்தார் .அப்பொழுதுதான் முதன் முதலாக நான் கணினியை பார்த்தேன் என்று சொல்வதை விட பயன்படுத்தினேன் .அதற்கு முன்னர் சில சமயம் சிலர் வீட்டில் பார்த்திருக்கிறேன். சயின்ஸ் ஸ்டூடண்ட்ஸ்க்கு மாக்ஸ் என்றாலே பயம், இதில் இன்னமும் பயம் அதற்கு மேல விரிவுரையாளர் கடுமையானவர் .வகுப்பறையில் ப்ரோக்ராமை எக்ஸ்பிளைன் பண்ணிவிட்டு கம்ப்யூட்டர் லேப்க்கு அழைத்து செல்வார் ரொம்ப பழைய கம்ப்யூட்டர் , இதுல எழுதிட்டு போனா அழகான ப்ரோக்ராம் அப்பப்பா சொல்லவே முடியாது அந்த காமெடி ,சந்தேகம் கேட்டா அதுக்கு மேல திட்டுவாங்க ஒருவழியா நாங்க அந்த ப்ரோக்ராமை டைப் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து முடிப்பதற்குள் டீச்சர், programmer's, ஸ்டுடென்ட்ஸ் உள்ள ஒரு பெரிய கலவரமே நடந்து முடியும். அந்த ஆண்டு கம்ப்யூட்டர் பேப்பர் முடிஞ்சிடுச்சு .


என்னுடைய எம்எஸ்சி படிக்கிறப்ப applied bioinformatics ,எனக்கு கெடச்ச கம்ப்யூட்டர் டிப்ஸ் சொல்லித்தர ஆசிரியர்கள் யார் என்றால் என்னுடைய மாமா பையன் ,சித்தி பையன் என்னுடன் எம்எஸ்சி படித்த என்னுடைய நண்பர்கள் அவங்களோட துணையில்லாமல் நான் கம்ப்யூட்டர் சென்டருக்கு போனதே இல்லை .அப்ப அந்த கம்ப்யூட்டர் சென்டர் குள்ள போவது என்றாலே ஒரு நடுக்கம் வரும் . அந்த ஒரு அலைடு பேப்பர் பயோ இன்பர்மேட்டிக்ஸ்க்கு ஆக ,இதல ப்ரோக்ராமிங் எல்லாம் போய் படித்தேன் ஒரு கணினி மையத்தில்,கடைசியில ரெண்டே ரெண்டு புரோக்ராம் வச்சு அந்த பேப்பரை முடித்து விட்டார் .

கேட்டீங்கன்னா இந்தமாதிரி எம்எஸ்சி படிச்சிட்டு இருந்தேன், ஒரு நாள் ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு காலையிலேயே போயிட்டேன் நான்தான் மொத ஆளு கம்ப்யூட்டர் சென்டர் திறந்தவுடன்,ஒரு தைரியத்துல போயிட்டேன் கம்ப்யூட்டரை ஆன் பண்றேன் கம்ப்யூட்டர் ஆன் ஆகவில்லை .அங்க இருக்க அசிஸ்டன்ட் கூப்பிடலாமா வேணாமான்னு ஒரே டவுட் கடைசியில ஒரு வழியா கூப்பிட்டேன் மெயின் சுவிட்சை போடாம எப்படிமா கம்ப்யூட்டர் ஆன் ஆகும் என்று கேட்டாரு ...ஐயோ என்னால மறக்கவே முடியாது.

எம்எஸ்சி மற்றும் என்ஃபீல் ப்ராஜெக்ட் டையும் தங்கச்சியோட துணையுடன் முடிச்சேன் .

கமலி சொன்னது போல தான், நானும் என் கணவரும் ஒரு வருட காலம் கணினியின் உதவியுடன் இனிமையாக நாட்களை கழித்தோம். எங்களுடைய பையனின் பத்தாவது நாளிலிருந்து ஒன்றை வயது வரை..

கடைசியா இப்ப கம்ப்யூட்டர் இல்லாம ,ஸ்மார்ட்போன் இல்லாம என்னால இருக்க முடியல அந்த அளவுக்கு அதோட உதவியோடு நான் இப்ப வந்து நிறைய என்னுடைய திறமைகளையும் வெளிப்படுத்தி இருந்தாலும்,இப்பவும் சில இடங்களில் சிலரின் உதவி தேவைப்படுகிறது ,இப்போதய கணினி ஆசிரியர்கள் என் பிள்ளைகள் மற்றும் அகிலா.

எனக்கும் அகிலாவை சந்திக்க முதல் வாய்ப்பு கணினி பயிற்சி வகுப்பு மூலம் கிடைக்க இருந்தது. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை அப்போது.. பின்னர் நிறைய மாற்றத்தை பார்த்தேன் தோழிகளிடம் ,வகுப்பில் சேரும் ஆசை வந்தது ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு விதமாக அகிலாவின் நட்பு கிடைத்தது. அதன்பின் அகிலா எதை நடத்தினாலும் ஒரு முறை எப்படியாவது சென்று தெரிந்துக்கொள்வோம் என்ற ஆசை வந்தது. அதன் பயனாக இங்கே எழுதும் வாய்ப்பும் கிடைத்தது.

மிக்க நன்றி.

வித்யா.

என் அன்புக் கணிணியே by Kamali Subbiah

 


என் அன்புக் கணிணியே,

                         உன்னை முதன் முதலாய் பார்க்க ஆசைபட்டது என் பள்ளி பருவத்தில்வாரத்தில் ஒரு நாள் மட்டும் உன்னைப் பார்க்க விடுவார்கள்.உன்னை பார்க்கும் போதே அவ்வவளவு பிரமிப்பு எனக்குஉனைத் தொடும் போது{mouseன் வழிஅவ்வளவு ஆனந்தம்அப்போதெல்லாம் எனக்கு உனைப்பற்றி ஒன்றுமே தெரியாதுதெரிந்து கொள்ள ரொம்ப ஆசைஎன் கல்லூரி நாட்களிலும் உனைப்பார்க்க Chance கிடைத்ததுஅப்போது உன்னில் இருக்கும் paint மூலம் உன்னை பல வண்ணங்களில் மாற்றிப் பார்த்தேன்படம் வரைந்தேன்.உன் மூலம் இன்டர்நெட் பற்றி தெரிந்ததுஎன கல்யாணம் முடிவான போது mail மூலம் என் போட்டோ வும் கடிதமும் அனுப்பினேன் . உனக்கு கூட என் மேல் கோபம்போல , அப்பப்போ struck ஆகி விடுவாய் . என்னவரும் என்னை திட்டுவார். 

அடுத்து அபுதாபி வந்த பிறகு என் அப்பா அம்மா வை பார்க்கவே உன்னிடம்தான் ஹெல்ப் கேட்டேன் . அப்போகூட முகம் சுளிக்காமல் Skype காட்டினாய்அப்பப்போ உன் மேல் கோபம் வரும் .ஏன்  என்றால்  என் கணவனும் உன் கூடவே இருக்கும்போது . என் குழந்தைகளுக்கு நீ என்றால் ரொம்ப பிடிக்கும் . நீதானே youtube  மூலம் கதையும் பாட்டும் சொல்வாய் .ரொம்ப நாட்கள் கழித்து உன்னை பற்றி நிறைய தெரிந்து கொள்ள அகிலா சிஸ்டர் கிளாஸ்  மற்றும் தோழிகள் உதவுகிறார்கள்.எனக்கு ரொம்ப மகிழ்ச்சி மீண்டும் உன்னுடன் பேசுகிறேன் நிறைய என்று.  இந்த உலகமே என் கையில் உன்னால்.  அதனால் கணினியே எப்போதும் 

                                                                             உன்மேல் காதலுடன் 

                                                                                    கமலி.

(Note: This was the innovative letter assignment submitted by Kamali in Nov 2017 in Computer Smarties workshop)

எனக்கு சிரிப்பா வருது by Vidhya Nivash

             எனக்கு சிரிப்பா வருது


அவசர அவசரமாக ஓடிக்கிட்டே இருக்கும் ...நாம் எங்கேயும் ஓடல!! நம்ம மனசு தான் எல்லா இடத்தையும் சுத்தி சுத்தி வந்துகிட்டே இருக்கு...

யார் கொடுத்தது இந்த மனசுக்கு இப்படி பறக்குற ஒரு அதிகாரத்தை

கேட்கிறேன்?

இதை செயலாக செய்யல என்ன சும்மா உட்கார்ந்திருக்குற ?

டைம் வேஸ்ட் பண்ற ?கொஞ்ச நேரம் அமைதி ..நாங்கள் அமைதியாயிருக்க விடுதா..

படக் படக் என்று அடிக்கறது!!

தூங்கவும் விட மாட்டேங்குது !ஏன் இன்னும் ஒன்னும் இல்ல அப்படின்னு கேட்டுட்டே இருக்குது??

மனசு அமைதியா வச்சுக்கோங்க !!அமைதியா வைத்திருங்க என்று..ஈசியா சொல்லிட்டாங்க !

ஈசியா சொல்லிட்டாங்க!!

அன்னறய வேலை நடக்கலைன்னா மனசு எப்படி பறக்குது யாருக்கு தெரியும் ?அத முடிச்சா தான் அது அமைதியாக இருக்கும். அது இல்லனா அதுவரைக்கும் நம்மளை உட்கார முடிவதில்லை, ஓடுறது நேரம் வேகமாக.. எவ்வளவு மென்மையானது மனசுன்னு சொல்றாங்க அது ?

அது ஏன் நம்மள அப்பப்ப டைனோசர் ஆக்குது!!


எனக்கு சிரிப்பா வருது 

மனசுக்கு பிடித்தது  செய்த தானாக வருது..🤭😃

வார்த்தை விளையாட்டு by Jaya

           வார்த்தை விளையாட்டு

                                                           -ஜெயா


வார்த்தைகள் பலவிதம் ,

மழலையாய் சில வகை,

மழையாய் சில வகை,

மெளனமாய் சில வகை,

இனிமை கூட்டுவன சில வகை,

கடுமையாய் கடுப்பன சில வகை,

விருந்தாய் ருசிபன சில வகை,

மருந்தாய் கசபன சில வகை,

கவிதை நயமாய் சில வகை,

காரசாரமாய் சில வகை,

கனிவு ததும்பும் சில வகை,

கண்டிபாய் கணக்கும் சில வகை,

மரியாதை குறையா சில வகை,

மரியாதை அறியா சில வகை,

வண்ணமயமாய் சில வகை,

வெறுமையாய் சில வகை,

மனதை கவரும் சில வகை,

மனதை வருத்தும் சில வகை,

வகைவகையாய் பல வகையாய் வார்த்தைகள் உண்டு,

உபயோகிக்க,

உபசரிக்க 

உச்சரிக்க

ஆனால்,

ஒரு போதும் வேண்டாம் 

வன்முறை வார்த்தைகள்

வார்த்தைகளிலும் களைவோம் வன்முறையை!!!!!

Sunday, August 30, 2020

வாழ்த்து by Kanchana

ஆடலும்,பாடலும் by Vidhya Nivash

           ஆடலும் பாடலும்


அனைவருக்கும் வணக்கம்,

 நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் ஆடல் மற்றும் பாடலுடன் பின்னிப்பிணைந்துள்ளது. தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பல பெயர்கள் உள்ளன. அதற்கென்று பல கலைஞர்களும் உள்ளனர்.


அடிவயிற்றில் இருந்து பிறந்து  உள்ள உணர்ச்சிகளுடன் இணைந்து பாடலாக வெளிப்படும். நாடி நரம்பெல்லாம் உச்சநிலை அடைந்து ஆடுவோம் எப்போது ஒன்றிலிருந்து விடுபடும் போது ஆடலும் பாடலும் தானாக வரும்.


நாம் சந்தோசமாக இருக்கும் போது இசையை ரசிப்போம் அதுவே வருத்தமாக இருக்கும் போது பாடலின் ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் தேடுவோம். இசை மனதை இயக்கக் கூடியது.


ஆனந்தத்தின் உச்சத்தில் இருக்கும் பொழுது நம்மை அறியாமலேயே ஆடுவோம் குறிப்பாக குழந்தைகள் சந்தோசத்தில் குதிப்பார்கள். ஆடலையும்,பாடலையும் ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.


அதன் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமா நாம் அனைவரும் அறிவோம் பரதநாட்டியம் தமிழ்நாட்டின் பெருமை. இந்தக் கலை பரதரால் படைக்கப்பட்டது என்று புராணம் கூறுகிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடனம் ஆடல், கூத்து ,சதிர்,தாசி ஆட்டம் எனக் கூறப்பட்டது. ஆடலை மார்க்கி,தேசி என்றும் அதாவது கடவுளையும் அரசனையும் போற்றக்கூடிய நடனம். தாண்டவம் மற்றும் லாஸ்யம் இரண்டும் சேர்ந்தே நாட்டியம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பின் பரதரால் உரைக்கப்பட்டதால் பரதநாட்டியம் ஆனது. நான்கு வேதங்களில் இருந்து வந்த நாட்டிய வேதம் என்று புராணம் கூறுகிறது.



தாண்டவம் அழித்தலைக் குறிக்கும் நடனம் சிவபெருமானுடைய சப்த தாண்டவங்களிலிருந்து ஏழு ஸ்வரங்கள் பிறந்ததாக புராணம் கூறுகிறது. மேலும் நவ தாண்டவங்கள் மட்டும் 12 தாண்டவங்கள் சிவபெருமானுடைய பல்வேறு உணர்வுகளின் வெளிப்பாடாக புராணங்கள் கூறுகின்றன. ஆனந்த தாண்டவம் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதர் பெரும் தவத்தால் கைலாய மலையில் சிவபெருமான் ஆடியதாக குறிப்புகள் உள்ளன. சிதம்பரத்திலிருந்து இவர்கள் புரிந்த தவத்தால் ஆனந்த தாண்டவம் வெளிப்பட்டதாக தில்லையில் கூத்தனே ,நடராஜர் என்றும் அழைக்கப்படுகிறார். இதில் சிவபெருமான் இறைவனின் ஐம்பெரும் தொழில்களான படைத்தல், காத்தல் , அழித்தல் ,மறைத்தல் மற்றும் அருளல் வெளிப்படுத்தியதாக உணரப்படுகிறது.



108 கரணம் சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது, பரதநாட்டியத்தில் அவை பல்வேறு பாவனைகளாக வெளிப்படுகின்றன.


பரதநாட்டியத்திற்கு முன் சதிராட்டம் மட்டுமே வழக்கத்தில் இருந்திருக்கிறது. தேவரடியார்கள் என்னும் ஒரு சமூகத்தை சார்ந்த பெண்கள் கடவுளையும், பின்பு அரசனையும் போற்றி பாட பயிற்சிக் கப்பட்டு, நடனமாடி வந்தனர்.


தஞ்சை பெரிய கோவிலில் கருவறைக்கு மேலே உள்ள கோபுரத்தில் சிவபெருமானின் 108 கரணத்தையும் ராஜராஜ சோழ மன்னனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சமாதேவி தேவரடியார் பாவனைச்செய்ய சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. (உடையார் புத்தகம் குறிப்பு) பல கோயில்களிலும் இது போலவே 108 கரணங்கள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் அது நாட்டிய கலையாக மாறியது.


பாடல் ,தாளம் மற்றும் ஆடல் இவை மூன்றும் ஒருங்கிணைந்து நாட்டியம் ஆக வெளிப்பட்டது .நாட்டுப்புற இசை பல வகைகள் உள்ளன .அதுவே நடனம் ,நாடகம் என்று உருவெடுத்தது. பின் பல புதிய இசைக்கருவிகள் பிறந்தது, பல விதமான நடன பிரிவுகள் வந்தன.


இன்று ஆடலும் பாடலும் அருமருந்தாக பல நோய்களை குணப்படுத்துவதாக குறிப்புகள் உள்ளது.


ஒருவர் பாடும்போதும் ,ஆடும்போதும் உடலில் உள்ள அனைத்து நாளங்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு உடற்பயிற்சி நடனங்களும் வந்துவிட்டன எடையைக் குறைக்க. நம்முடைய அன்றாட வாழ்வில் பாடியும் ஆடியும் வேலைப்பளு சோர்வில்லாமல் கூடி மகிழ்ந்து வாழ்ந்துள்ளனர்.இன்று அதற்காக பணம் கட்டி செல்கிறோம் உடற்பயிற்சி மையங்களுக்கு...


நன்றி


வித்யா.





Saturday, August 29, 2020

வாழ்க்கையின் வாய்ப்பு by Jaya

    *வாழ்க்கையின் வாய்ப்பு*             

                                                -ஜெயா


வாய்ப்புக்களும் ஒருவ‌ர் காத்திருப்பதும்

அவ்வாய்ப்பினை சுயமாய் 

உருவாக்குவதும் 

அவரவர் எண்ணத்தின் திண்ணம்


உடலில் திண்மை இல்லாவிடினும்

உள்ளத்தின் தினண்மையினாலே 

தம்மை உலகறியச் செய்விக்க முடியும்

என நிருபித்தோர் ஏராளம்


காத்திருப்போர் பட்டியலில் இருப்பதும்

சாதனையார் பட்டியலில் இருப்பதும்

உன் கையில்


நல்லனவை எண்ண வேண்டும்

எண்ணியவை முடிதல் வேண்டும்

வாழ்வின் நெறி உணர்தல் வேண்டும்

எண்ணிய வழி வாழ்தல் வேண்டும்.

அன்பு தோழிக்கு by Kanchana

                          அன்பு தோழிக்கு
                                                             -காஞ்சனா

  


ஆசிரியர்களும்,காலகண்ணாடியும் by Vidhya Nivash

 ஆசிரியர்களும், காலக்கண்ணாடியும்

அனைவருக்கும் வணக்கம்,

ஒவ்வொருவருக்கும் அவர்கள் தாய் தந்தையர் தான் முதல் ஆசிரியர்கள். யாரும் அதை மறுக்க முடியாது. அம்மா தான் முதல் ஆசிரியர் தன் பிள்ளைகளை கடைசிவரை குழந்தையாக பார்த்து கண்டித்துக் கொண்டே இருப்பவள். அப்பா சரியான நேரத்தில் வாழ்க்கையை கற்றுக் கொடுப்பவர்,சில காலகட்டத்திற்கு மேல் விட்டு விடுவார்கள் பிள்ளைகளை அவர்கள் போக்கில் ,ஆனால் கண்காணிப்பார்கள்.

பள்ளியில் ஆசிரியர்கள் குறிப்பாக இளவயதில் அவர்கள் பங்களிப்பு மிகப் பெரியது . பெற்றோரை ஒரு குழந்தை பிரிந்து கல்வியுடன் கூடிய வாழ்க்கையினை அங்கேதான் தொடங்குகிறார்கள். கேள்வி கேட்கும் திறன் மிக வேகமாக இருக்கும்,எல்லாம் புதிதாக இருக்கும் அந்த வயதில்.

ஆசிரியர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு தொடக்கப் பள்ளிக்கூடம் மிகப்பெரிய பங்களிக்கிறது வாழ்வில் . கலைப்பள்ளி என்னும் தொடக்கப்பள்ளியில் தான் நான் படித்தேன் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். நான் இங்கே தமிழில் இவ்வளவு ஆர்வம் காட்ட வித்திட்டவர் என் தந்தை, அவர்தான் நான் தமிழ் வழிமுறை கல்வியில் தான் படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். பசுமை நிறைந்த, தடுப்பு சுவர் இல்லாத ,இடுப்பு உயர சுவர் உள்ள பள்ளி . ஆசிரியரை நாங்கள் அம்மா என்று தான் அழைப்போம் .

இன்றும் ஞாபகம் இருக்கிறது ஆரஞ்சு மிட்டாய் உடன் பள்ளியின் முதல் நாள் பானுமதி அம்மாவை சந்தித்தது. வாழ்க்கையில் படிப்பில் கவனம் திரும்பியது என்னுடைய மூன்றாம் வகுப்பில்  ஏனென்றால் எலிசா அம்மா சிரித்த முகத்துடன் ,இளஞ்சிவப்பு குங்குமப்பொட்டு, பன் கொண்டையில் மல்லிகை பூவுடன் அவர்களை ரொம்ப பிடிக்கும் அதனால் படிப்பில் ஆர்வம் தானாக வந்தது. நான்காம் வகுப்பில் பெரிய வளையம் போட்ட அம்மா, கொஞ்சம் கண்டிப்பானவர். ஐந்தாம் வகுப்பில், மேரியம்மா என்றாலே எல்லோரும் பயப்படுவார்கள் பழகியுடன் தான் தெரிந்தது,பாசமானவர். இன்னும் ஞாபகம் இருக்கிறது சில்வர் கூஜாவில் குடிக்க தண்ணீர் கொண்டுவருவார்.

ஹெட் மாஸ்டர் அவரை நாங்கள் அண்ணா என்றுதான் அழைப்போம். எங்கள் பள்ளியில் காலையில் நடக்கும் இறைவழிபாடு சிறப்பு, யோகா முறையில் , பத்மாசனம் போட்டு தலையில் கைகூப்பிய நிலையில் இறை வழிபாடு நடைபெறும் .அப்பொழுது கையை வளைக்காமல் ,முதுகை வளைக்காமல் இருக்க ஆசிரியர்கள் உதவி செய்வர்கள். குறிப்பாக யோகா அண்ணா சொல்லித் தருவார் .

மறக்க முடியாத மற்றொன்று சத்துணவு கூடம் அதிலிருந்து வரும் மணம் மறக்க முடியாது. அந்தக் காலகட்டத்தில் பலபேர் அதற்காகவே பள்ளிக்கு வருவார்கள். எங்களுக்கு ஜாலி ஒரு மணி நேரம் கிடைக்கும் வீட்டிற்கு சென்று சூடாக சாப்பிட்டுவிட்டு வருவோம். எப்போதாவது சத்துணவு மிஞ்சி விட்டாள் மாலையில் உருண்டையாக உருட்டி அருகில் இருக்கும் வகுப்புகளுக்கு கொடுப்பார்கள். அதற்காக நானும் ஏங்கி இருக்கிறேன், அதை ருசிபார்த்து இருக்கிறேன். அழகான ,ஆரோக்கியமான கல்வி முறை அது.

குறிப்பாக கலர் டிரஸ் தான் டெய்லி போடுவோம், போகப்போகத்தான் யூனிஃபார்ம் வந்தது, வாரத்தில் ஒரு நாள்.


மேல்நிலைப்பள்ளி ஆரம்பித்தது, பெரிய பள்ளி, பெரிய கனவுகள் , தினமும் யூனிஃபார்ம். முதல் ஒரு வாரம் ஆங்கில எழுத்துப் பயிற்சி தான் இப்போது கேட்டால் சிரிப்பார்கள். புது இடம் ,அங்கு கிடைத்தார் தோழி மாதிரியான எஸ்தர் டீச்சர். அப்போதுதான் உணர்ந்தேன் அறிவியல் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று மிகவும் பயிற்சி மிக்க ஆசிரியர்.

மரத்தடியில் நடக்கும் டிராயிங் கிளாஸ் ,பாட்டு கிளாஸ் ,உடற் பயிற்சி வகுப்புகள் இன்றும் பசுமையாக இருக்கிறது நினைவுகளில்.. ஏழாம் வகுப்பில் பிரமிளா டீச்சர், சமூகவியல் ஆசிரியரை மறக்கமுடியாது.

எட்டாம் வகுப்பு பெர்சிலா டீச்சர் கிராமர் விளக்கம், இறந்தகாலம் ,நிகழ்காலம் ,எதிர்காலம் விளக்கப்படம் இன்னும் மனதில் பதிந்திருக்கிறது . அறிவியல் மீதான ஆர்வம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது .

அடுத்து வந்தது ஒன்பதாம் வகுப்பு மிகக் கண்டிப்பான ஆசிரியர் பார்த்தாலே நடுங்குவார்கள், பின் ட்ராப் அமைதியாக இருக்கும் வகுப்பறை . நோட்டு புத்தகம் ஒழுங்காக இல்லை என்றால் ஜடையையும் ,காதையும் திருப்புவார். ஒழுங்காக வரையவில்லை என்றால் நோட்டுப் பேப்பரை கிழித்து விடுவார். அப்பொழுது தான் கற்றுக்கொண்டேன் நீட் நர்ஸ் .கணிதம் மிகவும் எளிதாக எனக்கு புரிந்தது. ஒவ்வொரு ஸ்டெப்பும் அழகாக விளக்குவார். இப்ப பார்த்தா கூட அந்த புக்கை கண்ணுல ஒத்திக் கொள்ளலாம்.இன்றும் தொடர்கிறது அந்த டிசிப்ளின் . எனக்கு நல்ல பாடம் கிடைத்தது அவரிடம் என்னுடைய முதல் பனிஷ்மென்ட், வாய் துடுக்காக பேசியதற்கு கிளாஸ் லீடர் பனிஷ்மென்ட் . எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் தான் வசித்து வருகிறார்.. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் உங்க மாணவி என்று  சொல்லிகொள்ள பயமாக இருக்கிறது இன்றளவும். அவங்க பேரு பிளாரன்ஸ் டீச்சர்.. கண்டிப்பா பியூச்சர் ல போய் பேசுவேன்.

10th ஸ்டாண்டர்ட் அப்பொழுதுதான் என்னை உணர்ந்தேன் ,Vaiola டீச்சர் மிகவும் அருமையான தோழி அவர் சொல்லும் isn't இட் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சயின்ஸ் டீச்சர் நர்மதா, என்னுடைய அறிவியல் ஆர்வத்திற்கு சரியான வித்திட்டவர். பத்தாம் வகுப்பில் தான் எந்த ஒரு பயமும் இன்றி என்னை என்னால் வெளிப்படுத்த முடிந்தது. அதன்பின் அப்பள்ளியில் என்னால் தொடர முடியவில்லை.

11th ஸ்டாண்டர்ட் ஊரிலேயே பெயர் சொல்லும் பெரிய பழைமை வாய்ந்த பள்ளி. ஒரு வகுப்பில் 75 மாணவர்கள். வகுப்பு ஆசிரியர்களுக்கு எல்லா மாணவியர் பெயர் கூட தெரியாது.. அதுவும் புதுசா வந்த மாணவியை பற்றி சொல்லவா வேண்டும். ஆட்டு மந்தை மாதிரி தான் ஒரு அறையில் அடைக்கப்பட்டு இருந்தோம். டியூஷன் கொடிகட்டி பறந்தது, அங்கிருந்த ஆசிரியர்களும் அதில்தான் ஆர்வம் காட்டினர். வெளியுலகை கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இருந்தது எனக்கு, அதிலும் நல்ல தோழிகள் கிடைத்தனர். அதிலும் இங்கிலீஷ் டீச்சர், பிசிக்ஸ் டீச்சர் ,கெமிஸ்ட்ரி டீச்சர் மற்றும் பாட்னி டீச்சரை மறக்கவே முடியாது. பனிரெண்டாம் வகுப்பு முதல் முறை காப்பி அடிக்க தெரியாமல் மாட்டிக் கொண்டேன். அதுவும் கிளாஸ் டெஸ்ட் தான் எல்லோரும் செய்கிறார்கள் என்று நானும் ட்ரை பண்ணி பார்த்தேன் சுத்தமா படிக்காமல் சென்று விட்டேன் அன்று.பயத்தில் மாட்டிக்கொண்டேன் தாவரவியல் ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர்.அதன்பின் அவர் பார்க்கும் பார்வை ஒவ்வொரு முறையும் குத்தும் என்னை அன்று தான் முடிவெடுத்தேன் மீண்டும் இது மாறி தவறு செய்யக்கூடாது என்று. .. இனிதே முடிந்தது என் பள்ளி வாழ்க்கை.

பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் மிகப்பெரிய அடித்தளம் இங்கே கற்றுக்கொள்வதை தான் பிரதிபலிக்கும் வாழ்க்கை முழுவதும்..



இன்றைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர் இன்றும் என் பிள்ளைகளிடம் ஒவ்வொரு ஆண்டும் பலவித மாறுதல்கள் பார்க்கிறேன். எப்பெயர் பெற்ற பள்ளியாக இருந்தாலும் ஆசிரியரை பொருத்துதான் ஒரு மாணவன் வளர்கிறான். இன்றும் பல ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் .ஒரு பெற்றோராக பல இடங்களில் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இப்பொழுது இவர்கள் படிப்பதும், கேள்வி கேட்பதும் ,உலகைப் பார்க்கும் விதமும் மிக வேகமாக வளர்ந்து விட்டது, ஆனால் ஆசிரியர் மாணவர் உறவு அதே முறைதான் தொடர்கிறது.

இன்றைய ஆன்லைன் கிளாஸில் ஆசிரியர்கள் பொறுப்பு மிக அதிகம். குடும்பத்துடன் அதையும் மிகவும் திறம்பட புரிகின்றனர்.

முகநூலில் பார்க்கிறேன் பல ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் சிறுசிறு கிராமங்களுக்கு நேரில் சென்று மரத்தடியில் வகுப்பு எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, மிகவும் வரவேற்கத்தக்கது அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.

ஆசிரியர்கள்தான் நாளைய சமுதாயத்தை உருவாக்குவது அப்பேர்ப்பட்ட ஆசிரியர்களை நாம் மதிக்க சொல்லிக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை.

ஒவ்வொரு மாணவனும் ஒரு விதை போல அது மரமாக வளர்ந்து நாளைய சமுதாயத்திற்கு நிழல் கொடுப்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கையிலே.

எனக்கு கிடைத்த அனுபவங்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.. இது எனக்கு கிடைத்த பாடம் எவ்வளவு பெரிய பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை பல சிறிய பள்ளிகள் கூட பெரிய காட்டை உருவாக்கக்கூடிய பல திறமையுள்ள ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

அனைவருக்கும் நன்றி,

உங்கள் வித்யா.

Friday, August 28, 2020

அற்பணம் என் சமர்ப்பணம் by Jaya

 *அற்பணம் என் சமர்ப்பணம்*

                             -ஜெயா




அன்பிற்கு அகரமாய்

அன்பிலே சிகரமாய்

அன்பால் அரவணைத்து

இன்னல்கள் களைந்து

ஈரைந்து மாதங்கள்

உயிருக்குள் சுமந்து

ஊர் மெச்ச வளர்த்து

ஊனுருக தன் மகவுகளை

வளர்த்த அனைத்து

அன்னையர் தெய்வங்களே

எங்கள் நடமாடும் தெய்வமே!!!

என்றும் அனைவரையும் அன்பால் வழி நடத்தி..... 

நாம் நடக்கும் பாதையில்

மலர்களை கிடத்தி.....

எங்களை வாழ வைக்கும் எங்கள் அன்னையே......

வாழ்க பல காலம் நீடூழியே......


வணங்குகிறோம் சிரம் தாழ்த்தி🙏🙏

சில நினைவுகள் by Kanchana

                             சில நினைவுகள்

                                        -காஞ்சனா

           சினிமாவில் முதல் சீனில் காண்பிக்கும் பெரிய இரும்பு கேட்டினை திறந்துகொண்டு......ஐந்தாயிரம் அடி சாணிப்பூசி மெழுகிய வாசலில் கால் அடி வைக்கும்போது ஊர் பஞ்சாயத்து தலைவரின் பேத்தியாக மிடுக்காக உள்ளே நுழைந்த அனுபவங்கள்.....பெரிய பெரிய தாழ்வாரங்கள், சித்தி, பெரியம்மா,ஆயா, அண்ணா எல்லோரின் அன்பு வாழ்வில் என்றும் நீங்காத அன்பு......சூரிய உதயத்திற்க்கு முன்பே எழுந்து அவ்வளவு பெரிய களத்தில் ஒற்றை ஆளாக சாணித்தெளித்த என் ஆயாவின் வியர்வை இன்று இந்த சின்ன வீட்டினை பராமரிக்க முடியாத என்னை நினைத்து பார்க்க வைத்துள்ளது... விறகடுப்பில் மணக்க மணக்க சமைக்கும் என் ஆயாவின் கைவண்ணம் இன்றும் நாவில் நீர் ஊறவைக்கும்......பெரிய நாலணா அளவில் பொட்டு, கொசவம் வைத்த புடவை, அழகுக்கு அழகு சேர்க்கும் கண் கண்ணாடியில்.... அவர்கள் அவ்வளவு அழகு......!மிடுக்கோடு ஒற்றைப் பெண்மணியாக...தன் கணீரென்ற குரலால் 2ஏக்கர்தாண்டியுள்ள வேலை ஆட்களை வேலை வாங்கும் என் ஆயாவின் பெண் சுதந்திரம் இப்போது இல்லை இந்நகரத்தில்..... மோட்டார் தொட்டியில் இறங்கி....ஷாம்பு பூசிய தலையோடு அண்ணா, அக்கா,தம்பிகளோடு விளையாடிய நினைவுகள் மீண்டும் கிடைக்காத அனுபவங்கள்.... ஓங்கி வளர்ந்த கல்யாண முருங்கை மரங்களின் செழுமை காணக்கிடைக்காத சூழ்நிலைகள் இன்று..... மரங்களின் நடுவில்.....மாட்டு தொழுவத்தில் உள்ள துளைகளில் வண்டுகளின் விளையாட்டுகள் மறக்க முடியாத ரீங்காரம், தோட்டததில் பறித்த தக்காளியில் விளையாடி கூட்டாஞ்சோறு ஆக்கிய நினைவுகள்..... அப்படியே நேரம் ஆனப்பின் பக்கத்தில் உள்ள மில்லில்ப்போய்......செக்கினில் எண்ணெய் எடுத்துக்கொண்டிருக்கும் அம்மா.....ஆபிஸில் கணகெடுக்கும் டாடி, அரிசி அரைக்கும் இயந்திரத்தினை ரசிக்கும் நாங்கள் மதிய நேரத்தில் நீண்ட அந்த மில்லுக்குள் ஓடி ஒளிந்து விளையாடி..... அரிசி அரைக்கும் இயந்திரத்தின் பெல்ட்டில் உட்கார்ந்து விளையாடிய அனுபவங்கள் மீண்டும் இன்று மனதில் நுழைந்து உயிருட்டிக்கொண்டிருக்கும் சக்திக்கு நன்றி.....மாலை நேரத்தில் பொடி நடையாக நடக்கும்போது கிருஷ்ண நாயக்கர் பேரப்பிள்ளைகளா என்ற அனைவரின் விசாரப்பில் மிடுக்காக நடந்து தான்தோன்றிஸ்வரின் கோவிலிக்கு சென்று ஈசனை வழிபட்டு, பிரகாரத்தில் உட்கார்ந்த நினைவுகள் இன்றும் என் நினைவில் நீங்கா நினைவுகள்.......

                   என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்...... இன்றும் நீங்க முடியாத பசுமையான ஞாபகங்கள்..... என் உணர்வுகளில!ஓட்டு வீட்டின் முற்றத்தில்..... கோழி🐥🐥சிங்கார நடையும்..... கொக்கரக்கோ என்ற🐓🐓கூக்குரல்களும்......காலை சுற்றி சுற்றி வரும் 🐕🐕🐈🐈களின் படைகளோடு..... கிணற்றருகில் (என் தந்தையின் வியர்வை துளிகளில் உருவாக்கிய)உள்ள தொட்டியில் உட்கார்ந்து ஆலங்குச்சியில் பல்துலக்கி.....மீண்டும்🐕🐈🐕🐈 படைகளோடு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு.....சற்று ஆசுவாசபடுத்திக்கொண்டு...... மீண்டும் என் தந்தை உருவாக்கிய சிறிய பெருமாள் கோவிலில் வந்து.....மனதில் கண்ணனின் லீலைகளில் மெய்மறந்ததது மட்டுமல்லாமல்.....அவனோடவே வாழ்ந்ததுப்போன்ற நினைவுகளில்.....சந்தனமரமும், கருகமணியின் நிழல்களில்...... பாறைகளில் உட்கார்ந்து பனம்பழம் சுட்டு சாப்பிட்ட நினைவுகள்.... இன்னும் நீங்கா உணர்வுகள்..... மீண்டும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, பக்கத்தில் இருக்கும் 

           🐂🐄🐂🐄 மாட்டுதொழுவத்தில் உள்ள அட்டாலியில் அமர்ந்து விளையாடிய நினைவுகள்...... மாலை நேரங்களில்🐃🐃🐃🐃 எருமை மாட்டின் மீது(ஏதோ அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் இளவரசியினைப்போல) அமர்ந்து மரிச்சியின் நடுவில் பயணித்து இருபுறமும் வளர்ந்திருக்கும் நெற்கதிர்களும், சோளககதிர்களின் வாசங்களில் சென்ற நினைவுகள் இன்னும் பசுமையாக என் நெஞ்சில்..... அப்படியே அம்மாகூடவே பக்கத்து காட்டில் இருக்கும் தாத்தாவின் மெத்தைவீட்டுக்குப்போய்.... அங்கிருக்கும் உறவுகளோடும் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது....நான் மட்டும் ஏனோ என் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருக்கும்.....அவ்வபோது பாரயணமும், சொற்பொழிவு ஆற்றும்.... என் தாத்தாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது பழைய புராணங்களின் கதைகளை உள்வாங்கிய நினைவுகள்தானோ என்னவோ இன்றும் இறைசேவைகளில் என் நாட்டத்திற்க்கான காரணமாய் இருக்கலாம..... அப்படியே தாத்தாவோடு மாரியம்மன் கோவில்க்கு சென்று.... பூஜைகளை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கயிற்றுக்கட்டிலில் என் அப்பாவின் நெஞ்சினில் படுத்து......சிறுசிறு வண்டுகளின் ரீங்கரத்தோடும்....🐞🐞🐞🐞தவளைகளின் கரகரகுரல்களோடும் இனிமையான உறக்கம் இன்றும் என் நினைவில் நீங்கா உறவுகள்.........


மனமிருந்தால் மார்க்கமுண்டு by Jaya

 *மனமிருந்தால்     மார்க்கமுண்டு*

                           -ஜெயா


பிரச்சினைகள் இல்லா வாழ்க்கை அரிது

ஓவ்வொன்றும் பல விதம்,

அதை அணுகுவதில், 

ஒவ்வொன்றும் ஒரு விதம்,

விதண்டாவாதம் தவிர்த்து, 

விரைவில் தீர்வுக்கு வர,

விவேகமான மனதுடன்

நிதான எண்ணத்துடன்

தீர்கமான தீர்மானம் இருந்தால் மனதினில் தீர்வு தானே வரும்.


மனமிருந்தால் மார்க்கமுண்டு!!!

Thursday, August 27, 2020

அன்னை தெரசா by Vidhya Nivash

 அன்னை தெரசா

அனைவருக்கும் வணக்கம்,

நான் கண்ட முதல் செவிலியர் சகோதரி என்னைவிட வயதில் சிறிய பெண் ,இன்னும் ஞாபகம் இருக்கிறது "ஏன் இப்படி உங்கள் உடல் நடுங்குகிறது , பயப்படாதீங்க" என்று கூறிய வார்த்தைகள்.

என்னுடைய நெருங்கியவர் கூட செய்ய தயங்கும் வேலைகளை அவர்கள் சகிப்புத்தன்மையுடன் ,கூடிய அரவணைப்பு, வார்த்தைகளால் சொல்ல முடியாது . மனதால் அவர்கள் என்றும் உயர்ந்தவர்கள்.

முன்பின் தெரியாதவர்கள் அப்போது தெய்வமாக தெரிவார்கள். எப்போது வருவார்கள் என்று ஆவலுடன் காத்திருப்பது, அவர்கள் வருகைகாக மட்டும் அல்ல , பார்த்தவுடனே ஒரு புத்துணர்ச்சி வரும் . எத்தனை பிரச்சனைகள் தங்களுக்குள் இருந்தாலும் எம்மிடம் அவர்கள் காட்டும் அக்கறை மிகப் பெரியது .

அந்த ஒரு வார கால இடைவெளியில் ஒரு உறவே உருவாகும். அவர் காட்டும் அக்கறையும் கொடுக்கும் தைரியமும் நம்மை சீக்கிரம் குணமடைய செய்யும். 

ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு சகோதரன் உதவி பண்ணினார் ,என்னால் நடக்க முடியாத போது அவர் கேட்கும் புன்னகையுடன் கூடிய நல விசாரணை மறக்க முடியாது. எந்த வித பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்கள் செய்யும் சேவை மிகப்பெரியது.

இன்னொரு சகோதரி பணிவிடை செய்ய வந்தார் அவரை பார்த்து மிகவும் வியந்தேன்  ,காலத்தின் கோலம் அவர்கள் திறமைகள் முடக்கப்பட்டு. ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியால் உயர்ந்து இருக்கிறார்கள், ஒரு குடும்பத்தையே தாங்கி நிற்கிறார்கள்.

நான் கண்ட சில அன்னை தெரசா இவர்கள் இன்னும் எண்ணிலடங்கா சகோதரிகள் , சகோதரர்கள் இருகின்றனர் அவர்கள் என்றும் நலமுடன் ,வளமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். 

இந்த சூழ்நிலையில் நாம் வெளியே செல்லக்கூட யோசியிக்கிறோம்,சேவை மனப்பான்மையுடன் இயங்கும்  துப்புரவுத்துறையில்,மருத்துவ துறையில் மற்றும் காவல்துறையில் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களையும் வாழ்த்தி ,வணங்குகின்றேன்!!!

என்றும் அன்புடன்,

                -வித்யா



சின்ன சின்ன ஆசைகள் by Kanchana

சின்ன சின்ன ஆசைகள்

                       -காஞ்சனா



பூக்கள் நிறைந்த


பாலைவனத்தில் உன்னோடு


சேர்ந்து தோட்டம்


அமைக்க ஆசைதான்.


வண்ணத்து ப் பூச்சிகளோடு


சிறகை விரித்து உன்னோடு


பறக்க ஆசைதான்.


மேகக் கூட்டங்களுக்கு நடுவில்


உன்னோடு ரோஜாகூட்டம்


அமைக்க ஆசைதான்.


நிலவின்வெளிச்சத்தில்


வானில் உன்னோடு


நட்சத்திரமாக இருக்க ஆசைதான்.


அதிகாலை வேளை


மார்கழி பனியில்


உன்னோடு கைகோர்த்து நடக்க ஆசை தான்.


போகும் இடம் தெரியாமல்


நேரம் அறியாமல்


உன்னோடு பேசிக்கொண்டு இருக்க ஆசை தான்.


இளவேனில் காலத்தில்


தூறும் மழை துளிகளோடு


உன்னோடு நனைந்து செல்ல ஆசை தான்.


ஏட்டில் எழுதிய


சின்ன சின்ன என் ஆசைகள்......


அனைத்தையும் நிஜமாகி கொண்டிருக்கிறேன் உன் கை கோர்த்து இன்று.


ரசிக்க ரசிக்க by Kiruthika


ரசிக்க ரசிக்க ... 

எழுத தோணும்..

                 -கிருத்திகா

நமக்குள் அலையென ஊற்றெடுக்கும் பல-

எண்ணங்களை....

காதில் நுழைந்து -

மனதை பாதித்த கதைகளை....

சொல்ல தவிக்கும்-

ஆதகங்களை...கோபங்களை....

காட்சி படுத்த முடியாத-

காதல் நேசங்களை...

என எதை வேண்டுமானாலும்..

எழுத்துக்கள் கோர்த்து -

வார்த்தைகள் வடிகட்டி.. 

படைத்திடலாம்.. இங்கே -

இனிக்கும் தமிழில் ...!!!!

எல்லைகள் இல்லாது........

ஒரு கவிதையே 

பிரசவித்தது இங்கே... !!!

இதான் நம் மொழி -

செம்மொழி..!!!!

ரசிக்க ரசிக்க...

ஊட்டி -வளர்க்க வளர்க்க..

தாய் ஒருத்தி இருந்தால் போதும்..

தமிழ் குழந்தை தவழ்ந்து -கொண்டே சிரிக்கும்.....

எங்கேயும் எப்பொழுதும்...


இருக்கிறதா??இல்லையா?? by Jaya


இருக்கிறதா??          இல்லையா??    
       

                                      _ ஜெயா

இருப்பவர்களுக்கு எல்லாம் இருந்தும் இல்லாமை

நிம்மதி தன்வசம் இல்லாமை


இல்லாதோருக்கு எல்லாம் இயலாமை

பணம் தன்வசம்  கொள்ளா இயலாமை


அனைத்தும் இருந்தும்    நிம்மதி இல்லாதிருப்பது

என்றும் இழப்பு தான் வாழ்கையில் பேரிழப்புதான்


இருந்தும் இல்லாததிருப்பது சலிப்புதான்

வாழ்வில் சலிப்பு தான் 


இல்லாதிருப்பது கூட ஒரு வகையில் 

நிம்மதி தான், மனநிம்மதி தான். 

Travel Tips - By Divya.C

 Vacations often start off as a wonderful idea and then eventually end up being a nightmare to manage. With a little bit of preparation and effort in maintaining a personalized trip planner, travelers can overcome 90% of their difficulties they may face during a trip. Here are some handy trip planning tips that will help your travel easier. 

                                     

1.How to plan a Trip? 

Choose your destination and decide the duration.Enquire all the tourist agencies and compare the prices.If you have any particular interest of visit,you can clearly discuss with the agents and you can make the itinerary a tailor-made one. 


2.Booking your Travel 

After the ideation is complete, booking tickets for your flight, train or bus transfer well in advance is an important step in learning how to plan your trip to perfection. Since flight and train tickets are subject to availability and prices rise over time, getting the bookings done a few months in advance will help you avoid additional costs on your initial budget. 

                                           

Most of the times, it is better to book activities like water sports, adventure sports, boat-rides, and safari rides at the destination itself to get a better price and some scope for bargaining. 


3.Packing tips 

                                                     

Check with airlines baggage-fee policy.Start your packing process days or even weeks ahead of your departure date; this gives you time to craft a complete list, plus purchase any additional items you might need for your vacation. Creating a packing list is a safe way to ensure that you never, ever forget to bring something important. 

It's terribly important to keep your valuable and essential belongings in your carry-on bag, not in your checked luggage. Your passport, identification, money, credit cards, jewelry, electronics, and other valuables should always be brought onto the plane with you. 

Electrical converters and adapters specific to your destination is an important item to carry with you. 

                                                  

Carry a range of plastic bags with you. They are useful for keeping dirty or wet clothes separate from clean clothes and storing the souvenirs 

Carry a basic first-aid kit.Take band-aids, antibacterial cream,lip balms and ointments for minor cuts and scrapes. You never know when you’re going to need it and you can’t always get it when you travel. 

 

4.Tips for Air Travel 

Soft, breathable clothing like sweatshirts and cotton t-shirts will help you feel more relaxed and comfortable. Avoid wool, tight fitting clothes, or scratchy tags. There’s nothing worse than feeling itchy while stuck in a small space. 

                                       

Wear the right shoes.Stay away from high heels or clunky boots when flying. You want shoes that are not only comfortable, but can slip on and off easily so you can get through security without a hitch. 

Skip the coffee or soda and go for water. The caffeine and sugar will just lead to a crash leaving you more tired and dried out than before. Most airlines will provide you with a pillow and blanket for longer flights, so you might as well use them! But it's smart to bring a neck pillow.


5.Travel Snacks. 

Packing your own healthy snacks will help you resist the temptation to buy something unhealthy and expensive.  

                              

You can carry Dates,Flavoured milk,dry fruits,Roasted Nuts,protein bars and Digestive biscuits.You can take peanut butter as bread will be available everywhere easily..Go for shopping in the evenings and take few seasonal fruits locally available and use them for snacking while travelling. 


6.The Travel items you don’t actually need 

                                                           

Excess Gadgets: you really don’t need to pack more than a smartphone and perhaps a camera and maybe a laptop to download all the photos taken 

Soap and Shampoo:Chances are these basic toiletries will be available at your accommodation.If not,you can check on toiletries at a local grocery store. 

Hairdryer and Travel Iron:The hairdryers and a travel iron is really necessary only if you’re traveling for work or another purpose that calls for business attire. And even if that’s the case, most hotels have irons in each room or ones you can use. 

Multiple Pairs of Shoes:If you’re going to be climbing mountains or traveling through snowy conditions, you may need some extra footwear. But if not, chances are you can get by with one or two pairs.For a warm-weather trip, pack a pair of sandals for the beach or casual strolls and a pair of close-toed, supportive shoes you can wear for the long-haul. For a cold-weather trip, bring one pair water proof boots. 

Multiple Clothing Options: Minimize the choice, and plan one outfit per day in advance, and make it all about simplicity. Bring basic clothes in neutral colors that you can mix-and-match. Look for an option that can also be dressed down so you can wear it more than once. Pack as little as possible.Chances are, you can find a laundry service if need be; or you can grab some detergent and wash a few things in the sink or shower. 

Things like sunscreen, lotion, or mosquito repellent sound like unnecessary items but they are very vital in preventing any skin-related diseases 

 

7.How to not get bored on long travel days 

A good book or two can get you through the journey. 

A good way to pass the time when traveling is to explore the destination either using guidebooks or online if you have a connection. Exploring where you are going and making plans of what to see and do is great fun, and what would be a better time to do so than just before you will get there. 

If you are not traveling alone a great way to pass the time is to have interesting conversations with your travel companions. 

                                         

Any types of games are a good way to pass the time. You can play on your electronic devices or bring physical games to play (cards are handy as they don’t take up much space and you can play various games with them). 

If you haven’t gone through your photos or emails for a while you can easily pass an hour or two by cleaning out your photo and email folders. 


8.Better Photos 

You’ve spent days flying, driving, ferrying, boarding trains, or maybe even a combination of all of these modes of transportation to reach your destination. And now you’re finally here, the place you’ve always dreamt about, told friends about, and bragged to your coworkers about, so of course you want to capture it in all its glory on your smartphone or your camera. But when you do, you sometime realize the images simply don't do its justice and you’re stuck with nothing to show for your journey of a lifetime. Take as many as candid shots you can as they will be natural and lively. Great photos are the ultimate souvenirs.  

                                        

You may only see these places & meet these people once in your lifetime. Remember them forever with plenty of photos!  

“The candid, awkward, inspiring, excited moments you can't really plan for. So, keep that camera out and don't be afraid to snap candid captures along the way.” 


9.How to stay safe while travelling 

Be informed about your destination.In big cities you should know the areas which are safe and those which are dangerous for tourists. 

                                                       

When you plan to be abroad for a while, it’s highly recommended getting a travel insurance to ensure emergency medical and evacuation assistance and 24/7 support when you need it most. 

Keep an eye on your belongings especially when being in transfer mode (traveling from on spot with all your luggage to another) you should always keep an eye on all your stuff 

Carry passport and cards close to your body.Don’t carry all your cash in your wallet. Every time you open your wallet, you risk exposure. Hide a bit of your cash in a hidden compartment in your luggage and your clothing. 

Don’t get fully engrossed in the sights. Make sure you look around now and then; being aware of any suspicious looking people can help prevent thefts and other crimes. 


10.General Tips 

1. Get a local SIM card with international calling facility.  

2.Understand local cultures, rules, laws, crime rates, weather conditions, attitudes, etiquette, price of things and similar information. 

                           

3. Find out which areas of your destination are considered safe and which are considered shady. 

4.Read up on common scams and crimes in your destination area. 

5.Read local reports on the internet and follow up on current events, especially any political unrest. 

6.Learn what could be termed offensive behavior at your destination, to avoid provoking people by accident. 

All these tips are based on my personal travelling experiences and Hope this helps-DIVYA.C 

                                            

 

 

 

 

 

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...