சீடர் : விஷம்?
ரூமி : நம் தேவைக்கு அதிகமாக இருப்பது எதுவோ அதுதான் விஷம். அது அதிகாரமாக, செல்வமாக இருக்கலாம் அல்லது அன்பு,வெறுப்பு ,பசியாக கூட இருக்கலாம் .
சீடர் :பயம் ?
ரூமி : நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது பயம். நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளும்போது அது சாகசம் ஆகிவிடும்
சீடர் : பொறாமை ?
ரூமி : மற்றவர்களிடம் இருக்கும் நல்லவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே பொறாமை. அப்படி ஏற்றுக்கொள்ளும் போது அவர் உனக்கு உத்வேகத்தை தரக்கூடியவராக மாறிவிடுகிறார்
சீடர் : கோபம் ?
ரூமி : நம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது கோபம். அப்படி ஏற்றுக்கொள்ளும்போது அது சகிப்புத்தன்மை ஆகிவிடுகிறது
சீடர் : வெறுப்பு ?
ரூமி: இன்னொரு மனிதனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பது வெறுப்பு. நிபந்தனைகள் இன்றி ஏற்றுக்கொள்ளும்போது அது அன்பாகிவிடுகிறது.
மூதாதை ரூமியின் பிறந்த தினம் இன்று.

No comments:
Post a Comment