Saturday, August 31, 2024

தாக்கம் ஏக்கம் by Vidhya Nivash



 சமீபத்தில் படித்த, பார்த்ததில் தாக்கம்.இங்கே கேள்விகளாக..

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் என்ற புத்தகம்.அதில் பல குரல்கள் பேசின.இந்த தலைப்பில் எத்தனை அர்த்தங்கள். 

அதில் இரும்பின் சிரிப்பு என்ற சிறுகதை.தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணின் பயம் எப்பேர்ப்பட்டது.சில பயத்திருந்து காத்துக்கொள்ள ,ரோமானிய இளவரசிகள் அணிந்த இரும்பு காப்பை வாங்கி அணிகிறாள். இது அடிமை தனத்தின் உச்சக்கட்டம் என ,அதிலிருந்து விடுபடுகிறாள். சிலநேரம் தனிமை எவ்வளவு கோழையாக்குகிறது. 

சமீபத்தில் பார்த்த படங்கள் அடிமை தனத்தை விடுத்து படித்து ,பறக்க துடிக்க சொல்லுகிறது. அப்படியும் போராடி வரும் பிஞ்சுகள் ஏன் நசுக்கப்படுகிறது. பெண் கொடுமைகள் மேலோங்கும் அவலம்.படித்தும் மங்கும் மனித நேயம்.

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...