Thursday, August 27, 2020

ரசிக்க ரசிக்க by Kiruthika


ரசிக்க ரசிக்க ... 

எழுத தோணும்..

                 -கிருத்திகா

நமக்குள் அலையென ஊற்றெடுக்கும் பல-

எண்ணங்களை....

காதில் நுழைந்து -

மனதை பாதித்த கதைகளை....

சொல்ல தவிக்கும்-

ஆதகங்களை...கோபங்களை....

காட்சி படுத்த முடியாத-

காதல் நேசங்களை...

என எதை வேண்டுமானாலும்..

எழுத்துக்கள் கோர்த்து -

வார்த்தைகள் வடிகட்டி.. 

படைத்திடலாம்.. இங்கே -

இனிக்கும் தமிழில் ...!!!!

எல்லைகள் இல்லாது........

ஒரு கவிதையே 

பிரசவித்தது இங்கே... !!!

இதான் நம் மொழி -

செம்மொழி..!!!!

ரசிக்க ரசிக்க...

ஊட்டி -வளர்க்க வளர்க்க..

தாய் ஒருத்தி இருந்தால் போதும்..

தமிழ் குழந்தை தவழ்ந்து -கொண்டே சிரிக்கும்.....

எங்கேயும் எப்பொழுதும்...


1 comment:

  1. அருமை..தங்கள் தமிழ் புலமை கண்டு வியந்தேன் இன்று😊

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...