Friday, August 30, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


எந்த பாரத்தை சுமந்தாலும் வரும் சோகம், அதில் குடும்பம் விலக்கு

தேடி தேடி சேர்க்கும் செல்வங்கள் யாவும் சுமையே! மனமும் உடலும் பலவீனபட்டால்

தன் பாரத்தின் வலியை குடும்பம் உணரக் கூடாது என்று நினைத்தோ ஏனோ தலைவன் பாரத்தை தன் தோள் மேல் சுமந்தான்

இதில் எதை விடுக்க?

எதிலிருந்து விடுபட?

தன் சுய தேவைக்கு ஓர் மனைவி

அவளோடு மகிழ்ந்து வாழ ஓர் வீடு

அவளோடு மகிழ்ந்து வாழ்ந்ததற்கு அங்கீகாரமாய் பிள்ளைகள்

பிள்ளைகளின் எதிர்பார்ப்பிற்கு ஓர் ஊர்தி

இத்தனையும் சுமந்தாலும் பிறக்கிறது வெறுமை

உரியவர்களிடமிருந்து 

கரம் தாங்கியது காணாது என்று

தோளும் உயர்ந்த்து அவன் தன் தோல் சுருங்கும் வரை

உணர்த்தியது பல பாடங்கள்

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

அதுவும் அவனுக்கு பொற்காலமே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...