அனைவருக்கும் வணக்கம், பிரம்மராயர் கண்டிப்பாக போர் வரும் அப்பொழுது தான் இங்கே இருக்கும் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அரண்மனை வாசலில் சேரியில் இருந்து மக்கள் வந்து பறை இசைத்து, அவர்களுடைய மகிழ்ச்சியை கோயில் கட்டுவதற்கு தெரிவித்தனர். அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் அந்தணர்களிடம் நெல் கொடுக்கும்படி கூறுகிறேன் என்று உத்தரவிட்டார்.
அவர்கள் இந்த செய்தியுடன், அக்ரஹாரத்தில் சென்று அந்தணர்களிடம் கேட்டனர்.அவர்கள் நமக்கு வரியும் விதிக்கப்பட்டது .பல சலுகைகளும் தள்ளுபடி செய்யப்பட்டது இந்நிலையில் இது வேறயா!! அப்படிப் புலம்பிக் கொண்டிருக்கும் பொழுதே, அங்கே பிரம்மராயர் ஒற்றன் வைணவதாசன் அங்கே செல்கிறார்.
மன்னரின் உத்தரவின் பெயரில் நீங்கள் நார்த்தாமலையில் கணக்கெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களால் அதெல்லாம் முடியாது. நாங்களும் கூலிக்கு வேலைக்கு சென்றால் எங்களுடைய குலத்தொழில் என்ன ஆகும் .எங்களை யார் மதிப்பார்கள் எங்களால் கண்டிப்பாக கூலிக்கு வேலை செய்ய முடியாது. வேதத்திலும் அது தவறு என்று குறிப்பிட்டு இருக்கிறது என்று வாதாடினார்கள்.
திருமுனைப்பாடி நாட்டில் இருந்து வந்த ஐந்நூறு அந்தண இளைஞர்கள் வெறும் கோமணத்தோட வந்தனர் .அதைக் கண்ட அந்தணர்கள் எதற்காக இங்கே வந்தீர்கள் என்று கேட்டார்கள் .நாங்கள் தஞ்சைக்கு பிழைக்க வந்திருக்கிறோம் என்றார்கள் .தஞ்சை செழிப்பான பூமி என்று கேள்விப்பட்டிருக்கிறோம் .அப்படியா நாங்கள் பிழைக்க வேண்டாமா?? நீங்கள் இங்கே வந்து விட்டால் நாங்கள் எப்படி பிழைப்பது. உடனடியாக உங்கள் சொந்த ஊரை நோக்கி செல்லுங்கள் என்று அதட்டினார்.
திருமுனைப்பாடி அந்தணர்களை அழைத்து வந்த தொண்டை நாட்டு அந்தணர்களும் என்ன செய்வதென தெரியாமல். அரசரிடம் சென்று முறையிடுவோம் என்று கேட்டார்கள். அதற்கு அதில் இருந்த சில இளைஞர்கள் நாங்கள் இங்கே வளமாக வாழ வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வந்தோம் .இந்நிலையில் நாங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராக இல்லை. மன்னரை சந்திக்கவும் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி. ஊர் எல்லையில் இருக்கும் ஆலமரத்தின் அடியில் அன்றிரவு தங்கினர். அங்கே ரோந்து வந்த காவல்படையினர் மூலம் அந்த செய்தி அருண் மொழிக்கு சென்றது.
அவன் அவருடைய தந்தை பிரம்மராயர் இடம் ஏன் நாம் இவர்களை கணக்கு பணிக்கு ஈடுப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று வினவினான் .அங்கே சென்று அந்த இளைஞர்களிடம் பேசினார்கள். நாங்கள் ஈசான சிவ பண்டிதர் கூறியதால் இங்கே வந்தோம்.தஞ்சை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் .நாங்கள் பல விஷயங்களை இதுவரை கண்டதேயில்லை. இங்கே பார்த்து ஆச்சரியம் அடைந்தோம் .கணக்கு பார்ப்பது எங்களுக்கு தெரியாது .நீங்கள் கற்றுக் கொடுத்தால் நாங்கள் கற்றுக் கொள்கிறோம் என்று பணிவுடன் கூறினார்கள்.
நார்த்தமலையிருந்து வந்த குணசீலன் ஓவியன் சீராளன் இடம் சென்று தேர் செய்வதற்கான படத்தை வரைந்து எடுத்துக் கொண்டு. நேரடியாக கம்மாளர்களிடம் சென்று புதிய தேரை உருவாக்கினான். அதை முதலில் பெருந்தச்சர் ஓட்டி பார்த்தார். பிறகு அருண்மொழியும் இளவரசரும் ஓட்டினார் .ஒவ்வொருவரும் ஆச்சரியப்பட்டனர், இது இருந்தால் என்னால் எளிதாக காஞ்சிபுரத்திற்கு சென்று வர முடியும் என்று இளவரசர் பெருமைப்பட்டார். அனைவரும் குணசீலனை பாராட்டினார்கள்.
கருவூர்தேவர் அரண்மனைக்கு சென்றார். அனைத்து விஷயங்களையும் ஒன்றுவிடாமல் அரசரிடம் பேசினார் கடைசியாக சந்திரமல்லி வந்தவரை. நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் உன் உடல் நலத்தை பார்த்துக் கொண்டு ,கோயில் வேலையை திறம்பட செய்.ஆசிர்வதித்து விட்டு வந்த விஷயம் யாருக்கும் தெரியாத வண்ணம் அங்கிருந்து புறப்பட்டு விட்டார் .
அதைக்கண்டு பஞ்சவன் மாதேவியும் பெருமைப்பட்டாள் எப்பேர்பட்டவர் நீங்கள் உங்களுடைய குருநாதர் உங்களையே தேடி வந்து அக்கறையாக பேசி விட்டுப் போகிறார்.
மறுநாள் காலையில் தஞ்சை மற்றும் குடந்தையில் இருந்து அந்தணர்கள் வந்து அரண்மனை வாசலில் வேதம் ஓதினார்கள்.பஞ்சவன்மாதேவி இதை சென்று அரசரிடம் சொன்னாள்.அவர் கோபமடைந்து இந்த வேதத்தை கோயில் கட்டும் இடத்தில் சொல்ல சொல் சரியான தட்சணை கொடு என்று கூறிவிட்டார் .
பஞ்சவன்மாதேவி ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள் என்று கேட்டாள்.அவர்கள் தமிழுக்கும் ,சைவத்திற்கும் எதிரியானவர்களுடன் கூட்டு சேர்ந்து விட்டார்கள். என்று கோபப்பட்டார் முன்பே ஒரு நாள் வேதாகமங்களை போற்றுங்கள் அது போதும் என்று கூறியது இன்று எனக்கு ஞாபகம் வருகிறது.
அதற்கு பஞ்சவன்மாதேவி ஓர் அரசர் நடுநிலையுடன் இருக்க வேண்டாமா?? என்று கேட்கிறாள்.வேலைக்கு அழைத்தேன் அவர்கள் வரவில்லை. வேளாளர்களும் தான் கோயில் வேலையில் ஈடுபடவில்லை என்று கூறினாள் .அதற்கு அவர்களை நான் அழைக்கவில்லை. இவர்களை அழைத்து வரவில்லை என அவர்களை இன்று சந்திக்கவே முடியாது. எப்பொழுது என்னுடைய மனம் சாந்தி அடைகிறதோ அப்போது நான் அவர்களை சந்தித்து கொள்கிறேன் கூறிவிட்டார் கோபமாக ..அப்பொழுது பழைய நினைவுகளுக்கு செல்கிறார் மன்னர்.
உத்தமசோழன் ஆட்சிக்காலத்தில் இளவரசர் அருண்மொழி பழையாறையை விட்டு தஞ்சைக்கு செல்கிறார்.
அங்கே திருவையாறில் மழபாடி என்னும் ஊரில் இருக்கும் பரமன் நெருங்கிய நண்பன். சோழதேசம் பற்றி அறிய ,இன்னும் பயிற்சி எடுக்க ,மக்களுடன் பழக இளவரசருக்கு சிறிது காலம் தேவைப்பட்டது .பரதன் பெற்றோர் மன்னராய் நீ வருவாய் என்று ஆசைப்பட்டோம் கடைசியில், உத்தம சோழன் ஆட்சி மிகவும் மோசமான ஆட்சியாக இருக்கிறது. இங்கே பல அநியாயங்கள் நடக்கிறது .இதை ஒழிக்க நீ கண்டிப்பாக அரசனாக வேண்டும் என்று கூறினர் .
முதன்முதலில் தில்லையில் பஞ்சவன் மாதேவியின் நடனத்தை இளவரர் காண நேர்ந்தது. அந்த 'தோடுடைய செவியன் 'பாட்டிலேயே இளவரசர் அருண்மொழி மயங்கி விட்டார்.
மறுநாள் முழுவதும் அந்த பழுவூர் பெண் பஞ்சவன்மாதேவி பற்றியே பேசிக் கொண்டிருந்தார் .மீதி தேவாரப் பாடலை அறியும் ஆசை அதிகமாக இருந்தது அவரிடம் .கடைசியாக பஞ்சவன்மாதேவி வீட்டை தேடி சென்றார்கள் .அங்கே சென்று பஞ்சவன்மாதேவிடம் அந்த சுந்தரர் பாட்டு அடுத்த வரிகளையும் நான் கேட்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார் .அரச குடும்பத்தில் இருந்து வந்திருப்பவர் போல் தெரிகிறதே என்று கேட்டுக் கொண்டிருந்தாள் .இவர் சோழ தேசத்தின் இளவரசர் அருண்மொழி என்று கூறுகிறான் பரதன் அதைக் கேட்டவுடன் அவள் வீட்டிலில் ஒரு அறையிலிருந்து அவளுடைய தந்தை வெளியே வருகிறார் .அவருடைய தந்தையின் பெயர் செங்காளி அவர் பழுவேட்டரையர் வம்சத்தை சார்ந்தவர் .
அவர் இளவரசரை கண்டு நான் உங்களை சிறுவயதில் கண்டிருக்கிறேன். உங்களுக்கு குதிரை பயிற்சி சொல்லிக் கொடுத்திருக்கிறேன் என்றெல்லாம் கூறுகிறார். சுந்தர சோழர் காலத்தில் எங்களுக்கு நல்ல உறவு இருந்தது ஆதித்தகரிகாலன் மரணத்தின்போது பிரச்சனை வந்துவிட்டது. நீ மன்னராக வருவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் .
இங்கே அந்த அந்தணர்கள் உங்களைப் பற்றி தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி மக்களும் உங்களை பேடி என்று கூறும் அளவிற்கு கொண்டு சென்று விட்டனர் .
ஐயா உங்களுடைய உதவி எனக்கு தேவைப்படுகிறது. அண்ணனின் மரணத்திற்கான உண்மை எனக்கு சிறிதளவு தெரியும் .அதை புரிஞ்சிக்கவே நான் இப்படி ஊர் ஊராக செல்கிறேன் .உங்களை நான் எப்படி நம்புவது , வந்தியத்தேவனுக்கு அவ்வப்பொழுது செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
செங்காளியை எப்படி இங்கே வந்தீர்கள் என்று கேட்டார் .நான் சிதம்பரத்தில் காவல்படையில் இருந்தேன் .அப்பொழுது அங்கே கோவிலில் இருக்கும் ஒரு அறையில் பல உலோக சிலைகளும், சிவனடியார்கள் உடைய சிலைகளும் ,ஓலைகளும் இருந்தது .நான் அதை திறந்து பார்க்க ஆசைப்பட்டு அதை திறந்து பார்த்தேன். யார் திறந்தது என்று கண்டுபிடித்து என்னை அங்கிருந்து சிறைக்கு மாற்றிவிட்டார்கள்.சிறையில் ஒரு பித்து பிடித்தவனை நான் கண்டேன். அவனை நான் பராமரித்து வரும் பொழுது அவன் கரிகாலனுடைய மரணத்தைப் பற்றி என்னிடம் பேசினான், பிறகு அவனுக்கு என் மீது சந்தேகம் வந்து. எனக்கு ஏதும் தெரியாது என்று பயந்துவிட்டான். பிறகு குதிரை காவலுக்கு என்னை அனுப்பி விட்டனர்.
ரவிதாஸனுக்கு சிதம்பரம் தான் வசதியாக இருந்தது .ஏனென்றால் இங்கிருந்து பூம்புகார் மிக பக்கம் அங்கிருந்து ஈழ தேசத்திற்கும் ,காந்தளூர் சாலைக்கும் சென்று வர எளிதாக இருந்தது. அங்கே பலரை பயிற்சி கொடுத்திருந்தனர் .பரதர்களையும் அவர்களுக்கு ஆதரவாக பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது இளவரசர் திடீரென்று எனக்கு ஏற்கனவே மூன்று பட்டமகிஷிகள் இருக்கிறார்கள். நீங்கள் விரும்பினால் உங்களுடைய மகளை நான் மணக்க விரும்புகிறேன் என்று நேரடியாக கேட்டு விடுகிறார்.
இவள் தாய் ஒரு தளிச்சேரிப் பெண் ,தலைக்கோலி .பழுவேட்டயார் பரம்பரை என்னுடையது. நாங்கள் உங்கள் அடிமைகள் ,உங்களுடைய விருப்பம் என்று கூறிவிட்டார் .அங்கிருந்து வெளியே கிளம்பி விட்டார் .இளவரசர் என்ன உன்னிடம் நகைத்தாரா என்று அனைவரும் பஞ்சவன்மாதேவியை கேலி செய்தனர்.
வந்தியதேவன் சிதம்பரத்திற்கு வந்தவுடன் பரதன், இளவரசரும் சென்று அந்த சிறையில் இருக்கும் கார்மேகத்தை கண்டனர் .கார்மேகமோ அவர்களைக் கண்டு நடுங்கினான். பிறகு மெல்ல உண்மையை சொல்ல தொடங்கினான் .
ரவிதாசன் மற்றும் பரமேஸ்வரன் சூழ்ச்சியால் ஆதித்த கரிகாலனைக் கடம்பூர் அரண்மனையில் கொன்றனர் .இவர்களுக்கு உத்தமசோழன் உடந்தை என்று உண்மையைக் கூறிவிட்டு, கதறி தேம்பித் தேம்பி அழுதான் .உங்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன் என்று புலம்பினான்.
நீ எப்படி பிறகு இந்த சிறைக்கு வந்தாய் என்று கேட்டனர். எனக்கு காசு கொடுத்தனர் ,நான் அடங்கவில்லை மீண்டும் சென்று காசு கேட்டேன். அப்பொழுது அந்த அந்தணர்கள் நீ திரும்ப திரும்ப ,இப்படியா வருவாய் என்று என்னை கொல்ல வந்தார்கள் .என்னுடைய மனைவியரின் வேண்டுதலால் சிறையில் அடைக்கப்பட்டேன் .ஆனால் என் குடும்பம் சீரழிந்து விட்டது .என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கதறினான் .
இதைக் கேட்ட இளவரசர் அப்படியே ஆடிப்போய் கத்தினார்,கதறினார் என்னுடைய அண்ணன் ஆதித்த கரிகாலனின் மரணம் இவ்வளவு கொடூரமாக இருக்கவேண்டும் என்று புலம்பினார்.
அங்கே சிதம்பரத்தில் கோயிலில் நம்பியாண்டர் நம்பி ஊரில் இருந்து திரும்பி வந்து. அறையை திறக்கும்படி அந்தணர்களிடம் போராடிக் கொண்டிருந்தார். அதற்கு அவர்கள் அந்த நால்வரையும் சிவனடியார்களை வந்தால் தான் நாங்கள் கதவைத் திறப்போம் என்று கூறிவிட்டார்கள் .
அதைக்கேட்ட பஞ்சவன்மாதேவி இளவரசரிடம் இதைச் சென்று கூறினாள். அண்ணனின் இறந்த செய்தியை கேட்ட துக்கத்தில் இருந்த இளவரசன் ,வெகுண்டு எழுந்தார் தமிழுக்கும் ,சைவத்திற்கும் எதிர்ப்பு என்றால்.. நான் தான் முதல் ஆளாக அங்கே இருப்பேன் .என்று சிதம்பரம் கோயிலை நோக்கி செல்கிறார்கள் .
கதவைத் திறக்க சொல்கிறார்கள், அதற்கு அந்தணர்கள் அதில் இருப்பவை வெறும் பொம்மை அது தேவையற்றது என்று வாதிடுகின்றனர். அதற்கு இளவரசர் அதில் இருப்பது பொம்மை என்றால் நீங்கள் கும்பிடும் தெய்வமும் பொம்மையா இங்கிருக்கும் நடராஜனும் பொம்மையா???என்று கேள்வி எழுப்பினார். உங்களுடைய வேதத்தை நான் மதிக்கிறேன். அதுபோல் எங்களுடைய உரிமைகளை தடுக்க நீங்கள் யார். இப்படியாக திறக்க உத்தரவிடுகிறார் .
எங்கள் இடத்தில் வந்து எங்களை அதிகாரம் செய்ய நீங்கள் யார்?? என்று கேட்டேன் ஒருவன்.இளவரசன் வாளை உருவி பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார் .பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த அறை திறக்கப்படுகிறது. அதைக் கண்ட நம்பியாண்டர் நம்பி அழுது புலம்புகிறார். என் சிவனே அங்கே பெரிய கரையான் புற்றுக்குள் பல உலோக சிலைகளும் பாதி அழிந்த நிலையில் ஓலைகள் மலையாக இருக்கிறது.
என் கைப்பட்டால் இன்னும் அழிந்துவிடும். இதற்கு முதலில் தைலக்காப்பு செய்யவேண்டும். என்று தைலக்காப்பு செய்து ஒவ்வொரு ஓலையாக மெதுவாக தட்டி அதை சுத்தம் செய்தனர்.
தமிழையும் ,சைவத்தையும் வென்ற பெருமையுடன் இளவரசர் தஞ்சை நோக்கி செல்கிறார்,பஞ்சவன்மாதேவியுடன். இதை அறிந்த ரவிதாசன் ,பரமேஸ்வரனும் தப்பி விடுகின்றனர்.
அரசவையில் உண்மை விசாரிக்கப்படுகிறது . கடைசியாக உத்தமசோழன் ஒத்துக் கொள்கிறான் .என்னுடைய தாயாரின் தூண்டுதலும் அந்த பரமேஸ்வரன் ரவிதாஸன் அடக்குமுறையில் நான் இப்படி தவறாக நடந்து விட்டேன். ஆனால் கொல்ல நினைக்கவில்லை என்று ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.
பிறகு ஈசான சிவபண்டிதர் தலைமையில் இளவரசர் அருண்மொழி அரசராகப் பட்டம் ஏற்கிறார். உடனடியாக உடையார்குடி உத்தரவிடுகிறார் .அங்கு இருக்கும் அனைவரும் நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று கடுமையாக கூறினாபொழ.எல்லையில் இருந்து செல்லும் பொழுது அந்த அந்தணர்கள் சாபங்கள் விட்டு சென்றுள்ளனர்.
பிறகு காந்தளூர் சாலையையும் படையெடுத்து அழித்துவிட்டார். திரும்பி வந்து பஞ்சவன்மாதேவி முறைப்படி திருமணம் செய்து ,அனைவருக்கும் அறிக்கை விடுகிறார்.
நன்றி.
மூன்றாம் பாகம் முடிவு பெற்றது .மீண்டும் நான்காம் பாகத்தில் சந்திப்போம்....
Click here for Udayar audio book part 3:4👇
Udayar audio book part 3:4