Tuesday, August 6, 2024

அவள் by Kiruthika

 


அவள்..

ஒரு அழகு பெட்டகம்..

புறத்தால் மட்டும் அல்ல...

அகத்தாலும் கூட தான்..!...


அவன் -

அவளை புரிந்து கொள்ள ..

பொறுமை காத்தாள் ...!


அவன் -

கோபத்தை ..

அவள் அமைதியால்..

தாங்கி கொண்டாள்..!..


அவன் -

பசி எனும்போது மட்டும்..

தானும் உண்டாள் !...


அவன் -

கனவையும் 

சேர்த்து ..

அவள் கண்டாள்..!...


எல்லாம் செய்தும்..

அவனுள்..

அவளை-

கண்ட அவளை!...

ஏனோ -

அவன் கண்டு 

கொள்ள வில்லை ...!..

இதில் என்ன இருக்கு -

என்பது போல் !...


அவள் எழுதி முடித்தால்..

தலைப்பை இப்படி -

"கல்யாணம் ஜெயித்தது ..

காதல் தோற்றது" !..

என்று !!!!...

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...