அனைவருக்கும் வணக்கம்,
தந்தை மற்றும் மகனுடைய உருக்கமான பேச்சை கேட்டவுடன். பிரம்மராயர் ராஜேந்திரனும், அருண்மொழியும் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டும், மற்ற அனைத்து பொறுப்புகளையும் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினார் .அத்துடன் அரசவை கலைந்தது .
அன்றிரவு பெருந்தச்சன் மன்னரின் பேச்சை கேட்டு உற்சாகத்துடன் நாம் எப்படி செய்ய வேண்டும் என்று பல யுக்திகளை கலந்து ஆலோசித்தார்கள். அவருடைய சீடர்களும் பல புது யோசனைகளை கூறினார்கள். அதைக் கேட்டு தச்சரும் பெருமகிழ்ச்சி அடைந்தார் என்னுடைய பாக்கியம் நீங்கள் எனக்கு கிடைத்தது. அப்பொழுது அவருடைய சீடரான குணவன் நான் சென்று பிரம்மராயர் உடன் கலந்து ஆலோசிக்கிறேன் என்று கூறினான் .
அப்பொழுது பெருந்தச்சரை சந்திக்க சதா சிவாச்சாரி வந்திருந்தார் .இருவரும் ஒன்று சேர்ந்து பேசினார்கள் உடைத்த பாறைகளைக் கொண்டுவந்து கோபுரமாக அடுக்குவது ,பல யோசனைகள் பற்றி பேசினார்கள்.அப்பொழுது சதா சிவாச்சாரியார் கோபுரத்தை சுற்றிலும் மண் மேடை அமைத்து அதில் சவுக்குக் கட்டைகளை அடுக்கி அதன்மீது பாறைகளை நகர்த்த வேண்டும் என்று கூறினார். அதைக்கேட்ட பெருந்தச்சன் மழையில் கரையாத என பல கேள்விகளை கேட்டார் . கடைசியாக நான் முதலில் ஒரு மாதிரி உருவாக்குகிறேன். உங்களுடைய யோசனை மிக நல்ல யோசனை என்று அவரை பாராட்டிவிட்டு பெருந்தச்சன் அங்கேயிருந்து பிரிந்தார்கள்.
குணவன் அவனுடைய கூட்டாளியும் ஒரு பெரிய கூடம் அமைத்து அதிலே முதலில் மாதிரிகளை நாம் செய்ய வேண்டும் பின்பு தான் நமக்கு ஒரு தெளிவு வரும் என்றனர்.இப்படியாக அவர்கள் பிரம்மராயர் சந்திக்க சென்றார்கள். பிரம்மராயர் அவருடைய சொந்த ஊரான அம்மன்குடியில், இஷ்ட தெய்வம் காளிக்கு ஹோமம் நடத்தி கொண்டிருந்தார். அங்கு பல அந்தணர்கள் அந்த ஹோமத்தில் கலந்து கொண்டார்கள். ஆளாளுக்கு ஒரு கருத்துக்களை பேசிக்கொண்டு இருந்தார்கள். அதில் சிலர் நாம் ஏன் அரசரிடம் சென்று கோயில் கட்டுவதற்காக ஹோமம் வளர்க்கிறோம் என்று சொல்லக்கூடாது, யோசனை கூறினார் .அதற்கு மற்றவர்கள் ஏன் சும்மா இல்லாமல் பிரச்சனையை விலை கொடுத்து வாங்க .என்று அவருடைய கருத்துக்களை தெரிவித்தனர்.
குணவன் ஹோமம் முடிந்தவுடன் பிரம்மராயர் இடம் தங்களுடைய கருத்துக்களை கூறினார்கள். பிரம்மராயர் உடனடியாக ஆயிரம் பொற்காசுகளை செலவிற்காக கொடுத்தார் .அப்பொழுது அங்கே அவருடைய சீடரான சட்டநாதன் ,எனக்கு சிற்பக்கலையில் ஆர்வமாக இருக்கிறது உங்களிடம் வந்து கற்றுக்கொள்கிறேன்,என்று வந்து சேருகிறான் . சட்டநாதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் .ஆனால் பிரம்மராயர் ஒற்றன்அவன்.
பிரம்மராயரருக்கு பழைய நினைப்பு வந்துவிட்டது முதன்முதலாக மன்னரை இங்கேதான் சந்தித்தோம் .பல வருடங்களுக்கு முன்பு உத்தம சோழன் ஆட்சியில் , நான் மக்களை சென்று திரட்டப்போகிறேன் .நீங்களும் இங்கே உங்களால் ஆனவற்றை செய்யுங்கள். அவரின் உத்தரவின்பேரில் பல பயணங்களை மேற்கொண்டார், நமக்கு இன்று உறுதுணையாக இருக்கிறது என்று பிரம்மராயர் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தார்.
பிரம்மராயரை சந்திக்க மன்னரின் மகள் சந்திரமல்லிவந்திருந்தாள்.தூக்கிவாரிப்போட்டது எழுந்து வந்தார் பிரம்மராயர், வணங்கிக் கொண்டனர் இருவரும்.அவரைக் கண்டு பிரம்மராயர் என்ன செய்வது அறியாமல் திடுக்கிட்டார் .இனி நான் புத்தபிட்சு அல்ல அந்த வேஷத்தைக் கலைத்து விட்டேன் .நிரந்தரமாய் இங்கே தங்குவதற்காக வந்துவிட்டேன் .என்னுடைய தந்தை நோகடித்து விட்டேன். அதை சரி செய்ய அவருக்கு உதவி செய்ய வந்தேன். நான் புத்தமடத்தில் இருக்கும் போது பல வித்தைகளை கற்றுக் கொண்டேன். அதில் எனக்கு பல விஷயங்கள் கனவாக வரும். அதில் நான் கண்ட கனவுகள் இந்த கோவில் கட்டுவது பற்றி வந்தது.என் தந்தைக்கு ஆதரவாக இருக்க நான் இங்கே வந்துள்ளேன். அதற்கு பிரம்மராயர் வருத்தத்துடன் எண்ணமா நடந்தது .என்னை ஏமாற்றி விட்டார்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்பதை சொல்லுவதை விட நான் ஏமாந்து விட்டேன் .என்னுடைய காதல் கதை தான் உங்களுக்கு தெரியுமே.
காந்தளூர்ச்சாலை படையெடுப்பின் ,கீழச்சாளுக்கியத்தின் உறவை பெற முதல் மகளை மன்னர் விமலாதித்தருக்கு மணம் செய்து கொடுத்தார் .ராஜேந்திரனுக்கு இளவரசன் பட்டம் சூட்டினார். இரண்டாவது மகள் தொண்டை நாட்டைச் சேர்ந்தவரை காதலித்தாள். அவன் பெயர் சுகவனன் அவன் தொண்டை நாட்டை சேர்ந்த இளவரசன் கலைகளில் வல்லவன்.
ராஜராஜசோழன் கங்கபாடி நாட்டிற்கு படையெடுத்த சென்றபோது .இங்கே இவர்களுக்கு காதல் உண்டானது .ராஜேந்திரனுக்கும் அவனுக்கும் சுத்தமாக ஒத்துப்போகவில்லை .ராஜேந்திரன் ஒரு வீரன் ,சுகவனன் ஒரு கலைஞன் .சந்திர மல்லி பக்தி மிகுந்தவள்.
ராஜேந்திரனுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் சந்திர மல்லி நேரடியாக ராஜேந்திரனை எதிர்த்தாள் .இந்த பிரச்சனை அரசவை வரை சென்றது .இராஜேந்திரனை எதிர்த்து சுகவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாள் .என்னை விட்டு விடுங்கள் நான் என் தேசத்தை நோக்கி சென்று விடுகிறேன் என்று கெஞ்சிப் பார்த்தான் சுகவனன்.ஆனால் அவள் விடுவதாக இல்லை. ராஜேந்திரனும் நீ ஓடிப் போக நினைத்தாலும் உன்னை சந்திரமல்லி விடமாட்டாள் என்று கூறினார் .அவள் மீதுள்ள அன்பில் அவனுக்கு வீரப்பயிற்சி கொடுக்கும்படி இளவரசருக்கு உத்தரவிட்டார் மன்னர். யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக சந்திர மல்லி என்னை மணப்பதற்கு நீங்கள் வீரராக இருக்க அவசியமில்லை நல்ல கலைஞனாக இருந்தாலே போதும் என்று ஓலை அனுப்பியிருந்தாள் .இதைக்கண்ட ராஜேந்திரன் இன்னமும் கோபம் கொண்டான்.சுகவனன் ஓடிவிட்டான்.
சொந்த நாட்டிற்கு சென்ற போது அங்கே வழியில் மூன்று பேர் அவரை கொலை செய்து விட்டனர். இதைக் கேட்ட இராஜேந்திரன் மிகவும் வருத்தப்பட்டான்.எனக்கும் அவன் மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சந்திரமல்லி சும்மா இல்லை நீ தான் அனைத்திற்கும் காரணம் என்று ராஜேந்திரனிடம் சண்டை போட்டாள்.அதோடு மட்டுமில்லாமல் விதவை கோலம் பூண்டாள் .நீங்கள் அனைவரும் என்னுடைய வாழ்க்கையை கேடுத்து விட்டீர்கள் .என்று ஒரு அறையிலேயே பித்துபிடித்தவள் போல் இருந்தாள்.கடைசியாக விசாரித்த போது தான் தெரிந்தது. அங்கே கடற்கொள்ளையர்கள் இருந்ததாகவும் அவர்கள் ஈழத்தில் இருந்து வந்ததாகவும் தெரிந்தது. மன்னரிடம் இளவரசன் வருத்தப்பட்டார் நீங்களுமா என்னை நம்பவில்லை .தந்தையே நான் எப்படி இப்பேர்பட்ட காரியத்தில் ஈடுபடுவேன் .அவன் மீது எனக்கு கோபம் இருந்தது .ஆனால் கொலை செய்யும் அளவிற்கு நான் துரோகி அல்ல என்று கூறினான்.
மகள் இப்படி இருப்பதை எண்ணி தந்தை வருத்தப்பட்டார் .அப்பொழுது அங்கு சில புத்தபிட்சுகள் வந்து அவளுக்கு மருத்துவம் கொடுத்தனர் .அவர்களுடைய பேச்சிலேயே அவள் ஆழ்ந்திருந்தாள் .பழைய நிலைக்கு திரும்பினாள் அதை கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.இந்நிலையில் அரசர் இல்லாத போது இவள் பஞ்சவன்மாதேவியிடம் சொல்லிவிட்டு நாகபட்டினத்துக்கு சென்றாள் .அங்கே புத்த மத மாற்றம் அடைந்தாள். இதைக்கண்ட மன்னர் கோபம்கொண்டு நாகப்பட்டினத்திற்கு சென்றார். அங்கோ சந்திரமல்லி எனக்கும் உங்களுக்கும் இனிமேல் சம்பந்தம் இல்லை. நான் ஒரு புத்தபிட்சு என்று கூறி தந்தையைப் புறக்கணித்து விட்டாள். இதனால் கோபம் கொண்ட மன்னர் அங்கேயே சுற்றிலும் பாதுகாப்பு போட்டு ,அவர்களை அடக்கும் படி சேனாதிபதிக்கு உத்தரவிட்டார்.
அவளை எண்ணி மிகவும் துவண்டு போனார். என் தாயாக நினைத்தேன் .என்னை இப்படி விட்டு சென்று விட்டாளே.என்று மிகவும் வருத்தப்பட்டார்.
பிரம்மராயர் எங்கே தங்குவதாக உத்தேசம் என்று கேட்டார் .என் தந்தை ஏற்பது பற்றி எனக்கு கவலை இல்லை .நான் அவருக்கு அருகில் இருக்க விரும்புகிறேன். கனவுகள் அவர் சம்பந்தமாக எனக்கு வந்தன .நான் மதம் கடந்து நிற்கிறேன் .வெறும் சந்திர மல்லி எனக்கு கோயில் கட்டும் இடத்திற்கு அருகே வடமேற்கில் ஆற்றங்கரை அருகில் ஒரு குடிசை அமைத்துக் கொடுத்தால் மட்டும் போதும் .திடீரென்ற மாற்றம் ஏன் என்று கேட்டார் பிரம்மராயர், அது ஒரு கதை ராஜராஜசோழனின் பிள்ளைகளை தூண்டி விட்டு ,பின் மூளைச்சலவை செய்து அவருடைய மக்களைப் பிரிக்க எண்ணிய ஏமாந்த குள்ளநரிக்கூட்டம் கதை.
புத்தபிட்சு மரணப்படுக்கையில் என்னிடம் கூறினார் . சிங்களர்கள் ,பாண்டியர்கள் தூண்டுதலாலும் ,சேர வழிகாட்டலில் சோழ பௌத்த மதத்தினர் செய்த திட்டம். என்னை பலி கொண்டு விட்டது. யார் செய்த புண்ணியமோ அதோடு நின்றுவிட்டது .அவர்கள் எண்ணிய திட்டம் பலிக்கவில்லை. கீழை மற்றும் மேலை சாளுக்கிய சேர்த்து சோழத்தை வீழ்த்த அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் .
பாவம் சுகவனன் ,இழுத்துவிட்டு அவனுடைய மரணத்திற்கு நானும் ஒரு காரணம். அது ஒன்றை மட்டும் வேண்டிக்கொள்கிறேன். அவன் இறந்த இடத்தில் ஒரு விளக்கு ஏற்றும்படி உத்தரவிடுங்கள் .அனைவரையும் கண்டு நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
ஏன் கோவில் கட்டும் இடத்திலேதான் இருக்க வேண்டுமா நாங்கள் எல்லாம் இருக்கிறோம் .நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் .எல்லை பாதுகாப்பு மட்டுமில்லை இங்கே சிலவற்றை அடக்கவேண்டும். அது இங்கே சுற்றிக்கொண்டிருக்கிறது அதைப்பற்றிய வித்தை தெரியும். கருவூர்தேவர் இருக்கிறாரே,அவர் நிலையாக இருப்பதில்லை. நான் அங்கே நிலையாக இருந்து அதை கட்டுக்குள் கொண்டு வரப் போகிறேன், என்று கூறிவிட்டு அங்கிருந்து விடை பெற்றாள்.
பெரிய குழப்பத்தில் இருந்தார் பிரம்மராயர் அவள் கூறியதை அவர் நம்பவில்லை.
மன்னர் அழைத்தார் ராஜேந்திரன், வந்திய தேவர் மற்றும் பாண்டிய வீரன் குணசீலனை ,நார்த்தாமலையில் சென்று பார்வையிட விரும்புகிறேன்.
பஞ்சவன்மாதேவி மூலம் சந்திரமல்லி வந்திருக்கும் செய்தி மன்னருக்கும் வந்து சேருகிறது. அதை கேட்ட மன்னர் சிறிதுநேரம் நிலைகுலைந்து ,இதை விட பல முக்கியமான செய்திகள் இங்கே இருக்கிறது. அவளை சேனாதிபதி பார்த்துக்கொள்வார் என்று கூறி தந்தையும் மகனும் நார்த்தமலை செல்லப்புறபட்டார்கள்.
செய்தி ஊர் முழுவதும் பரவியது .அரண்மனையில் இருப்பவர்களும் சந்திர மல்லியை பார்க்க ஆசைப்பட்டார்கள்.
நார்த்தாமலையில் மன்னர் அனைவரையும் விசாரித்தார் உபசரிப்பு இங்கே எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு கைதிகள் அதற்கெல்லாம் ஒன்றும் குறை இல்லை. ஆனால் இங்கிருந்து பாறைகளை எடுத்து செல்ல மூன்று நாட்கள் ஆகும் என்று நினைக்கிறோம் என்று வருத்தப்பட்டார்கள். அதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என்று அரசர் கூறினார் .மக்களும் எங்களுக்கு உணவு உபசரிப்பு இல்லாமல் வேறு ஏதும் வேலை இருக்கிறதா? என்று கேட்டார்கள் .உங்களுக்கு அதை தவிர வேற பொறுப்பும் இல்லை அதை நீங்கள் செய்தாலே போதும் என்று கூறினார்.
குணசீலனும் ஒவ்வொரு பாறையாக ஏறி சென்று குணங்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான். பாறைக் கற்கள் கோபுரம் கட்ட உதவும் ஆனால் சிற்பங்கள் செதுக்க இது உதவாது என்று கூறினான் .அப்பொழுது அங்கே கணக்கு பிரச்சனை சதா சிவாச்சாரியார் வைத்தார் .
ஆளாளுக்கு ஒரு கருத்துக்களை பேசிக்கொண்டிருக்கும்போது ராஜேந்திரன் அந்தணர்கள் அந்த பொறுப்பை பார்க்கக் கூடாதா ?என்று கோபமாக கூறுகிறான் .அதற்கு சதாசிவா சாரி எனக்கு அந்தணர்கள் வேண்டாம் என் கட்டுக்குள் இருப்பவர்கள்தான் வேண்டும் என்று கூறினார்.
ராஜேந்திரன் நீ சொல்வது போல் கூறினால் உள்ளூர் குழப்பம் ஏற்படும் என்று கூறினார். வந்தியத்தேவனும் அவருடைய கருத்துகளை கூறினார் .அடித்து அவர்களை வேலை வாங்க வேண்டும் என்று சொன்னான் இளவரசன்.அரசர் எப்பொழுதும் போர்முனை வெறியுடன் இருக்காதே. மூர்க்கம் மிகப் பெரிய பலவீனம் ,காட்டுக் கூச்சல் போடாதே !!
எத்தனை முறை சொன்னாலும் உனக்கு ஏன் புரியவே மாட்டேங்குது.விஷயத்தை உன் வாங்கிக்கொள்ள பழகிக்கொள் .எதற்கெடுத்தாலும் ஆத்திரம் அடைந்தால் எப்படி மன்னனாக இருக்கப் போகிறாய்
அந்தணர்கள் எப்போது நல்ல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள் .இது தவறு இது மிகப்பெரிய தவறு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வெறுப்பது
.கவனமாக இரு ராஜேந்திரா ஒவ்வொரு செயல்களையும் நன்கு யோசித்து செயல்படு .சந்திரமல்லி புத்த மதம் மாறியதால் நான் புத்த மதத்தை வேரோடு அறுக்கவில்லை .சட்டங்களை விதித்து அதை அடக்கி வைத்தேன். எதிரிகளை நண்பர்களாக மாற்றலாம் .நண்பனை எதிரி ஆகாதே அது உன்னுடைய நிம்மதி கெடுக்கும்.
எனக்கு பிரச்சனை என்று கேள் அவர்கள் தானாக வருவார்கள் .அப்பொழுது அவர்களை எப்படி அடக்கி ஆள்வது என்று யோசி .இதைக் கேட்டு ராஜேந்திரன் தந்தையை வணங்கினான். வந்திய தேவர் மன்னரை எண்ணி பெருமை பட்டார்.
அந்தணர்கள் புலம்பல் எவ்வளவு நாள் இவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். மனதில் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் வேதம் மறந்து ஆடல் , பாடல் கூத்து நோக்கி செல்கிறார்கள். இந்த அந்தண இளைஞர்கள். தேவையில்லாத வீண் வம்புக்கு தான் செல்கிறார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார் .
அங்கிருந்தவர்கள் கருமார்கள் கேட்பது நியாயமா அவர்கள் கோரிக்கைகளுக்கு நாம் இடம் கொடுத்து விட்டால் .நம்மை யார் மதிப்பது என கேட்டார்கள். அவர்கள் அவர்களுடைய உரிமைகளை கூறுகிறார்கள் .நாம் வேதம் படிப்பது தான் நம்முடைய தொழில் அதை விட்டுவிட்டு ஏன் அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம் .அதில் என்ன தவறு என்று அவர் கூறினார் .அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒருபுறம் தொண்டைநாடு, நடுநாட்டிலிருந்து 500 அந்தணர்கள் குடந்தைக்கு வந்தனர் .ஈசான சிவபண்டிதர் ஆசிர்வாதத்துடன் அவர்கள் பார்ப்பதற்கு கருப்பாகவும் குள்ளமாகவும் இருந்தனர் .ஆனால் வேதத்தில் மிகவும் தெளிவாக இருந்தனர் .அவர்களைப் பார்த்து மற்றவர்கள் வியந்தனர் .தஞ்சை அந்தணர்கள் அவர்களை வரவேற்றனர் ,மட்டுமல்லாமல் தஞ்சையை சேர்ந்தவர்கள் கர்வமும் கொண்டனர்.
நார்த்தாமலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு மன்னர் வண்டியில் புறப்பாடு செய்ய வேலை நடந்தது .ஆனால் குணசீலன் இந்த வண்டி சரியாக இல்லை .இதனோடு அச்சாணியில் பிரச்சனை இருக்கிறது என்று அதை விரிவாகக் கூறி எடுத்துக்கூறி நல்ல யோசனை கூறினான் .அதைக் கண்ட அரசர் மெய்சிலிர்த்தார் .
அங்கிருந்த ஊர்மக்கள் அனைவரும் அருகில் வந்து மன்னரை நலம் விசாரித்தனர்.
இதைக்கேட்ட பஞ்சவன்மாதேவி மன்னர் சரியான பாதுகாப்பில்லாமல் எல்லோருடன் இப்படி பழகுவது பிரச்சனையில் போய் முடியும். எங்கே யார் இருப்பார்கள் என்று தெரியாது. காவல்படையினர் இடம் கடுமையாக நடந்து கொண்டார்.அதுமட்டுமில்லாமல் பிரம்மராயர் மகனுக்கும் ஓலை சென்றது .அவர்களும் கலந்தாலோசித்து கொண்டிருந்தார்கள்.
நன்றி.
மீண்டும் மூன்றாம் பாகத்தில் சந்திப்போம்..
Click here for Udayar audio book part 3:3👇


Hi,Vidhya,arumai
ReplyDeleteThank you amma😊
ReplyDelete