"Hey, flower! Thanks for the sweet nectar, but next time, can you make it sugar-free? 😬
- Divya
Flower’s reply: nature gives sugar in right proportions- don’t worry dear🥰
-Akhiladevi
தொப்புள் கொடி பந்தமா?
தோட்டத்தில் பிறந்த சொந்தமா?
ஒருவரை ஒருவர் ஈர்க்கும் காந்தமா?
மலர் கொண்ட அழகின் பாந்தமா?
தேனீ ரீங்காரத்தில் இசைத்த சந்தமா?
தேனை உறிஞ்சுவதில் சாந்தமா?
உண்ட பின் கொண்ட மாந்தமா?
காண்போருக்கு இல்லை காட்சி மந்தமாய்?
காதலின் தேசமாய் திகழும் தோட்டமும்
அதில் பூக்கும் பூக்களும்
நாடி வரும் தேனீக்களும் அழகு
காலத்தின் தேடல் ராட்டினமில்லாமல்
Calling all busy busy bees 🐝🐝
Luscious Lavender offers!🥳
Hurry up… few more drops left 😎
Last few sips… taste like heaven .. Come try it and feel the magic 🪄✨
என்னே சுவை… என்னே மணம்!!
-கிறக்கத்தில் தேனீ🐝
என்னே அழகு.. என்னே பொறுமை!!
-மயக்கத்தில் மலர் 🌸
வந்தாள்… வென்றாள்
- இந்த குட்டித் தேனீ🐝
மலர்ந்தாள்… மயங்கினாள்
- அந்த மன்மதன் அம்பில் ராணி 🌺
-Akhiladevi
அடிக்கிற வெயில்ல தேன் கூட உப்புக்கரிக்குது.
அற்புதமான காட்சி அந்தரத்தில் தேன் பருக உடலின் எடையை தாங்கி காற்றில் மிதக்க மகரந்தத்தில் தேன் அருந்த இரு கைகள் பற்ற சிறுபிள்ளை போல் தேனீ
-Vidhya Nivash
உறிஞ்சி தான் பார்க்கிறேன் தேன் வரவில்லை,
மொட்டில் உள்ள போதே ஊசி கொண்டு உறிஞ்சி விட்டானே மனிதன் என்ற நினைப்பில் இருந்த தேனீ
முயற்சியை கைவிட்டபாடில்லை
"யார் அது? புதியவன்? "
- இது தோட்டத்தில் உள்ள பூ
"நான் தான் தேனீ" என்றது தேனீ
" இல்லை! இல்லை! நீ தேனீ இல்லை! இத்தனை காலமாய் என்னில் உள்ள தேனை உறிஞ்சும் அவன் மென்மையை நானறிவேன்" என்றது பூ
தேனீ எழுப்பும் சத்தத்தை போலவே அந்த பூச்சி எழுப்ப,
" தேனீயின் சப்தம் எனக்கு தெரியாதா? நீ யார்?" என கொஞ்சம் கடுமையாக கேட்ட பூவிற்கு மௌனம் பதிலாய் வந்தது .
மீண்டும் அந்த பூ, பூச்சி தன்னை நெருங்க கூடாது என்று நினைத்து தன் இதழ்களை மூடி கொள்ள, மிரண்டு செய்வதறியாது விழித்த பூச்சி தன் எஜமானனின் ஆணைக்காக காத்திருக்க, அதேவேளையில் எஜமானன், தேன் உறிஞ்சாத பூச்சியிடம் வர, பூவிதழ் மூடிய விசயம் அறிந்து பூவை விரித்து காட்டும் படி சொல்ல, பூ மறுத்து, தன்னை நுகர்வது யார் என கேட்க, வேறு வழியில்லாமல் மனித எஜமானன் உண்மையை சொன்னான்.
தேனீக்களை வளர்க்க தெரியாமல் , தேனீ போல ஓர் இயந்திர மனிதனை தயாரித்து தேன் உறிஞ்சும் வேலைக்கு அனுப்பியதாகவும் அதன் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டதால் தானே பார்க்க வந்ததாகவும் சொல்ல, அவன் பேச்சை கேட்டு மலைத்தது பூவும்.
அன்றிலிருந்து உண்மையான தேனீக்கு மட்டுமே தேனை உறிஞ்சும் அனுமதி என்றும் தேன் உறிஞ்சும் போது அழுத்தம் அதிகரித்தால் உடனே தங்கள் இதழ்களை இறுக்கமாக மூடி கொள்ள வேண்டும் என்று அந்த பூவும் தன் தோட்டப்பூக்களை பணித்தது
அறிவியலின் விந்தையும் விந்தையாகிப் போனது இயற்கையின் முன்
-Veena Shankar
உன்னை..
ரசிக்க வந்தேன் ...
உன் அழகில் கிறங்கி போனேன்...!...
உன் இதழ் விரித்து...
நீ படைத்த தேன் விருந்தில் ..
என்னையே நான்
மறந்தேன் ..!..
திகட்ட திகட்ட
உன் தேன்
ருசித்ததில்...
திணறிப் போய்..
உன் மேல் கொண்டேன்
நேசமும் !..
கலங்காதே ..!..
என்றாவது ஒரு நாள்
உனது தேன்..
தீர்ந்து போனாலும்..
உன்னிடத்தில்
வந்து தான் நிற்பேன்..
உன் இதழ் வருட..
உன் இதயம் இனிக்க...!...
நம் காதல் -
என்றும் ..
மறுக்காதே ...
மறக்காதே ...!...
💜💜💜
- Kiruthika

Wow...மலரும் ,மகரந்த தேன் ருசிக்க வந்த தேனீயும் கூட மயங்கி தான் போகும் தங்கள் கற்பனை கவி படிக்க நேர்ந்தால் ...😍அழகு ... கொள்ளை அழகு ...👌
ReplyDeleteநன்றி, உண்மை கிருத்திகா
Delete