பொத்தி பொத்தி வளர்க்கிறோம்
அடைக்காப்பதில்லை ஆனால் சரியான
அடைக்கலமும் கொடுப்பதில்லை!
கரு கணித்த நேரத்திலிருந்து பிறக்கும்
வரை இருந்த பொறுமை வளர்ந்த பின்
எங்கே போனது!
மனிதனை தவிர எந்த ஜீவராசியும் அதன்
குழந்தைகளை வளர்ப்பதில்லை !
கெடுப்பதில்லை, பிறந்த மறுகணமே
சுதந்திரமாக,தன்னிச்சையாக
வளர,போராட ஆரம்பிக்க !
ஏன் இவர்கள் மட்டும் இப்படி!
ஒன்று அதிகபடியான அக்கறை
இல்லையேல்
நடுரோட்டில் ...
இணைந்த கைகள் இணைந்தே
இருக்க நாங்களும் ஓர் காரணம்!
அதை ஏன் மறந்து எங்களையும்
மறுக்கிறீர்கள்!

உண்மை
ReplyDelete