நிலவின் வெளிச்சத்தைக் கூட நித்திரை
கொள்ளச் செய்யும் விழிகள் நான்கு
கடல் அலையின் சப்தத்தை கூட மிகைப்படுத்தி காட்ட
நா உறவாட நினைக்கும் வேளையில் வார்த்தைகள் மறந்து
பிரிந்த உள்ளங்கள் இணைந்து
அக்னிசாட்சியாய் கட்டிய மஞ்சள் கயிறு
இன்று நிலவின் சாட்சியால் மெய்கள் உறவாட கொண்டதே கோலம்
கண்டு கேட்டது கூட மறந்து போக
கிடைத்தது புதிய முகம் இருவருக்கும்
அதனின்று விடையாய் கிடைக்கப்போவதும் ஓர் புதிய முகமே!
இடைவெளி சிறிது என்றாலும் மனதால் இடைவெளி வாராது காக்கவே காதல் தேவை எல்லா உயிர்களிடத்தும்
கோடு போன்ற விரிசல் கோடிடிட்டு காட்டும் வகையில் இல்லாமற்
தொடு வானம் போல் இருப்பது சிறப்பு

No comments:
Post a Comment