மனிதனை மனிதன் அந்நியப்படுத்திய அலைபேசி தன்னை தானே விலங்கிட்டு கொண்டது, தன் மீதான மனிதர்களின் பயன்பாட்டை ஜீரணிக்க முடியாமல்
காசு கொடுத்தால் மட்டுமே கிடைப்பான்
இந்த தோழன்
அன்பினால் விலங்கிட மாட்டான்
சில நேரம் இவன் தொல்லையால் நாமே
விலங்கிடுவோம் இவனை
ஒன்று இவனை முழுவதுமாக அணைத்து
இல்லை தற்காலிகமாக துண்டித்து
நாம் இடும் விலங்கில் அவன் இருந்தாலும்
விலங்கினை விடுவிப்பவரும் நாமே
விலங்கினை உடைத்து கொண்டு வெளி வரும் விலங்கும் இவனே
இவன் சொல்வது மட்டுமே நமக்கு விளங்கும்
அழகாய் நேரில் விளக்கும் மனிதரை புறம் தள்ளி இவனிடம் சிக்கிக் கொண்ட மனித விலங்கும் நாமோ?
அவன் விலங்கை விலக்கி விடாமல் நமக்கான பாடத்தை
நம்மவரிடமே விளங்கிக் கொள்வோம்
மனதை பூட்டி வைக்க இயலாததால் அலைபேசி தோழனானது
அலைபேசியை பூட்ட இயன்றதால் மனம் திறந்தது

Wow True Words ma 👌👌👌
ReplyDeleteThank you Krithika
Delete