Saturday, August 17, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 உன் விழியை நான் கண்டால் மிரண்டு விடுவேன் என்று நினைத்தாயோ?

விழியே இல்லையென்றாலும் உனக்கு விழியாய் நானிருப்பென்

 எவர் விழி எவரோ?

எதன் மையம் எதுவோ?

அகண்டது மனது

சுருங்கியது தேகம்

தேய்ந்தது பார்வை

பூவையின் விழியில்

என் பார்வை 

காண்பதும் அறிவோ?

நானும் நானல்ல 

விழியை மறைத்ததால்

மூடியவை திறந்து

என் முன் காட்டு

விழியும் விழியும் கொள்ளை கொள்ளட்டும்

அவள் கண்ணை அவள் பூட்டிக் கொண்டாலும் கண்ணாடி எனும் மந்திரச் சாவி அவளிடம் கண்டேன், என் மனதை சிரமமில்லாமல் அவள் அறிந்து கொண்டு பிரதிபலித்ததாலே!

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...