Thursday, August 8, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


நிலவின் வெளிச்சத்தைக் கூட நித்திரை  

கொள்ளச் செய்யும் விழிகள் நான்கு


கடல் அலையின் சப்தத்தை கூட மிகைப்படுத்தி காட்ட


நா உறவாட நினைக்கும் வேளையில் வார்த்தைகள் மறந்து


பிரிந்த உள்ளங்கள் இணைந்து


அக்னிசாட்சியாய் கட்டிய மஞ்சள் கயிறு 

 

இன்று நிலவின் சாட்சியால் மெய்கள் உறவாட கொண்டதே கோலம்


கண்டு கேட்டது கூட மறந்து போக

 

கிடைத்தது புதிய முகம் இருவருக்கும்


அதனின்று விடையாய் கிடைக்கப்போவதும் ஓர் புதிய முகமே!


இடைவெளி சிறிது என்றாலும் மனதால் இடைவெளி வாராது காக்கவே காதல் தேவை எல்லா உயிர்களிடத்தும் 

கோடு போன்ற விரிசல் கோடிடிட்டு காட்டும் வகையில் இல்லாமற்

தொடு வானம் போல் இருப்பது சிறப்பு

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...