Wednesday, September 30, 2020

படித்ததில் பிடித்தது by Akhiladevi Kumaran

 


சீடர் : விஷம்?


ரூமி : நம் தேவைக்கு அதிகமாக இருப்பது எதுவோ அதுதான் விஷம். அது அதிகாரமாக, செல்வமாக இருக்கலாம் அல்லது அன்பு,வெறுப்பு ,பசியாக கூட இருக்கலாம் .


சீடர் :பயம் ?


ரூமி : நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது பயம். நிச்சயமின்மையை ஏற்றுக்கொள்ளும்போது அது சாகசம் ஆகிவிடும் 


சீடர் : பொறாமை ?


ரூமி : மற்றவர்களிடம் இருக்கும் நல்லவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே பொறாமை. அப்படி ஏற்றுக்கொள்ளும் போது அவர் உனக்கு உத்வேகத்தை தரக்கூடியவராக மாறிவிடுகிறார் 


சீடர் : கோபம் ?


ரூமி : நம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது கோபம். அப்படி ஏற்றுக்கொள்ளும்போது அது சகிப்புத்தன்மை ஆகிவிடுகிறது 


சீடர் : வெறுப்பு ?


ரூமி: இன்னொரு மனிதனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பது வெறுப்பு. நிபந்தனைகள் இன்றி ஏற்றுக்கொள்ளும்போது அது அன்பாகிவிடுகிறது.


மூதாதை ரூமியின் பிறந்த தினம் இன்று.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...