அவள்..
ஒரு அழகு பெட்டகம்..
புறத்தால் மட்டும் அல்ல...
அகத்தாலும் கூட தான்..!...
அவன் -
அவளை புரிந்து கொள்ள ..
பொறுமை காத்தாள் ...!
அவன் -
கோபத்தை ..
அவள் அமைதியால்..
தாங்கி கொண்டாள்..!..
அவன் -
பசி எனும்போது மட்டும்..
தானும் உண்டாள் !...
அவன் -
கனவையும்
சேர்த்து ..
அவள் கண்டாள்..!...
எல்லாம் செய்தும்..
அவனுள்..
அவளை-
கண்ட அவளை!...
ஏனோ -
அவன் கண்டு
கொள்ள வில்லை ...!..
இதில் என்ன இருக்கு -
என்பது போல் !...
அவள் எழுதி முடித்தால்..
தலைப்பை இப்படி -
"கல்யாணம் ஜெயித்தது ..
காதல் தோற்றது" !..
என்று !!!!...

No comments:
Post a Comment